ரமலான்2026

Iraivanin Dharisanam
10.9K views
14 days ago
எளிதில் காணக் கிடைக்காத அபூர்வ காட்சி😱🙏உங்களுக்கு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்🥰#இறைவனின் தரிசனம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
●-❥💞𝕽♡𝘴𝖍𝖆𝖓💞●-❥
92K views
29 days ago
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கிய செய்தி வெளியாகியிருக்கிறது. தி.மு.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் செல்லுபடித்தன்மையை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த தேர்தல் வழக்குகளில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இன்னும் மூன்று வாரங்களுக்குள் தங்களது விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. அருள் முருகன், இதுகுறித்து மூன்று வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ – கே. வி. விஜய் தாமு, குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ சந்திரன் மற்றும் புதுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சட்டப் போராட்டம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வோடு மட்டும் நின்றுவிடவில்லை. தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-வின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வுகள், தவெக எம்.எல்.ஏ-க்களான ஆவடி ரமேஷ்குமார், போலூர் அபிஷேக் மற்றும் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் பா.ம.க-வின் சிவக்குமார் உள்ளிட்ட பலருக்குத் தங்களது விளக்கத்தை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். அடுத்தடுத்துப் பல முக்கிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வுகளும், நீதிமன்றம் அளிக்கப்போகும் இறுதித் தீர்ப்புகளும் தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய பலத்தை மாற்றி அமைக்குமா என்ற பெரும் விவாதம் கிளம்பியுள்ளது#🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #👌அருமையான ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்