Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤

Nabalur Elumalai
613 views
4 days ago
AI indicator
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! வைகோ வரவேற்பு தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது; சட்டப்பேரவையில் இத்தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றிய முதலமைச்சர், முதன் முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில், மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ எனும் நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, 1970 நவம்பர் 23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும், கடந்த திமுக ஆட்சியில் 2021 டிசம்பர் 12-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், ஒன்றிய பாஜக அரசின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலில் பாடச் செய்தது தமிழ் மக்களுக்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும். தேசிய இனங்களின் மொழி உரிமையைப் பறித்து ஆர்.எஸ்.எஸ் இன் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி இந்துராஷ்டரத்துக்கு அடித்தளம் அமைக்க வந்தே மாதரம் பாடலை திணிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா என்பது தனித்தனி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது. வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 10.08.2026 #mdmk #vaiko #duraivaiko #mdmkitwing #Nabalur D Elumalai Mdmk #vaiko mdmk #mdmk #Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤ #Vaiko#Mdmk#Tiruvalangaduunionmdmk
Nabalur Elumalai
540 views
4 days ago
AI indicator
தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தமிழ்நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டும்! வைகோ அறிக்கை தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர் . இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதி 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூர் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மே 29, 2026 அன்று அளித்த உத்தரவு, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்விடம் குறித்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தேனி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மார்ச் 2025இல், “புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க, அகஸ்தியமலை நிலப்பரப்பு முழுவதும் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (சிஇசி) விரிவான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டது. அந்தக் குழு ஜூலை 2025 மற்றும் ஜனவரி 2026 ஆகிய மாதங்களில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வனப்பகுதி சார்ந்த மலைச் சரிவுகளில் இலவம் பஞ்சு, ஏலக்காய், எலுமிச்சைப்புல், முந்திரி, அவரை மற்றும் பிற மரப்பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம், 1955-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டமும் தீவிரமாக மீறப்பட்டுள்ளது” என சிஇசி அறிக்கை தெரிவித்தது. மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் அடங்கியுள்ள கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக தனது பதிலை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “அப்பகுதியில் ‘மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயல் திட்டம்’ ஒன்று வகுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மே 29, 2026 அன்று வெளியிட்ட உத்தரவில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தெளிவான, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (சிஇசி) அரசு சமர்ப்பிக்க வேண்டும். வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள், வசதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உட்கட்டமைப்புகள் வன நிலத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும் வரை, வனப்பகுதியில் எந்தவொரு புதிய வணிக அல்லது வனம் சாராத திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்த, சிஇசி பரிந்துரைக்கலாம். ஆகஸ்ட் 28, 2026-க்குள் சிஇசி தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 1, 2026 அன்று நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன உரிமைகள் சட்டத்தின்படி (2006), 13 டிசம்பர் 2005-க்கு முன்பாக வனப்பகுதிகளில் குடியிருந்த பழங்குடியினர் அல்லது குறைந்தது மூன்று தலைமுறைகளாக (அதாவது 75 ஆண்டுகளாக) வனப்பகுதிகளிலேயே வாழ்ந்து, வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் சில உரிமைகளைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர். நில உரிமை கோரும் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, உரிமைகளை அங்கீகரிக்கும் நடைமுறைகள் முழுமையாக முடிவடையும் வரை, வனப்பகுதியில் வசிக்கும் எந்தவொரு நபரையும் அவர் வசிக்கும் வன நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 4) உத்தரவாதம் அளிக்கிறது. வனப்பகுதியில் வாழும் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் போன்ற அரசு மேம்பாட்டுப் பணிகளுக்காக வனப்பகுதிகளை (ஒரு திட்டத்திற்கு 1 ஹெக்டேருக்கு மிகாமல்) பயன்படுத்திக்கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 10.08.2026 #mdmk #vaiko #duraivaiko #mdmkitwing #Nabalur D Elumalai Mdmk #vaiko mdmk #Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤ #Vaiko#Mdmk#Tiruvalangaduunionmdmk #mdmk
அரசகுமார்
572 views
5 days ago
நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல்செய்ய உள்ள, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (08.08.2026) மதியம் 3 மணியளவில், கலைவாணர் அரங்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தோழமை கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கலந்துகொண்டேன். மிகக்குறிப்பாக, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவில் உள்ள பாதகங்களை அலசி ஆராய்ந்தோம். அதை நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதித்தோம். எல்லா மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தாலும், குறிப்பாக அதனால் தமிழ்நாட்டிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படவுள்ள பாதகங்களை மிக விரிவாக எடுத்துரைத்து, அதை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திதேன். அத்துடன், சிறுபான்மை மக்கள் முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள, வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினேன். தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசும், தோழமை கட்சிகளும் வலுவாய் எதிர்ப்போம் என்று ஒருமித்த குரலோடு, இரண்டு மணிநேரம் தொடர்ந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது. தமிழ்நாடு மாநில உரிமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தனது தலைமையிலான தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்கும் என்றும், அதற்கான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். அன்புடன், துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 09.08.2026 #DuraiVaiko #mdmk #tvk #cmotamilnadu #delimitation Durai Vaiko Tvk ITwing #தென்காசி #தென்காசி மாவட்டம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #விஜய் #Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤
Nabalur Elumalai
685 views
8 days ago
AI indicator
தவெக அரசின் நிதிநிலை அறிக்கை; சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்! வைகோ பாராட்டு தமிழக வெற்றிக் கழக அரசு, ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, 2026 - 27 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை, இன்று (05.08.2026) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். சமூக நீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளுடன் விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதும், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நம்பிக்கை தருகிறது. தமிழ்நாட்டின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது என்றாலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை 55,775 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தாலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தவெக அரசின் நிதி மேலாண்மையை வெளிப்படுத்துகிறது. பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி உருவாக்கப்படுவது போன்றவை போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது என்ற இலக்கை அடைய உதவும். இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நகரமாக ‘அறிவகம்' AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறை கடத்தி சோதனை ஆய்வகம், AI, குவாண்டம் தொழில்நுட்பம் & ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம் போன்ற புதிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும். தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் “விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்” தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தென் மாவட்டங்கள் முன்னேற வழிவகுக்கும். கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொது நலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவதுடன், அவற்றை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். சூரிய மின் பலகைக்கு ரூ.1 இலட்சம் வரை மானியம் அளித்தல். ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்குதல். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்குதல். மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்' திட்டம். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் மிதிவண்டிகள் வழங்குதல். மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் புதிய சட்டக் கல்லூரி. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு. பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும். அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு' திட்டம். ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும். திருவள்ளுவர் திருநாளன்று ஆண்டுதோறும் ‘காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் உடற்பயிற்சி கூடங்கள், மண்ணின் மகள் திட்டம், வெற்றி தொழில் முனைவோர் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் - 300 கோடி ஒதுக்கீடு. ஆன்றோர் மேம்பாட்டு திட்டம், ஐந்து மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மையங்கள், இவையெல்லாம் தவெக அரசின் புதிய திட்டங்களாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். மாநில அரசின் மொத்த கடன் ரூ.10.98 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை தொடரும் நிலையிலும் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று, வெற்றித் தமிழகம் என்ற இலக்கை அடைவதை உறுதி செய்து இருப்பதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 05.08.2026 #mdmk #vaiko #duraivaiko #mdmkitwing #மதிமுக #🔥மதிமுக ❤🖤❤ #மதிமுக மாநாடு #Nabalur D Elumalai Mdmk #Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤