பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல்

திருநீற்றுச் சுவடு
697 views
2 months ago
#பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #மாட்டு பொங்கல் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #👨‍👩‍👧தை பொங்கள் வாழ்த்துக்கள் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?* ‘பொங்கல்’ என்பது உழவர்களை சிறப்பிப்பதற்காக கொண்டாடாப்படும் பழமையான பண்டிகையாகும். இதை தமிழ்நாட்டில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைப்பெறும். போகி, சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல்,  கானும்பொங்கல் என்று வரிசையாக கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதற்கு காரணமாக சிவபெருமானையும், நந்திதேவரையும் வைத்து புராணக்கதை சொல்லப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். எத்தனையோ உயிரினங்கள் இருந்தும் உழவுத் தொழிலுக்கு மாடுகள்தான் உதவுகிறது. எனவே, மாடுகளின் உழைப்பை சிறப்பிப்பதற்காகவே தமிழர்களால் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. புராணக்கதைப்படி, சிவபெருமான் ஒருமுறை நந்திதேவரை அழைத்து பூமிக்கு சென்று அங்குள்ள மனிதர்களிடம், ‘தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மாதம் ஒருமுறை சாப்பிட வேண்டும்’ என்று அறிவித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார். சிவபெருமான் கூறியதை கவனக்குறைவாக கேட்ட நந்தி மக்களிடம் சென்று, ‘எல்லோரும் தினமும் சாப்பிட வேண்டும். மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்’ என்று தவறாக அறிவித்தார். இந்த தவறினால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியைப் பார்த்து, ‘உணவை தயாரிக்க நீ என்றென்றும் பாடுபடுவாய்!’ என்று சாபமிட்டார். இந்த சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்த நந்தி மனிதர்களுடன் சேர்ந்து வயலை உழுது மனிதர்களுக்கு அதிக உணவு உற்பத்தி செய்ய உதவி செய்தது. அன்றிலிருந்து மனிதனுக்கு உதவியாக இருந்த மாடுகள் இன்றுவரை விவசாயத்திற்கு பெறும் பங்கு வகிக்கின்றன. பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி. ஸ்ரீராமஜயம்குழு மாட்டுப்பொங்கல் அன்று வீட்டில் மாடுகள் வைத்திருப்பவர்கள் அதை நன்றாக குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து பூக்கள், மணி போன்றவற்றை கட்டி மாடுகளை அழகாக அலகரிப்பார்கள். மாட்டுப்பொங்கல் அன்று பாசிப்பருப்பு, அரிசி, வெல்லம், நெய், முந்திரி சேர்க்கப்பட்டு சர்க்கரை பொங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த 6 பேரின் சாபம் கண்டிப்பாக பலிக்கும்! இது முதலில் மாடுகள் உண்பதற்கு வழங்கப்படுகிறது. ‘ஜல்லிக்கட்டு’ என்று சொல்லப்படும் மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டை மாட்டுப்பொங்கல் அன்று வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நந்தி பகவானை வழிபடலாம். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுபிக்ஷம் பெருக வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்யலாம்.🌹
திருநீற்றுச் சுவடு
674 views
2 months ago
#👨‍👩‍👧தை பொங்கள் வாழ்த்துக்கள் #🙏நந்தி பகவான் 🙏 #பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 பொங்கல் சிறப்பு பகிர்வு*🌹 வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி. ஸ்ரீராமஜயம்குழு பணமில்லாமல் பசுதானம் : ‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், ‘பணம்’ கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். கோவிந்தா !கோவிந்தா ! கோவிந்தா ! கோ ஸ்துதி ! நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம் ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி யுக்தச்ச ய: படேத் ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான் புத்ர வான் பவேத்!🦋
திருநீற்றுச் சுவடு
789 views
2 months ago
#பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🙏நந்தி பகவான் 🙏 ஸ்பெஷல் !* கணு அன்று ,நம்மை, விட வயதில், மூத்த பெண் மணிகளை நமஸ்கரித்து,அவர் களிடம்,நெற்றியில் மஞ்சள் கீறி விடச்சொல்லி, கையில் கொண்டு போகும் பசு மஞ்சளை கொடுப்போம் ,அவர்களும், நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டே நெற்றியில் மஞ்சளை கீற்றி விடுவார்கள். அவை:--- தாயோடும், தந்தையோடும், சீரோடும். , சிறப்போடும், பேரோடும், புகழோடும், பெருமையோடும், கீர்த்தியோடும் சிறுவயதில் , தாலிகட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று, கொண்டவன், மனம் , மகிழத் தையல்நாயகி போலத் தொங்கத்தொங்க த்தாலிகட்டித் தொட்டிலும், பிள்ளையுமாக, மாமியார் மாமனார் மெச்ச, நாத்தியும் மாமியும் போற்ற பிறந்தகத்தோர், பெருமை விளங்க, பெற்ற பிள்ளைகள் , ஆயுள் ஓங்க, உற்றார் உறவினரோடு புத்தாடை. புது மலர் சூடி புது மாப்பிள்ளை , மருமகளோடு, புதுப் புது சந்தோஷம் பெருகி, ஆல்போல் தழைத்து அருகுப்போல் வேரோடி என்றென்றும், வாழணும் எப்போதும் சிரித்த முகத்தோடு, இருக்கணும்.என்று சொல்லி, வாழ்த்துவார். பிறகு, வீட்டிற்கு ,வந்து காக்காய் பொடி வைத்து, அதை ஜலம் தெளித்து,நீர் சுற்றி மணி அடித்து சூடன், காண்பித்து, பிரார்த்திக்க வேண்டும்..... காக்காய் பொடி வைத்தேன் கனுப்பொடி வைத்தேன்,காக்காய்க்கு, எல்லாம். கல்யாணம் காக்காய் கூட்டம்பிரிந்தாலும், என் கூட்டம், பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம், பண்ணிவிட்டு, குளித்து கலந்த சாதங்கள்,செய்து, ஸ்வாமிக்கு நிவேதித்து, காக்காய்க்கு அன்ன மிட்டு பிறகு சாப்பிடுவோம். பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி. ஸ்ரீராமஜயம்குழு கணுப் பண்டிகை பாடல் : ( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் ) கணுப் பிடி வெச்சேன் காக்காப் பிடி வெச்சேன் கணுப் பிடியும் காக்காப் பிடியும் கலந்து நானும் வெச்சேன் பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன் பச்சை இலையில் நிரப்பி வெச்சேன் மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன் மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன் காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்னு சொல்லி வெச்சேன் கலர் கலரா சாதம் வெச்சேன் கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன் வகை வகையா சாதம் வெச்சேன் வாழைப்பழம் சேர்த்து வெச்சேன் அண்ணன் தம்பி குடும்பமெல்லாம் அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன் இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம் இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன் எள் சாதம் எலுமிச்சை சாதம் ஏகாந்தமாய் நானும் வெச்சேன் கூட்டு பொரியல் அவியல் வெச்சேன் கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன் தூப தீபம் காட்டி வெச்சேன் தூய மனதோடு நானும் வெச்சேன் கற்பூரம் ஏத்தி வெச்சேன் கடவுளை வணங்கி வெச்சேன் ஆரத்தி எடுத்து வெச்சேன் ஆண்டவனை வேண்டி வெச்சேன் கணுப் பிடி வெச்சேன் காக்காப் பிடி வெச்சேன் கணுப் பிடியும் காக்காப் பிடியும் கலந்து நானும் வெச்சேன் காக்கைக் கூட்டம் போல எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்.🌹
திருநீற்றுச் சுவடு
634 views
2 months ago
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #🙏நந்தி பகவான் 🙏 திருநாள்_ *மாட்டுப்பொங்கல் ; சிறப்புகள், மந்திரங்கள், மற்றும் வழிபாட்டு முறைகள்..!* மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை `கணுப் பொங்கல்' என்றும் சொல்வார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி' என்றும் வைப்பார்கள். முதல் நாள் தைப் பொங்கல் அன்று, பொங்கல் வைத்த பானையில் இருந்து முழுவதையும் எடுத்து விடாமல், சிறிது மீதி வைத்திருப்பார்கள். அதனை கையால் பிடித்து வைப்பார்கள். அந்த காலத்தில் நதிக்கரை, குளத்தங்கரையில் அல்லது திறந்தவெளியில் செம்மண் கோலம் போட்டு, மஞ்சள் இலை அல்லது வாழை இலையை கிழக்கு நுனியாக வைத்து முதல் நாள் சாதத்தில் சிறிது மஞ்சள், குங்குமம் சேர்த்து தனியாக மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், வெள்ளை சாதம் என்று ஒவ்வொன்றும் ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் உருண்டை பிடித்து வைப்பார்கள். பின்னர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஆரத்தி காட்டுவார்கள். பொங்கல் பானையில் இருந்த மஞ்சளை எடுத்து வயதான பெண்களிடம் கொடுத்து திருமாங்கல்யத்திலும், நெற்றியிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் பின் தான் குளித்து புதுத் துணி அணிவார்கள். இவ்வாறு செய்வதால் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பிக்கை. காக்கை உருவில் எமதர்மராஜா வந்து இந்த உணவை சாப்பிடுவதாக ஐதீகம். சகோதரர்களும் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பணமோ அல்லது துணியோ பரிசாக அனுப்பி வைப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோ பூஜை செய்ய நல்ல நேரம். பொதுவாக பசு மாடு வளர்ப்பவர்கள் பசுக்கொட்டிலில் பூஜை செய்வார்கள். வீட்டில் பசு இல்லாதவர்கள் பசுவை வரவழைத்து பூஜிப்பது விசேஷத்தை தரும். பசுவையும், கன்றையும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வாசனை பூக்களால் அர்ச்சிப்பது நன்மை தரும். பசு மாட்டிற்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், கரும்பு கொடுக்க வேண்டும். இது சகல தோஷங்களையும் விலக்கும். கோபூஜை முடித்த பிறகு பசுவிற்கு பொங்கலும் கொடுப்பார்கள். அன்று மாலை பசுக்களை சந்தோஷமாக வைத்திருக்க எண்ணி, அவற்றின் இஷ்டம் போல் ஓட விடுவார்கள். இதற்கு `ஸ்வச்சந்த சாரம்' என்று பெயர் . மாட்டுப்பொங்கல் அன்று, கிராமங்களில் ஊர் கூடி ஊருக்கு வெளியே, ஒரு பெரிய மேடான இடத்தில் கள்ளிமரச் சுள்ளிகளைக் கொண்டு மிகப்பெரிய வட்டத்தை உருவாக்குவார்கள். அதில் சிறிது எண்ணெய் சேர்ப்பார்கள். இந்த மேட்டிற்கு `திட்டாணி மேடை' என்று பெயர். இதை பாதுகாக்க ஒருவரை நியமிப்பார்கள். அவரை `திட்டாணி காவலர்' என்பார்கள். பின்னர் ஊரில் உள்ள மாடுகளை அந்த வட்டத்திற்குள் கொண்டு வந்து கலச தீர்த்தத்தை அதன் மேல் சிறிது தெளித்து, அதன்பிறகு ஆவாரம் பூ, பிரண்டை ஆகியவற்றை, கோரை புல்லால் மாலையாக தயார் செய்து பசு மாடுகளுக்கு அணிவிப்பார்கள். ஒருவர் சேகண்டி அடிப்பார். ஒருவர் தீச்சட்டி எடுப்பார். ஒருவர் சங்கு ஒலிப்பார். எல்லோரும் மகிழ்ச்சியாக விசேஷமாக பாடிக்கொண்டு திட்டாணி மேடையை சுற்றி வருவார்கள். அப்போதும் `பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்' என்று அனைவரும் கூறுவார்கள். இதை மாலையில் தான் ஆரம்பித்து செய்வார்கள். இரவு நீண்ட நேரம் ஆகிவிடும். அப்பொழுது திட்டாணி மேடையில் ஊர் கூடி பொதுப்பொங்கல் வைப்பார்கள். ஒரு பெரிய வாழை இலையில் பொதுப் பொங்கலை கொட்டி கற்பூரம் காட்டி பூஜை செய்வார்கள். பொங்கலை பசுமாடுகளுக்கு கொடுப்பார்கள். தாங்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள். பின் அனைவரும் பசு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவரவர் வீட்டு வாசலில் நிற்க வைத்து வைகோலை கொளுத்தி திருஷ்டி கழிப்பார்கள். கோ பூஜை மந்திரம் ஓம் காமதேனவே நமஹா ஓம் பயஸ்வின்யை நமஹா ஓம் ஹவ்யகவ்ய நமஹா ஓம் பலப்ரதாயை நமஹா ஓம் வ்ருஷப பத்ன்யை நமஹா ஓம் ஸௌரபேய்யை நமஹா ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹா ஓம் ரோஹிண்யை நமஹா ஓம் ச்ருங்கிண்யை நமஹா ஓம் க்ஷுரதாரிண்யை நமஹா ஓம் கம்போஜஜனகாயை நமஹா ஒம் பப்லஜகாயை நமஹா ஓம் யவனஜனகாயை நமஹா ஓம் மாஹேய்யை நமஹா ஓம் நைசிக்யை நமஹா ஒம் சபள்யை நமஹா நானாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்யும் போதும், பசுவை பூஜிக்கும் பொழுதும் மேற்காணும் மந்திரத்தைச் சொல்லி பூக்களால் அர்ச்சிக்கவும். பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு. கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர். பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும்போது, பட்டிபெருக பால் பானை பொங்க என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளை மாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.🌹
திருநீற்றுச் சுவடு
769 views
2 months ago
#பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##👨‍👩‍👧தை பொங்கள் வாழ்த்துக்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 பூஜித்த புண்ணிய ஆலயங்கள்* பொங்கல் தின சூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப்பொங்கல் மனிதர்களின் வாழ்வின் ஒன்றாகி விட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. ரிஷபம், நந்தி, பசுக்கூட்டம் என்று இதை பல வகையாகப் பார்க்கப்படுகிறது. பசு குலத்தையே நந்த குலம் என்று அழைப்பர். ஆண் காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை மெய்த்ததாலே கோபாலன் என்ற பெயர் பெற்றான். பசுக்களை மேய்த்தாலேயே அவர்கள் நந்த கோபர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையின் உருவை கொண்டவரையே ரிஷபம் என்கிறோம். காளையின்  வடிவில் படுத்து இருக்கும்இவரே  ரிஷபதேவர் ஆவார். இவர் தான் நாம் நந்தி என்று அழைக்கிறோம்.    ஈசன் நந்தி மீது ஏறி வருவான் என்பதை  “வெள்ளை எருதேறி”  விடையேறி என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. தேவாரத்தில் “நந்தி நாமம் நமச்சிவாய” என்றும். ‘நங்கள் நாதனாம் நன்றி’ என்றும் திருமந்திரம் பேசுகிறது. ஆகவே நந்தியும் சிவமும் வெவ்வேறு இல்லை என்பது தெளிவாகிறது. கோயில்களில் விழா நடக்கும் பொழுது நந்திக் கொடியை பறக்க விடுவர்.    ரிஷப தேவருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறானவர்கள். கருவறைக்கு நேரேயுள்ள காளை வடிவம் கொண்ட ரிஷபதேவர் என்கிற நந்தியிலிருந்து நந்தியம்பெருமான் வேறுபட்டவர். நந்தியம்பெருமானுக்கு மனித முகத்தில் காளையின் தோற்றத்தோடும், இரண்டு கால்களோடும் இருப்பார். நந்திதேவர் வெண்ணிற முடையவர்.முக்கண் கொண்டவர். நான்கு கைகளை உடையவர். ஜபமாலை, சூலம், அபயவரதம்  காணப்படும். நந்திதேவரின் நாத ஒளியால் உண்டானதே “நந்திநாதோற்பவம்” என்ற நதி. இது காசியில் இருக்கிறது.   ஆவுடையார் கோவில் என்னும் தலத்தில் கருவறையில் சிவபெருமான் அருவமாக ஆத்மநாதராக அருள்கிறார். அதேபோல் ரிஷபதேவரும் அருவமாக அமைந்துள்ளனர்.    திருவண்ணாமலைக்கு அருகே உள்ள செங்கம் என்னும் தளத்தில் ரிஷபபுரீஸ்வரர் எனும் பெயரிலேயே அருள்கின்றார்.    கும்பகோணம் - ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருலோக்கி தலத்தில் ரிஷபத்தின் மீது ஈசனும், உமையும் காட்சி தரும் சிற்பம் அற்புதமானது.    மதுரைக்கு அருகில் உள்ள காளையார் கோயில் என்ற தளமும் உள்ளது. சுந்தரருக்கு பெருமான் காளை வடிவில்  காட்சியளித்தார்.    பசுவின் திருமுகமே தெய்வீகத் தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன் உச்சியில் சிவபெருமான் உரைக்கின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனித நீர் வெளியேறும் நீரை பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுக தாமரை அத்தனை பவித்திரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர். பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தை போன்ற அமைப்பில் வைத்திருப்பர். பாரததேசம் முழுவதுமே கோமுகி, தேனுதீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.    தஞ்சாவூர்-திருவையாற்றை சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடைய தலங்களாகும். திருவையாறு, திருப்பழனம், திருவேதிகுடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் போன்ற இந்த ஏழு ஊர்களிலும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும் , அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவார்.    பார்வதிதேவியே  பசுவின் உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால்,கோமுக்தீஸ்வரர் எனும் திரு பெயரில் ஈசன் அருள்கிறார்.    கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப் படுகின்றார்.   கும்பகோணம் - திருப்பனந்தாள் தலத்திற்கு அருகே உள்ள பந்தநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரர் ஆக காட்சி தருகிறார்.   வசிஷ்டரின் சாபத்தை பெற்ற காமதேனு பூஜித்த முக்கிய தளமாக ‘ஆவூர்’ விளங்குகிறது. ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே இத்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பாகும். இது தசரதர் வணங்கிய கோயிலாகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கின்ற யாகம் இங்கு நிகழ்த்தப் பட்டது. இத்தலம் கும்பகோணத்திற்கு 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.    திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்குமிடையே ஆவூர் என்னும் தலம் உள்ளது.   தஞ்சாவூர்-அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதி கோயில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆகும். தஞ்சைக்கு அருகே உள்ள தென்குடித்திட்டை என்னும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டு இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.    அஷ்ட மங்கள  சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபத்தை வைத்துள்ளனர். முக்கிய ஹோமங்களில் யாக குண்டலத்தை சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.   மாடுகளை கட்டும் மந்தைக்கு பட்டி என்று பெயர். இதையொட்டி நிறைய ஊர்களுக்கு பின்னால் பட்டி சேர்த்தார்கள்.    கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் என்னும் திருத்தலத்தில் தேனுபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்கிறார். இது காமதேனுவால் பூஜிக்கப்பட்ட தாகும்.    கொங்கு நாட்டில் உள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவை வழங்கப்பட்டவை ஆகும். அதில் முக்கியமாக பேரூர் தளத்தை ஆதி பட்டீஸ்வரம் என்றும் ஈசனின் பெயர் பட்டீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோணம் பட்டீஸ்வரத்தையும் பேருரையும் தனியே பிரித்துக் காட்ட இத்தலத்தை ஆதிபட்டீஸ்வரம் என அழைத்தார்கள்.   பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி. ஸ்ரீராமஜயம்குழு ஈசனை நோக்கி வழிபட்ட தங்களைத் தற்காத்துக்கொள்ள கொம்பை பெற்றன அப்படி தவமிருந்து பெற்ற ஊரே திரு ஆமாத்தூர். என்கின்றது திருவாமத்தூர் ஆகும்.விழுப்புரம் அருகே உள்ள இத்தலத்தை பசுக்கள் தாய்வீடு என்று அழைப்பர்.    திருவாரூர் நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும், காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயருண்டு. இந்த கொண்டியான அம்பிகை பசு வடிவத்தில் சிவனை வணங்கியதால் பசுபதீஸ்வரர் ஆவார்.   சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார்.’கோ’எனும்பசு வழிபட்டதால் இன்றும் கோவூர் என்றழைக்கப் படுகிறது .   கோமளம் என்கிற சொல்லுக்கு கறவைப் பசு என்ற பொருளும் உண்டு. இப்படி கறவைப் பசுவால் வழிபட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.    சென்னை - மாடம்பாக்கத்தில் உள்ள ஈசனை பசு பூஜித்ததால் தேனுபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.    மிக ஆச்சரியமாக பொள்ளாச்சி அருகே களந்தை என்னும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளி காட்சி அளிக்கிறாள்.   நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய் பிரான் என்பதாகும். காமதேனுவின் பால் குளமாக தேங்கி வெண்ணையாக மாறியதை வசிஷ்டர் லிங்கமாக்கி வழிபட்டார்.    தேனு எனும் ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயர் இருந்ததாலோ அவை எல்லாம் பசு பூஜித்த தலங்களாகும்.   மேல்மருவத்தூர் - அச்சிரப்பாக்கம் அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதேபோல கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது.    நெல்லை - சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினால். ‘கோ’என்னும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள்.   கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசு கொட்டிலின் அருகே சென்று அந்த அதிர்வுகளுக்குள்  நில்லுங்கள் உங்கள் மனம் அமைதியாவதை உணரலாம். அதனால்தான் பெரியோர்கள் கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வதென்பது கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள்.🌹