vaalkkay malargal

thiyakali
551 views
2 days ago
#மலர்கள் மனோரஞ்சிதம் மலர்
saravanan
732 views
13 days ago
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 6 எண்ண அலைகள் இயற்கையை உணர்ந்து அறவழி ஒழுகி அறியாமையைத் தீய்க்க வல்ல ஒரு மதிப்புள்ள உயர் மனிதனாக இருந்தும் தன் தகைமையும், இயற்கையாற்றலின் இயக்க நியதியும் அறியாமல், மனிதன் தனது எண்ண ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் தேவை, தற்கால இன்பம் என்ற அளவில் குறுகி உணர்ச்சி வயமாகிப் பிறர்க்கும், பிற்காலத்திற்கும் தீமை விளைவிக்கும் வகையில் செயல் புரிகிறான். பிறரைத் தாக்கி தீமை விளைவிக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறான். தன்குடும்பம், சமுதாயம், வேறு நாட்டு மக்கள் இவர்கள் மேல் சினம், வெறுப்பு, பகை கொண்டு அவன் எண்ண அலைகள் எப்போதும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறான். இவ்வெண்ண அலைகள் அணு ஆற்றலாகவே பரவி, மனித இன உடல்களிலும், மூளையிலும் பொருந்தா உணர்வுப் பதிவுகளாகவும்அமைகின்றன. இப்பதிவுகளைப் பாவப் பதிவுகள் என்றும் சாபம் என்றும் அறிவறிந்த முன்னோர்கள் கூறியுள்ளனர். இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்குப் பகையாகி பொதுவாக, சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்குத் துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கின்றேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன. மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத் துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
nandhu
2.3K views
1 months ago
👉👉##emotional line ##life true line💐💐 #valkai thathuvangal insparetional #👏Inspirational videos ##👍👍👈💐
saravanan.
796 views
2 months ago
#vaalkkay malargal மலர்கள்: பிப்ரவரி 12 அன்பும், கருணையும் இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும், கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்துக் காத்து வருவது கருணை. ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட்கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட்கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கிறது. இதுபோன்றது கருணை. ஒரு மாமரத்தில் பிஞ்சு விடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்து விடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயண நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது. அதுதான் கருணை. உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டோ அல்லது அது பிரிந்து போய்விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும், வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெறும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள். இது கருணை. - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
saravanan.
828 views
2 months ago
#vaalkkay malargal மலர்கள் - பிப்ரவரி 11 மனித நேயம் இன்றைய வாழ்க்கை நிலையைக் கவனிக்கும்போது நாம் தெரிந்தோ, தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுகிறோம். நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அதோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்துகொண்டு வருகிறோம். மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியைவிட வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக, சாதிப்பற்று காரணமாக, நாட்டுப்பற்று, குடும்பப் பற்று காரணமாகவும் வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறோம். ஒருவர் செய்கிற காரியமோ, பேசுகிற பேச்சோ நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூளையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்புணர்ச்சியைப் பதிவு செய்துவிடுகிறது. கணவன் – மனைவி உறவில் இவ்வித வெறுப்புணர்வு ஏற்பட்டுவிடுமானால் அந்தக் குடும்பத்தில் ஒருபோதும் அமைதி இருக்காது. ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால், இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒருத்தருக்கொருத்தர் தமக்கே தம் குடும்பத்திற்கே தீமை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்; மதித்து நடக்க வேண்டும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் நேசம் வளரும்; வெறுப்பு நீங்கும்; நன்மை ஏற்படும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹