trees

vijayakumar vkr
884 views
23 days ago
இலுப்பை மரம் விற்பனைக்கு வந்துள்ளது இடம் பெரம்பலூர் சர்க்கரை ஆலை நல்லூர் #மரம் #மரம் நடுவோம் #மரம் #மரம் வளர்ப்போம் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
MUTHUPANDIAN RAMKUMAR
899 views
26 days ago
AI indicator
#மரம் கோவில் மரம் பன்னீர் மழை பொழியும் அதிசய கோவில் மரம் வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பன்னீர் மழை பொழியும் அதிசய கோவில் மரம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்ரி மலை. புலிகள் உட்பட பல வன விலங்குகள் வாழும் இந்த மலையில் வருடாவருடம் ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அத்ரி என்னும் மஹரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார். அதனாலேயே இந்த மலைக்கு அத்ரி மலை என்னும் பெயர் வந்துள்ளது. அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புத சிவன் கோவிலான அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம், ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் அத்ரி பரமேஸ்வர் என்றும், இறைவி அத்ரி பரமேஸ்வரி என்றும் அழைக்கப்படுவர். அத்தோடு கங்கைக்கு நிகராக கருதப்படும் அத்ரி கங்கை என்னும் தீர்த்தம் எப்போதும் வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளதாகவும், அதைக் காண்பது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறப்படுகிறது. சிவன் கோவிலுக்கு அருகே பாலை மரம் என்றொரு அரிய வகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வருடா வருடம் அதிசயிக்கும் வகையில் ஒரு பன்னீர் மழை பொழிகிறது. பங்குனி மாதத்தில் கடைசி 5 நாட்கள், சித்திரையில் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் ஏதாவது 2 நாள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒரு வகையான வண்டுகள் வந்து அமர்கின்றன. அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றது. அதைப் பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழை பொழிவது போல காட்சி அளிக்கிறது. வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தால் அது பன்னீர் வாசனையில் உள்ளது. ஆனால் அது மிக விரைவில் காய்ந்து விடுகிறது. மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்குத் தெரிவதில்லை.