அந்தோணியார்

தமிழ்சீயான்43
880 views
7 days ago
💞⚜️💞⚜️💞⚜️💞⚜️💞⚜️💞 *👑புனித அந்தோனியாரை👑* *👑நோக்கி ஜெபம், வேண்டுதல் மற்றும் புகழ்மாலை.👑* 💞⚜️💞⚜️💞⚜️💞⚜️💞⚜️💞 #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #புனித அந்தோணியார் #அன்னை வேளாங்கண்ணி மாதா,இயேசு ஆண்டவர்,புனித அந்தோணியார்,குழைந்தை இயேசு,இயேசு மரியாள் சூசை, #அன்னை மரியே வாழ்க💒💐 இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே! கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். - *🙏🏻ஆமென்.🙏🏻* ⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️ *புனித அந்தோனியாரிடம் வேண்டும் ஜெபம்* ⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️ எங்கள் பாதுகாவலரான புனித அந்தோணியாரே! மகிமையில் விளங்கிடும் புனித லீலியே...! துன்பப் படுவோரின் துயர் துடைப்பவரே...! அழுவோரின் ஆறுதலே...! உம்மை நாடி நிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக் கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும்! வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ்வதற்கு அறியாது வருந்தும் எமக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், பணிகளையும், நில உடைமைகளையும், பாதுகாத்தருளும். நீங்காத நோய்களை உம் வல்லமை நிறைந்த இறை வேண்டலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். அலகையின் தந்திரங்களிலிருந்தும் அதன் தீய சக்திகள் அனைத்திலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். *🙏🏻ஆமென்🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *🙏🏻பதுவை பதியரான புனித அந்தோனியாருக்கு புகழ்மாலை.🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க.... மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே மீனாரென்கிற சந்நியாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே அப்போஸ்தலருடைய கொழுந்தாகிய புனித அந்தோனியாரே பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே வழிதப்பிப்பி போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியைசீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடுஎளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம். இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *செபிப்போமாக:-* 🍃🌸🍃🌸🍃🌸🍃 சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின்பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்தியபேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். *-🙏🏻ஆமென்🙏🏻* 🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
தமிழ்சீயான்43
901 views
7 days ago
🌺🌻🌺🌻🌺🌻🌺 *அர்ச். அந்தோனியாரைக்* *குறித்து* *பதின்மூன்று* *மன்றாட்டு* 🌷🌹🌷🌹🌷🌹🌷 அற்புதங்கள் வேண்டுமானால் அர்ச். .. அந்தோனியாரிடம் போ. 🌷🌹🌷🌹🌷🌹🌷 *1. நீர் சாவை அகற்றுகிறீர்.* வார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி. *2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே! சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி. *3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர்.* அர்ச். அந்தோனியாரே! எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி. *4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர்.* அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி. *5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன.* அர்ச். அந்தோனியாரே! பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி. *6. நோயாளிகளைச் செளக்கியப்படுத்துகிறீர்.* அர்ச். அந்தோனியாரே! நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி. *7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது.* அர்ச். அந்தோனியாரே! பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி. *8. நீர் சிறைச்சாலையில் அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே! சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும். பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி. *9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி. *10. நீர் காணாமற்போன சொத்தைத் திரும்பக் கண்டடையச் செய்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே! காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி. *11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன.* அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்களைத் தற்காத்து இரட்சியும். பர. அருள்.திரி. *12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன.* அர்ச். அந்தோனியாரே! தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி. *13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக.* அர்ச். அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி. *பிரார்த்திக்கக்கடவோம்* இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே! நிர்மல பரிசுத்தத்தின் உப்பரிகையே! தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும். சர்வேசுரா சுவாமி! தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது. *ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் 🌺🌻🌺🌻🌺🌻🌺 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️* #அன்னை வேளாங்கண்ணி மாதா,இயேசு ஆண்டவர்,புனித அந்தோணியார்,குழைந்தை இயேசு,இயேசு மரியாள் சூசை, #புனித அந்தோணியார் #சகாய மாதா
தமிழ்சீயான்43
1.3K views
14 days ago
🌺🌻🌺🌻🌺🌻🌺 *அர்ச். அந்தோனியாரைக்* *குறித்து* *பதின்மூன்று* *மன்றாட்டு* 🌷🌹🌷🌹🌷🌹🌷 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #புனித அந்தோணியார் #அன்னை வேளாங்கண்ணி மாதா,இயேசு ஆண்டவர்,புனித அந்தோணியார்,குழைந்தை இயேசு,இயேசு மரியாள் சூசை, அற்புதங்கள் வேண்டுமானால் அர்ச். .. அந்தோனியாரிடம் போ. 🌷🌹🌷🌹🌷🌹🌷 *1. நீர் சாவை அகற்றுகிறீர்.* வார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி. *2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே! சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி. *3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர்.* அர்ச். அந்தோனியாரே! எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி. *4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர்.* அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி. *5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன.* அர்ச். அந்தோனியாரே! பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி. *6. நோயாளிகளைச் செளக்கியப்படுத்துகிறீர்.* அர்ச். அந்தோனியாரே! நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி. *7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது.* அர்ச். அந்தோனியாரே! பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி. *8. நீர் சிறைச்சாலையில் அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே! சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும். பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி. *9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி. *10. நீர் காணாமற்போன சொத்தைத் திரும்பக் கண்டடையச் செய்கிறீர்.* அர்ச். அந்தோனியாரே! காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி. *11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன.* அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்களைத் தற்காத்து இரட்சியும். பர. அருள்.திரி. *12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன.* அர்ச். அந்தோனியாரே! தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி. *13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக.* அர்ச். அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி. *பிரார்த்திக்கக்கடவோம்* இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே! நிர்மல பரிசுத்தத்தின் உப்பரிகையே! தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும். சர்வேசுரா சுவாமி! தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது. *ஆமென்.* 🌺🌻🌺🌻🌺🌻🌺 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️* #அன்னை மரியே வாழ்க💒💐