📖இன்றைய வேத வசனம்

செ.சாா்லஸ் செபஸ்டின்
5.8K views
8 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை* *நம்பிக்கைக்குரிய பணியாளராய்!* தாய் நாட்டிற்காக எதிரிகளோடு போராடி, நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி இது. போரில் தலையிலும் கையிலும் காலிலும் அடிபட்டிருந்த ஒவ்வொரு வீரருக்கும் பதக்கம் அணிவித்து, அவர்களுக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டே வந்தார் அந்நாட்டு அரசி. கடைசியாக, ஒரு படைவீரர் போரில் தன் இரு கைகளையும் கால்களையும் இழந்த நிலையில் படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்ட அரசிக்கு அழுகையே வந்துவிட்டது. அவர் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த படைவீரர் அருகில் சென்று, அவரது நெற்றியில் முத்தமிட்டு, “நீயன்றோ நல்ல, நம்பிக்கைக்குரிய பணியாளர்! இந்த நாட்டிற்காக நீ ஆற்ற சேவைக்கு இந்த நாடு தலைவணங்குகின்றது” என்று அந்தப் படைவீரருக்கு தலைவணங்கினார். இப்படியொரு செயலைச் செய்தவர் வேறு யாருமல்ல, பேரரசி விக்டோரியாவே. ஆம், போரில் தன்னுடைய கைகளையும் கால்களையும் இழக்கும் அளவுக்கு இந்த நிகழ்வில் வரும் படைவீரர் பணிபுரிந்ததாலேயே பேரரசி விக்டோரியா அவரை, ‘நம்பிக்கைக்குரிய பணியாளர்’ என்று வியந்து பாராட்டினார். இன்றைய இறைவார்த்தை நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாய் விளங்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். *திருவிவிலியப் பின்னணி:* ‘யாருடைய வாயிலும் விழக்கூடாது’ என்று சொல்வர். யாருடைய வாயில் விழக்கூடாது என்றால் யாருடைய குறைசொல்லும் ஆளாகக்கூடாது என்பதே பொருள். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிக் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பேசும் பவுல், குறை சொல்லுக்கு ஆளாகதிருக்கவேண்டும் என்கின்றார். குறை சொல்லுக்கு ஆளாகதிருக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை விழியாய் இருந்து செய்யும் வீட்டுப் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரிய பணியாளர் இருப்பார்; அவர் தன்னுடைய பதவியில் மேலும் உயர்த்தப்படுவார் என்று சொல்லும் இயேசு, விழிப்பாய் இல்லாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைச் சரிவரச் செய்யாத வீட்டுப் பொறுப்பாளர் அதற்குரிய தண்டனையைப் பெறுவார் என்கிறார். இன்றைக்குப் பலர் தங்களுடைய பொறுப்புகளில் உண்மையில்லாமலும் நேர்மையில்லாமலும் இருப்பதைக் காண முடிகின்றது. ஒருவர் குறை சொல்லுக்கு ஆளாமல் இருக்க வேண்டும் என்றால், அவர் கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளுக்கு நம்பிக்கைகுரியவாய் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். இதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வு நிச்சயம். *சிந்தனைக்கு:*  ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவர், வேறு எதற்கும் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லை.  தன்னுடைய கடமையைச் செய்யத் தவறிய ஒருவர் உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்  உண்மை ஒருவரை உயர்த்தும். *இறைவாக்கு;* ‘பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படவேண்டும்’ (1 கொரி 4:2) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஆண்டவர் எப்படி நம்பிக்குரியவராய் இருக்கின்றாரோ, அப்படி நாமும் நம்பிக்கையவராய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். *- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
செ.சாா்லஸ் செபஸ்டின்
635 views
10 days ago
*அன்றன்றுள்ள அப்பம்* 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 *ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை 2026* 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 *அன்றன்றுள்ள ஆகாரம்!* 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 *“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்” (லூக். 11:3).* *“அன்றன்றுள்ள அப்பம்” என்னும் வார்த்தை வெறும் உணவை மட்டும் குறிப்பிடவில்லை. உலக வாழ்க்கைக்குரிய தேவைகள் அனைத்தையுமே, “அன்றன்றுள்ள அப்பம்” என்றுதான் வேதம் குறிப்பிடுகிறது. எல்லா நல்ல ஈவுகளையும் கொடுக்க அறிந்திருக்கிற பரமபிதாவின் பாதத்தண்டை ஒருவன் அதிகாலை வேளையிலே ஓடி வரவேண்டியது மிகவும் அவசியம்.* *இயேசு சொன்னார், “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் .... ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (மத். 6:25,26).* *அன்றன்றுள்ள அப்பத்தை தினமும் பெற்றுக்கொள்வதற்கு என்ன வழி? முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடும்போது, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களெல்லாம் கர்த்தர் நிச்சயமாகவே கூட்டிக்கொடுப்பார் (மத். 6:33). இரண்டாவது, கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார் என்பதிலே எந்த சந்தேகமும் இல்லாமல் விசுவாசித்தால் அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்.* *“என் ஜனங்களுக்கு ஆன்மீக உணவைக் கொடுக்கவேண்டும்” என்று என்னுடைய தகப்பனார் உள்ளத்தில் கர்த்தர் உணர்த்தினபடியால் 1982-ம் ஆண்டு அன்றன்றுள்ள அப்பம் என்ற பெயரில் ஒரு தின தியான மாதாந்தர இதழை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நானூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. தற்போது ஏறக்குறைய நாற்பத்திநான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்று ஆயிரக்கணக்கான இதழ்கள் உலகமெங்கும் பரவலாய் வாழும் தமிழ் மக்களுக்குச் செல்லுகின்றன. வேதத்தை தியானிக்க, வேதத்தின் மறைபொருளை அறிந்துகொள்ள, வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள இந்த தினசரி தியான நூல் பயனுள்ளதாய் அமையும்படி கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத். 4:4).* *“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது” (சங். 19:7,10).* *தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வார்த்தையை பரலோக மன்னாவாக எண்ணி வாஞ்சையோடு வாசியுங்கள். வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி சுதந்தரித்துக்கொள்ளுங்கள். அவைகள் உங்களுக்காகவே அன்புள்ள பரமபிதாவானவரால் அருளிச்செய்யப்பட்டவை.* *நினைவிற்கு:- “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:2,3).* *இன்றைய வேத வாசிப்பு* *காலை - சங்கீதம் : 119:1-88* *மாலை - 1 கொரிந்தியர் : 7:20-40* *போதகர். ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை* 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 #இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம்