இறை அடியான்☝️

SHEIK 🌺KSN🌺
678 views
12 days ago
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; 1. நீதியை நிலை நாட்டும் தலைவர், 2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், 3. பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், 4. அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், 5. உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், 6. தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், 7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 660) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
نركيس
4.4K views
16 days ago
அளவற்ற அருட்கொடைகளால் மறுமை வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடையதாக ஆக்க உன்னிடம் இறைஞ்சுகிறேன். #🤲துஆக்கள்🕋 #இறை அடியான்☝️ #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள்
SHEIK 🌺KSN🌺
1.4K views
25 days ago
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஃமினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை) வெறுக்க வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தாலும், அவளின் வேறொரு குணத்தைக் கண்டு அவன் திருப்தியடையலாம்." அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் 1469 திருமணத்திற்கு பிறகான அன்பு. அல்லாஹ் பார்க்கும், ரஹ்மத் இறங்கும் அன்பு. "எனக்கு நீங்க போதும்" னு சொல்றது. பர்ஃபெக்ஷன தேடி ஓடாம, இருக்கிறவங்களோட நன்றியோட வாழ்றது. அதுதான் பரக்கத். எந்த மனிதரும் 100% பர்ஃபெக்ட் கிடையாது. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து அல்லாஹ்வை திருப்திப்படுத்த முயற்சி செஞ்சா, அந்த உறவே பர்ஃபெக்ட் ஆகிடும். "என் இறைவா! ஹலாலான அன்பையும், நல்ல துணையையும் எங்களுக்கு வழங்குவாயாக" — ஆமீன்.! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.8K views
26 days ago
அல்லாஹ் நம் செயல்களை மலக்குமார்கள் மூலம் பதிவு செய்கிறான். ஆனால் இந்த மூவரின் நிலைமையில் உள்ளவர்களின் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். தூக்கத்தில் பேசினாலோ, நடந்தாலோ பாவம் இல்லை. விழித்த பிறகு தான் பொறுப்பு. பருவம் அடையும் வரை செய்யும் தவறுகளுக்கு கணக்கு இல்லை. ஆனால் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது, அவர்களுக்குத் தொழுகையை முறையாகக் கற்றுக்கொடுத்து, அதனைத் தொடங்குமாறு ஊக்கப்படுத்துங்கள். அபூ தாவூத் 495 மனநிலை சரியில்லாதவர் புத்தி சுவாதீனம் இல்லாதவரை அல்லாஹ் நிர்பந்திக்க மாட்டான். புத்தி வந்த பிறகு தான் பொறுப்பு. அல்லாஹ் எவ்வளவு கருணையானவன் பாருங்க. புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவர்களை அவன் தண்டிப்பதில்லை. ஆனால் நமக்கு புத்தியும், விழிப்பும், பருவமும் இருக்கு. அதனால் நம்முடைய ஒவ்வொரு செயலும் எழுதப்படுகிறது. "அணுவளவு நன்மை செய்தாலும் அதை காண்பான்" — அல்குர்ஆன் _அஸ்-ஸில்ஸால் 99:7 அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து, நன்மைகளை அதிகப்படுத்தட்டும். ஆமீன்.! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.1K views
1 months ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் மாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் உலகில் தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், கல்வியாளர்களின் மறைவால் கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகும், காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கமுனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை போட்டி போட்டுக்கொண்டு உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, ‘அந்தோ! நான் இவனுடைய இடத்தில் மண்ணறைக்குள் இருக்கக் கூடாதா?’ என்று ஏக்கத்துடன் கூறாத வரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் அதை மெய்ப்பிக்கும் வகையில் நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும். இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை வியாபாரத்திற்காக விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவுமாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவுமாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் தம் கால்நடைகளுக்கு நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 7121) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.8K views
1 months ago
இறைவன் அனைத்தையும் கவனிப்பவன். நாம் பிற மனிதர்களுக்குத் திட்டமிட்டுத் துன்பமோ, ஏமாற்றமோ அல்லது தேவையற்ற கஷ்டங்களையோ கொடுத்தால், அதற்குரிய தண்டனையை இந்த உலகத்திலோ அல்லது மறுமையிலோ நாமும் சந்திக்க நேரிடும் என்பதை இந்த #நபிமொழி உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.4K views
1 months ago
குழந்தைகளிடம் பாசமாகவும், கருணையோடும் நடந்து கொள்வது , #இஸ்லாத்தின் முக்கிய #நற்பண்பாகும். குடும்பத்தினரிடமும், மற்ற உயிரினங்களிடமும் நாம் காட்டும் #இரக்கமே, #இறைவன் நம் மீது காட்டும் #கருணைக்கு அடிப்படையாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
14.1K views
1 months ago
மர்யம் عليها السلام அவர்களுக்கு வாழ்க்கை துணை இருக்கவில்லை! அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை! கதீஜா رضي الله عنها அவர்களுக்கு 40 வயதில் தான் தனது சிறந்த வாழ்க்கை துணையை சந்திக்கக் கிடைத்தது! பாத்திமா رضي الله عنها அவர்களுக்கு பொருளாதர நெருக்கடிகளால் சோதனைகள் வந்தன! ஆஸியா عليها السلام அவர்களுக்கு வரலாற்றிலே மிக மோசமான ஒரு மனிதனுடனே வாழ வேண்டியது இருந்தது! இவ்வாறு இருந்தும், மிகச் சிறந்த பெண்கள் என அல்லாஹ் இவர்களை தான் தேர்ந்தெடுத்தான். சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியர்களாக இருக்கும் கண்ணியத்தையும் அல்லாஹ் இவர்களுக்குத் தான் கொடுத்தான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️