சொந்த ஊர்

Tamilpori Brk
475 views
8 days ago
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் மாணவனுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு என்ற செய்தி அபாண்டமானது உண்மைக்குப் புறம்பானது. இனவாத சிந்தனையுடன் இவ்வாறெல்லாம் செயற்படவே கூடாது. அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவோரின் முதன்மைப்படுத்தல் வரிசையில் 4 ஆவது இடத்திலேயே குறித்த முஸ்லிம் மாணவன் காணப்பட்டான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரதும் அவரையடுத்து கடுமையாக நோய்வாய்ப்பட்டுக் காணப்பட்ட இருவரதும் அவசர சிகிச்சைக்கு நாம் முன்னுரிமை வழங்காது நான்காம் நிலையில் காணப்பட்ட மாணவனுக்கு எவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை வழங்குவது? மனட்சாட்சி, மனிதாபிமானத்துடன் நாம் செயற்படும்போது இனவாத சாயம் பூசுவது கவலை தருகிறது நோய் அல்லது காயத்தின் பாரதூரதன்மை அறிந்து நாம் முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை வழங்கும்போது சிலர் இனவாத வாந்தி எடுத்து சமூகங்களுக்கு இடையில் மோதலையும் மனக்கசப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். திரிபுபடுத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரு முஸ்லிம் டாக்டர்களில் ஒருவரான வைத்தியர் ஏ. எம். ஆஷிக் அவர்கள் இதனை என்னிடம் தெரிவித்தார். -ஏ. எச்.சித்தீக் காரியப்பர் #தாயகம்
Tamilpori Brk
537 views
8 days ago
AI indicator
சுப்பிரமணியை உதைந்த இளைஞன் #தாயகம்