*இசையரசி.!*
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஞான கான சரஸ்வதி..
வேணுகான ஜானகி.!
போனதெங்கே சொல்லம்மா
பூமி இதனைத் தாங்குமா!
மெல்லிய உன் குரலாலே..
மெய்மறக்கச் செய்தவளே.!
நாதஸ்வர ஓசையிலே..
நாதமயமானாயோ.!
கூடுவிட்டு குயிலொன்று
பாடிவிட்டு பறந்ததுவோ.?
தோடிராகப் பாடலொன்று
பாடுவதை நிறுத்தியதோ?
மச்சானைப் பாத்தீகளா..
மனதுக்குள் இசைக்கிறதே
இச்சகமே.. இசையரசி..
எங்கு எடுத்து சென்றனையோ
கானத்தின் குரலரசி..
கவிகுயிலின் மொழியரசி
வானகமே போதுமென்று
சொல்லாமல் பறந்தனையோ
வி, லதா
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻வாழ்த்துக்கள்💐 #ஜானகி அம்மா