திருமுறை

A Mohan Raj
1.2K views
10 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்#ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்* *"மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்"* சைவ சமய 63 நாயன்மார்களில், 'வணிகர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். மூர்த்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். இவரது காலத்தில், வடுகக் கருநாடக மன்னன் (களப்பிரர்) மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன் என்பதால், சைவ சமயத்தை ஒடுக்க நினைத்தான். மூர்த்தி நாயனாரின் சிவத்தொண்டை முடக்க எண்ணி, நகரில் எங்கும் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் தடை விதித்தான். சந்தனம் கிடைக்காத நிலையிலும் தன் தொண்டை நிறுத்த விரும்பாத நாயனார், மனம் தளராமல் மதுரை திருவாலவாய்க் கோயிலுக்குச் சென்றார். சந்தனம் அரைக்கும் சானைக் கல்லில், தன் முழங்கையையே வைத்து இரத்தம் வழிய வழியத் தேய்க்கத் தொடங்கினார்.இவரது அசாத்திய பக்தியைக் கண்டு உருகிய சிவபெருமான், "அன்பனே! உன் உடலை வருத்தாதே; உனக்கு இடையூறு செய்த மன்னன் விரைவில் மடிவான்; அதன் பின் நீயே இந்நாட்டின் மன்னனாகிச் சைவத்தை வளர்ப்பாய்" என்று அசரீரியாக அருளினார். அசரீரி ஒலித்தபடியே, மறுநாள் காலையில் கொடுங்கோல் மன்னன் வாரிசு ஏதுமின்றி இறந்தான். அந்நாட்டுக் வழக்கப்படி, அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்க ஒரு பட்டத்து யானையின் கண்களைக் கட்டி, கையில் மாலையுடன் ஏவிவிட்டனர். அந்த யானை நேராகத் திருவாலவாய்க் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த மூர்த்தி நாயனாருக்கு மாலை சூட்டி, அவரைத் தன் முதுகில் ஏற்றி அரண்மனைக்கு அழைத்து வந்தது.அமைச்சர்கள் அவரை நாடாளக் கோரியபோது, நாயனார் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தார்: "சமண மதம் நீங்கி, சைவம் ஓங்குமானால் மட்டுமே நான் அரசாள்வேன்" அதோடு, உலகியல் ஆடம்பரங்களை மறுத்து, ஒரு சிவபக்தராகவே நாடாள முடிவு செய்தார். அதன்படி அவர் சூடிக்கொண்ட மூன்று சின்னங்கள்:திருநீறு – அரச அபிஷேகத்திற்குப் பதிலாகஉருத்திராக்கம் – அரச ஆபரணங்களுக்குப் பதிலாகசடாமுடி – அரச மகுடத்திற்குப் பதிலாக. இதனாலேயே இவர் பெரியபுராணத்தில் "மும்மையால் உலகாண்ட மூர்த்தி" என்று போற்றப்படுகிறார். நெடுங்காலம் தர்மநெறி தவறாமல், சைவ நெறியைப் பரப்பி அரசாட்சி செய்த நாயனார், இறுதியில் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார். பாடல் வரிகள் : *"மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்"* *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்* ஐந்துசீர் - கலித்துறை சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும் கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்பு நார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும் பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு. 1 சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண் வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம் பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம். 2 மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின் மை வைத்த சோலை மலையந்தர வந்த மந்த மெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம். 3 சூழும்இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள் தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார் யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும். 4 சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப் பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும் சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம். 5 மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற் செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை. 6 மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர் மெய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மை செம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில் எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால். 7 அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச் செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார் எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள் மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார். 8 நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம் ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார் மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம். 9 அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில் எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டா அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச் சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில். 10 கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல் மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர் சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான். 11 வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம் சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான். 12 வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்து நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான். 13 தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும் வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான். 14 செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள் முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் பேர் எக்கர்க்குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி. 15 அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார் தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார். 16 எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான் தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து. 17 புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும் வன்மைக் கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத் தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)என்று சார்வார். 18 காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில். 19 நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய. 20 கல்லின் புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து மூளை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரானார் அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு. 21 அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால் வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன. 22 இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம். 23 அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன் தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல. 24 இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான். 25 முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப் பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது போத. 26 அவ் வேளையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார். 27 தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும் சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார். 28 வேறு - அறுசீர் விருத்தம் பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன் நெடும் குடைக் கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார். 29 இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக் கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று. 30 வேறு - கலித்துறை செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக் கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார். 31 கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர் மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித் திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின் விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி. 32 நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம் தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப் பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப. 33 வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச் சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு தாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே. 34 மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர். 35 சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின் பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும். 36 வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத் திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார். 37 மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண் துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள். 38 வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வன் என்றார். 39 அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும் எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர் செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப. 40 வையம் முறை செய்குவன் ஆகில் வயங்கு நீறே செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள் ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார். 41 என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும் வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை ஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார். 42 மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார். 43 மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால் மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி. 44 குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன. 45 நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம். 46 ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி ஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக் காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து. 47 பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின் பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்று நாதன் கழற் சேவடி நண்ணினர் அண்ணலாரே. 48 அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம் முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப் புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம். 49 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
899 views
14 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* *மானக்கஞ்சாற நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான சிவபக்தரின் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் வளம் பொருந்திய கஞ்சாறு (தற்போது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனதாண்டவபுரம்) அவதரித்தவர், இவர் சிவபெருமானின் அடியார்கள் மேல் கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாக, தன் மகளின் திருமண நாளன்றே அவளது நீண்ட கூந்தலை அறுத்துத் தானமாக வழங்கிய உன்னத தியாகத்திற்காக அறியப்படுகிறார்.* *மானக்கஞ்சாற நாயனார் தன் மகளை மற்றொரு சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்திருந்தார். திருமண நாளன்று, மணமகன் வீட்டார் கஞ்சாறு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில், சிவபெருமான் ஒரு முதிய மகா விரதியார் (சிவனடியார்) கோலத்தில் நாயனாரின் இல்லத்திற்கு எழுந்தருளினார்.நாயனார் தனது மகளை அடியாரிடம் ஆசி பெறச் செய்தபோது, “இவளது நீண்ட கூந்தல் எனது பஞ்சவடி (பூணூல் போன்ற ஒரு ஆடை) செய்வதற்கு மிகவும் ஏற்றது” என்று அடியார் கூறினார். பெண்ணின் கூந்தலை வெட்டுவது மங்கலகரமான திருமணத்தில் பெரும் அபசகுனம் என்றும், மணமகன் அவளை நிராகரிக்கக்கூடும் என்றும் தெரிந்தும் நாயனார் சற்றும் தயங்கவில்லை. சிவனடியாரின் வார்த்தையைச் சிவக்கட்டளையாக ஏற்று, மணக்கோலத்தில் இருந்த தன் மகளின் அழகிய நீண்ட கூந்தலைத் தன் கத்தியால் உடனடியாக அறுத்து அவரிடம் சமர்ப்பித்தார்.* *நாயனாரின் ஈடிணையற்ற பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உடனே மறைந்து அன்னை பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இறைவனின் திருவருளால் அந்தப் பெண்ணின் கூந்தல் மீண்டும் பழையபடி அழகாக முளைத்தது. பின்னர் அங்கு வந்த கலிக்காம நாயனார் இந்த அதிசயத்தைக் கேட்டு, இறைவனின் லீலையை நேரில் காண முடியாமல் போனதை எண்ணி உருகி, அந்தப் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மையது கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும் காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர். 1 கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும் தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள். 2 புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண் முயல்காட்டும் மதிதோற்கும் முகங்காட்டக் கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள். 3 சேறணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர் தாறரியும் நெடுங்கொடுவாள் அனையவுள தனியிடங்கள். 4 பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம் ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உளவரங்கம் ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமும்உளவால் பூங்கணைவீ தியில்அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு. 5 Go to top மனைசாலும் நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும் வினைசாலும் உழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப் புனைசாயல் மயிலனையார் நடம்புரியப் புகல்முழவங் கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால். 6 அப்பதியிற் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம் செப்பவருங் குடிவிளங்கத் திருஅவதா ரஞ்செய்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமியவே ளாண்குடிமை வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார். 7 பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின் அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில்பூண்டார். 8 மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம் ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் ஈறில்பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையுநேர் கூறுவதன் முன்னவர்தம் குறிப்பறிந்து கொடுத்துள்ளார். 9 விரிகடல்சூழ் மண்ணுலகில் விளக்கியஇத் தன்மையராம் பெரியவர்க்கு முன்சிலநாள் பிள்ளைப்பே றின்மையினால் அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை யறியாதார் வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார். 10 Go to top குழைக்கலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால் இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார். 11 பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச் சிறந்தநிறை மங்கலதூ ரியம்முழங்கத் தேவர்பிரான் அறந்தலைநின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் தருள்பெருக்கிப் புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார். 12 காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின் பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் றாடையுடன் கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல் லடியொதுங்கி. 13 புனைமலர்மென் கரங்களினால் போற்றியதா தியர்நடுவண் மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்துமணிக் கனைகுரல்நூ புரம்அலையக் கழல்முதலாப் பயின்றுமுலை நனைமுகஞ்செய் முதற்பருவம் நண்ணினள்அப் பெண்ணமுதம். 14 உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலைவருத்த முறுவல்புறம் அலராத முகிண்முத்த நகையென்னும் நறுமுகைமென் கொடிமருங்குல் நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய. 15 Go to top திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் தீபமெனும் ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமராய கழல்ஏயர் பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர். 16 வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்தமணத் திறங்கேட்டே எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயுமெனச் சிந்தைமகிழ் வுறஉரைத்து மணநேர்ந்து செலவிட்டார். 17 சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக் குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கும் நேர்வாய மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்வகுத்தார். 18 மங்கலமாம் செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார் தங்குலநீள் சுற்றமெலாம் தயங்குபெருங் களிசிறப்பப் பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள் இடைநெருங்கக் கொங்கலர்தண் பொழில்மூதூர் வதுவைமுகங் கோடித்தார். 19 கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும் தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய. 20 Go to top வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண் ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம் உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாமணைவார். 21 முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில் கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி பண்டொருவன் உடலங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்தரளம் எனக்காதின் மிசையசையுங் குண்டலமும். 22 அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளிலிடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும். 23 ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும் அருமறைநூற் கோவணத்தின் மிசையசையும் திருவுடையும் இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும் திருவடியில் திருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க. 24 பொடிமூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க் கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத் தடிநீடும் மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார். 25 Go to top வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார் எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே யெழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்என் றுருகியஅன் பொடுபணிந்தார். 26 நற்றவராம் பெருமானார் நலமிகும்அன் பரைநோக்கி உற்றசெயல் மங்கலமிங் கொழுகுவதென் எனஅடியேன் பெற்றதொரு பெண்கொடிதன் வதுவையெனப் பெருந்தவரும் மற்றுமக்குச் சோபனம்ஆ குவதென்று வாய்மொழிந்தார். 27 ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனை யகம்நண்ணி மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக் கொண்டணைந்து பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார். 28 தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறம்நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த் தணங்கிவள்தன் மயிர்நமக்குப் பஞ்சவடிக் காமென்றார் பரவஅடித் தலங்கொடுப்பார். 29 அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப் பொருள்செய்தா மெனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட. 30 Go to top வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி ஓங்கியவிண் மிசைவந்தார் ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத் தூங்கியபொன் மலர்மாரி தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார். 31 விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக் கூத்தனார் எழும்பரிவு நம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச் செழும்புவனங் களிலேறச் செய்தோமென் றருள்செய்தார். 32 மருங்குபெருங் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள் நெருங்கவிடை மேல்கொண்டு நின்றவர்முன் நின்றவர்தாம் ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர் பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார். 33 தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர் துதிசெய்ய இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார் வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க மணக்கோலங் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காம னார்புகுந்தார். 34 வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச் சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பால் கேட்டருளிப் புந்தியினில் மிகவுவந்து புனிதனார் அருள்போற்றிச் சிந்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறங்கேட்டு. 35 Go to top மனந்தளரும் இடர்நீங்கி வானவர்நா யகரருளால் புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்புணர்ந்து தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாந் தலைசிறப்ப இனம்பெருகத் தம்முடைய எயின்மூதூர் சென்றணைந்தார். 36 ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க் கீந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமைஎன் அளவிற் றாமே மருவிய கமரிற் புக்க மாவடு விடேலென் னோசை உரிமையால் கேட்க வல்லார் திறமினி யுரைக்க லுற்றேன். 37 *"மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
2.9K views
16 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்* சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நூலில் 'இலைமலிந்த சருக்கம்' பகுதியில் இடம்பெற்றுள்ள கண்ணப்ப நாயனார் புராணம், திண்ணன் என்ற வேடன் தன் கண்களையே சிவபெருமானுக்குப் படித்து அசைக்க முடியாத அன்பை வெளிப்படுத்திய வரலாற்றைக் கூறுகிறது. இதில் 186 விருத்தப் பாக்கள் மூலம் அவரது தூய பக்தி விவரிக்கப்பட்டுள்ளது. பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு. 1 இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில் நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும். 2 குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யார்த்த வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும். 3 வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும் புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி அன்புறு காதல் கூர அணையும் மான் பிணைகளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும். 4 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும். 5 ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும். 6 மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால் அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான். 7 பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான் மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள். 8 அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள் இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப் பெரும் புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழையும் தட்டச் சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள். 9 பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார். 10 வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப் போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை. 11 பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே. 12 கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும் ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது. 13 கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த. 14 அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம் பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக் கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான். 15 கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும் இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித் தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற. 16 அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும் திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார் புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக் கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே. 17 வரையுறை கடவுட் காப்பு மறக்குடி மரபில் தங்கள் புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில். 18 வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப் பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம் திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார். 19 ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப் பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க. 20 பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித் தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில். 21 தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல் வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார். 22 பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப் பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோச்ச இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி. 23 துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப் பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல் அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும் குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து. 24 அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும் சினை மலர்க் காவுள் ஆடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி. 25 கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து இடு மரத் திரளில் கட்டி வளர்ப்பன எண்ணிலாத. 26 அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல் புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச் சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார். 27 தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால் சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான். 28 வேடர் தம் கோமான் நாகன் வென்றி வேள் அருளால் பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம். 29 மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச் சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார். 30 மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமான். 31 பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு வானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும் கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார். 32 சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர் குலம் விளங் கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள். 33 ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி மொய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச் செய் வரை உயர்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர். 34 செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனிக் கவளம் கொள்வார் நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள். 35 அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார் இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார். 36 பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக் காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார் மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார். 37 தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடு திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள். 38 குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம் அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர். 39 வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத் தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால் பொங்கொளிக் கரும் போர்ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள். 40 பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக் கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம். 41 வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல் எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப் புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர்வதன் பொலிவு போல்வார். 42 வேறு - எண்சீர் விருத்தம் இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம் கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின் பெரு முயற்சி மெலிவான் ஆனான். 43 அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும் அடலேனம் புலி கரடி கடமை ஆமா வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத் திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார். 44 சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன் என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக் கொண்மின் என்ற போதின் அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இம் மாற்றம் அறைகின்றார்கள். 45 இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர். 46 சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்ட தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினொடும் கடிது வந்தாள். 47 கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப் பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள். 48 நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம் அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள். 49 கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலங் கவர் வென்றி மேவு மாறு காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான். 50 மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச் சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக் கொற்றவனத் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள். 51 தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள் மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணிநீல மலைஒன்று வந்தது என்னக் கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான். 52 முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்புபோல என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய் மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும் உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடை தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே. 53 தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சாய்வு தோன்ற வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத் தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான். 54 நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய் வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என விடை கொடுத்தான் இயல்பில் நின்றான். 55 செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை கொண்டு புறம் போந்து வேடரோடு மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின் புலர் காலை வரிவிற் சாலைப் பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை தொழில் கை வினைஞருடன் பொலிந்து புக்கார். 56 வேறு - கலிநிலைத்துறை (ஐந்து சீர்) நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து. 57 முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி மின்னில் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக. 58 கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேரக் கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல் தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க. 59 மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத் தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச் சேர்விற் பொலி கங்கண மீது திகழ்ந்த முன் கைக் கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி. 60 அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத் திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி நிரையில் பொலி நீளுடை தோள் சுரி கைப்புறம் சூழ் விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி. 61 வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன் சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி. 62 அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித் துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச் செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார். 63 பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில் சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார். 64 மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் பானற்குல மாமலரில் படர் சோதியார் முன் தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள். 65 நின்று எங்கும் மொய்க்கும் சிலைவேடர்கள் நீங்கப் புக்குச் சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல நன்றும் பெரிது உன்விறல் நம்மளவு அன்று இது என்றாள். 66 அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச் செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல்கொண்டு எழுந்து போந்தார். 67 வேறு - எழுசீர் விருத்தம் தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையார் வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார் மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே. 68 வன் தொடர்ப் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன் சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய் ஒன்றொடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம். 69 போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்ப அச் சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முனே கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள் வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார். 70 நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத் தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக் கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார். 71 கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம் மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும் காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே. 72 நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர் வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான் பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங் கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே. 73 தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம் துன்றி நின்ற வென்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார். 74 ஒடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம் நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர் கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார். 75 வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன் மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் செஞ்சரத்தினோடு சூழல் செய்த கானுள் எய்தினார். 76 வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக் கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம். 77 ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம் கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார். 78 வேறு - கலிவிருத்தம் (நான்கு சீர்) தாளறுவன இடை துணிவன தலை துமிவன கலைமா வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே. 79 வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப் பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள். 80 பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக் கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத் தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள். 81 கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால் வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே. 82 நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான் தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக் கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே. 83 கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால் மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி. 84 பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர் புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அளவுளவே. 85 துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார் வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார் கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவோர். 86 இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக் கைவரைகளும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம் பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில். 87 போமது தனை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல் ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார். 88 நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில் காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல். 89 குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடி குரல் நீள் பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித் துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி சூழல் சென்று அதனிடை நின்றது வலிதெருமரமர நிரையில். 90 அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன் கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர். 91 வேறு - அறுசீர் விருத்தம் வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன் காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் ஆடவன் கொன்றான் அச்சோ என்று அவர் அடியில் தாழ்ந்தார். 92 மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து வெற்றி கொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார். 93 என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான். 94 பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும் அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார் செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை. 95 நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவோம் என்ன நாணன் காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச் சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான். 96 ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம் போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல் மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும் தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம். 97 உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார். 98 ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார். 99 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம் களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார். 100 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான். 101 முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும். 102 நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும் பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில். 103 திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார். 104 மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார். 105 நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற. 106 வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன் இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார். 107 கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப் பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான். 108 வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக் குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன் பறைந்தோர் பார்ப்பான் அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான். 109 உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில் திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ் அண்ணலைப் பிரிய மாட்டாத அளவில் ஆதரவு நீட. 110 இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று. 111 போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர் காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர் நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார். 112 ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார். 113 முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார். 114 காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன் கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன். 115 அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான் இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான் நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான். 116 என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு. 117 கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார். 118 மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான். 119 தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல் ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில் ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார். 120 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண் ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார். 121 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம். 122 இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின் முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில் வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை விளைத்த அன்பு உமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார். 123 தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச் சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து. 124 கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார். 125 அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான். 126 அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச் செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார். 127 சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார். 128 கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத் தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும். 129 விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும் இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும். 130 செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை. 131 வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக் கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி. 132 ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும் வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின் மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார். 133 வேறு - கொச்சகக் கலிப்பா மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி மெய் காட்டும் அன்புடைய வில்லியார் தனி வேட்டை எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக் கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில். 134 எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக் கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார். 135 வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார். 136 மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் ஆவதே எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார். 137 பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும் செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார். 138 பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி வழுவில் திரு மஞ்சனமே முதலாக வரும் பூசை முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார். 139 பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் துணிந்த மறை மொழியாலே துதி செய்து சுடர்த் திங்கள் அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்தினிடைச் சார்ந்தார். 140 இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால் மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார் கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச் செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன். 141 திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி. 142 பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும் அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் துயில் இடையில் கிடை யெய்து தொடர்ந்து கடமைகள் எய்து வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார். 143 பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால் வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார். 144 இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து. 145 வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார். 146 எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத் திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது. 147 நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அது கொண்டு வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் தூய் மஞ்சனமும் ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார். 148 வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள் தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார். 149 ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால் ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார். 150 இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார் எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார். 151 மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர் தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித் தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால் ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுகுவரால். 152 நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார். 153 முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத் தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?. 154 அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன் உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என. 155 அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று. 156 அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார். 157 பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல் அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால் விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால். 158 உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும் பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால் ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப் பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம். 159 இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால் செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா. 160 வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால் செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில் எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய. 161 மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும் இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும் முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல. 162 உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போயினார். 163 கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப் புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார் மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித் துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற. 164 முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப் பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல் பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார். 165 வேறு - அறுசீர் விருத்தம் கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம் வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித் தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி. 166 மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார். 167 இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும் அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில். 168 அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ் வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார். 169 வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார். 170 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும். 171 வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார். 172 வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும் நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார. 173 பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ? ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ? மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ? ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும். 174 என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும் மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப் பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார். 175 நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப் புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார். 176 மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக் கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும் இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார் உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார். 177 இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண் முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப. 178 நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேறப் பாய்ந்தார் குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார். 179 வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில் உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார். 180 கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று. 181 கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு எண்ணுவார் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர். 182 செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர் தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்றே. 183 கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும் ஊனமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப. 184 பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்த ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில் மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார். 185 மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர் தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன். 186 *"கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.3K views
22 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* *ஏனாதிநாத நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில், சேக்கிழாரால் பாடப்பட்ட உன்னதமான சிவனடியார் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான எயினனூர் என்ற தலத்தில் அவதரித்தவர் ஆவார். திருநீற்றின் மீது கொண்ட பக்தி மற்றும் அடியார்களுக்குச் செய்யும் தொண்டிற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. அரசர்களுக்கு வாள்வித்தைப் பயிற்சி அளிக்கும் தலைமை வாளாசிரியர். வாள் வித்தையின் மூலம் ஈட்டும் பொருள் முழுவதையும் சிவனடியார்களுக்கு அமுது படைக்கவும், திருப்பணிகள் செய்யவும் செலவிட்டார். திருநீறு அணிந்தவர்களைச் சிவனாகவே மதிக்கின்ற மாபெரும் சிவதொண்டராக விளங்கினார்.* *ஏனாதிநாதரிடம் வாள் பயிற்சி பெறப் பலரும் வந்ததால், அவரிடம் கல்வி பயின்ற சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. இதனால், அதே ஊரில் வாள் வித்தை கற்பித்து வந்த இவருடைய தாயாதி உறவினரான அதிசூரன் என்பவனுக்கு வருவாய் குறைந்தது. வஞ்சகமும் பொறாமையும் கொண்ட அதிசூரன் தன் சுற்றத்தாரைத் திரட்டிக்கொண்டு ஏனாதிநாதருடன் போரிட முற்பட்டான். இரு தரப்பிற்கும் இடையே கடுமையான போர் மூண்டது. வில், வாள், வேல் ஏந்தி நடந்த இந்தப் போரில் ஏனாதிநாதரின் வீரத்திற்கு முன்னால் அதிசூரனின் படை தோற்று ஓடியது.தோல்வியால் அவமானம் அடைந்த அதிசூரன், நேர் வழியில் ஏனாதிநாதரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.* *ஏனாதிநாதர் திருநீறு (வெண்ணீறு) அணிந்த சிவனடியார்களைத் தன் உயிர் இருக்கும் வரை எதிர்க்க மாட்டார் என்ற ரகசியத்தை அதிசூரன் அறிந்திருந்தான்.ஒரு நாள் விடியற்காலையில், ஏனாதிநாதருக்கு ஒரு தூது அனுப்பினான். "நம் சுற்றத்தார் அழியாமல் நாம் இருவர் மட்டும் தனியிடத்தில் போரிட்டு வெல்பவர் இத்தொழிலை வைத்துக் கொள்வோம்" என்று அழைத்தான்.அதனை ஏற்ற ஏனாதிநாதர் தனியாகப் போர்க்களத்திற்குச் சென்றார்.அதிசூரன் தன் நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு, அதன் மேல் எவருக்கும் தெரியாதவாறு கேடயத்தால் மறைத்துக் கொண்டு வந்தான்.போர் தொடங்கியவுடன், ஏனாதிநாதர் அவனை வெட்ட முற்படும் வேளையில் அதிசூரன் தன் கேடயத்தை விலக்கித் தன் நெற்றியில் இருந்த திருநீற்றைக் காட்டினான்.* *அதிசூரனின் நெற்றியில் திருநீற்றைக் கண்ட ஏனாதிநாதர் திடுக்கிட்டார். "இவர் சிவபெருமானின் அடியவராகிவிட்டார்; இவரை நான் கொல்லக் கூடாது" என்று நினைத்தார்.அதே நேரத்தில், ஆயுதத்தை கீழே போட்டால் ஆயுதமில்லாதவரைக் கொன்ற பழி அதிசூரனுக்கு வந்து சேரும் என்று அஞ்சினார். எனவே, தன் கையில் வாளையும் கேடயத்தையும் ஏந்தியவாறே, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அசையாது நின்றார். வஞ்சகனான அதிசூரன், ஏனாதிநாதரின் நிலையைப் பயன்படுத்தித் தன் வாளால் அவரை வெட்டிக் கொன்றான். திருநீற்றுக்காகத் தன் உயிரையே ஈந்த ஏனாதிநாதரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி அவருக்கு சிவலோக முக்தி அளித்தருளினார். இப்புராணம் நமக்குத் திருநீற்றின் பெருமையையும், சிவனடியார் வேடத்தின் மீது ஒரு பக்தன் வைக்க வேண்டிய உன்னத மதிப்பையும் உணர்த்துகிறது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* கொச்சகக் கலிப்பா புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும் தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில் வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர். 1 வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய் வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில் ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார். 2 தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார். 3 வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார். 4 நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான். 5 மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான். 6 தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம் மேனாளுந் தான் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான். 7 கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப் பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான். 8 தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான். 9 வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா. 10 ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்து சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார். 11 புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும் விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார் மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள். 12 வந்தழைத்த மாற்றான் வயப் புலிப் போத்து அன்னார் முன் நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால் இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும் சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென. 13 என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக் கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார். 14 வேறு - மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்த அறுசீர் சந்த விருத்தம் மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர் காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர். 15 கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாளொளி வட்ட முனைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன. 16 வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர் செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன. 17 வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில். 18 குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டன இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை. 19 நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர் தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும். 20 கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர். 21 பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டர்கள். 22 அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன. 23 திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர். 24 வேறு - கொச்சகக் கலிப்பா இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார். 25 வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண் எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத் துணித்தார். 26 தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார். 27 இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு அன்னவர் தம் முன் சென்று . அதி சூரன் நேர் அடர்ந்தான். 28 மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச் சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப் பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான். 29 போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த மான மிக மீதூர மண் படுவான் கண் படான் ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமருவான் ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான். 30 சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத் தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான். 31 இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில் வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார். 32 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து மற்றவன் முன் சொல்லி வரக்குறித்த அக் களத்தே பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார். 33 தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1 தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2 ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான். 34 வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான். 35 வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான். 36 அடல் விடையேறு என்ன அடர்த்தவனைக் கொல்லும் இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர் புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக் கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார். 37 கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என் அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று. 38 கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார். 39 அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார். 40 மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப் பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார். 41 தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும் நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம். 42 *"ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.4K views
23 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* *எறிபத்த நாயனார் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணத்தில், முதற் காண்டத்தில் உள்ள "இலை மலிந்த சருக்கம்" என்னும் பகுதியில் ஒன்பதாவது புராணமாக இடம்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் வரும் "இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்" என்ற அடியை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிப்போரைத் தன் கையில் எப்போதும் இருக்கும் 'மழு' (கோடரி) என்னும் ஆயுதத்தால் தண்டிப்பதே இவரின் சிவத்தொண்டாக இருந்தது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் மல்லல் நீர்ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்துஉற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம். 1 பொன் மலைப்புலி வென்றுஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந்நெறி வழியே ஆகஅயல் வழி அடைத்த சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகர மாகும் தொன்நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர். 2 மாமதில் மஞ்சுசூழும் மாளிகை நிரை விண் சூழும் தூமணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும் தாம் மகிழ்ந்து அமரர்சூழும் சதமகன் நகரம் தாழ. 3 கடகரி துறையில் ஆடும்களி மயில் புறவில் ஆடும் அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டுஆடும் படரொளி மறுகில் ஆடும்பயில் கொடி கதிர் மீதுஆடும் தடம்நெடும் புவி கொண்டாடும் தனிநகர் வளமை ஈதால். 4 மன்னிய சிறப்பின் மிக்கவள நகர் அதனில் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்கதொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில். 5 பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக்கோயில் மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருட்பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார். 6 மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழையரி என்னத் தோன்றிமுரண் கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார். 7 அண்ணலார் நிகழும் நாளில் ஆனி லைஅடிக ளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம்பூப் பறித்து அலங்கல் சாத்தி உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒருநாள் முன் போல். 8 வைகறை உணர்ந்து போந்துபுனல் மூழ்கி வாயும் கட்டி மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்லகமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப் பள்ளித் தாமம் கொய்து. 9 கோலப் பூங்கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலியநேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை வந்துஉதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார். 10 மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள்குலப் புகழ்ச் சோழனார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகு மாநவமி முன்னாள். 11 மங்கல விழைவு கொண்டுவரு நதித் துறை நீராடிப் பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போகஎதிர் பரிக் காரர் ஓடத் துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே. 12 வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் சென்றுஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல வன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள் பூக்கூடை தன்னைப் பின்தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்துமுன் பறித்துச் சிந்த. 13 மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண்டு அகலப் போக நூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண்டு அடிக்க வந்தார். 14 அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்றுபோக மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்து பின்செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால்தரை அடித்து எழுந்து நின்று செப்புஅரும் துயரம்நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார். 15 வேறு - கலிவிருத்தம் களி யானையின் ஈர்உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!. 16 ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே வேறுள் நினைவார் புரம்வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!. 17 தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சே துயரம் கெடநேர் தொடரும் மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள் செஞ்சே வடியாய்! சிவதா! சிவதா!. 18 நெடியோன் அறியா நெறியார் அறியும் படியால் அடிமைப் பணிசெய்து ஒழுகும் அடியார் களில்யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய. 19 வேறு - அறுசீர் விருத்தம் என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளாமூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்கு என்றும்வழிப் பகை களிறே அன்றோ கொன்று அதுவீழ்ப்பன் என்று கொலை மழுஎடுத்து வந்தார். 20 வந்தவர் அழைத்த தொண்டர்தமைக் கண்டு வணங்கி உம்மை இந்தவல் இடும்பை செய்த யானை எங்குற்றது என்ன எந்தையார் சாத்தும் பூவைஎன் கையில் பறித்து மண்மேல் சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றது இத்தெருவே என்றார். 21 இங்கது பிழைப்பது எங்கே இனிஎன எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையில் சென்றுபொரு கரி தொடர்ந்து பற்றும்* செங்கண் வாள்அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார். (*தொடர்ந்து செல்லும் என்றும் பாடம்) 22 கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும் அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார். 23 பாய்தலும் மிசைகொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம் தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து தோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர். 24 கையினைத் துணித்த போதுகடல் எனக் கதறி வீழ்ந்து மைவரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்ஆக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார். 25 வெட்டுண்டு பட்டுவீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர்கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார். 26 மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக்குரை கழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார். 27 வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற கிளர்மணித் தோள் அலங்கல் சுரும்பினம் கிளர்ந்து பொங்க அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் இளஅரி ஏறுபோல எழில் மணி வாயில் நீங்க. 28 தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னைவல் விரைந்து எழமுன் சாற்ற அந்தரத்து அகலம் எல்லாம் அணிதுகில் பதாகை தூர்ப்ப எந்திரத்தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி. 29 வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல்லெழும் உசலம் நேமிமழுக் கழுக்கடை முன் ஆன பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்தவன் கண் எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும். 30 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டைவியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம்பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான்கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பிமல்க. 31 தூரியத் துவைப்பும் முட்டுஞ்சுடர்ப் படை ஒலியும் மாவின் தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் வீரர்தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல்எனக் கலித்த அன்றே. 32 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழுசேனை எல்லாம் மண்ணிடை இறுகால் மேன்மேல் வந்து எழுந்ததுபோல் தோன்றத் தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மாவீதி சென்றான். 33 கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளம் குறுகச் சென்றான் பகைபுலத்து அவரைக் காணான் விடுசுடர் மழுஒன்று ஏந்தி வேறு இருதடக் கைத்தாய அடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான். 34 பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவரென்று ஓரான் வென்றவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான். 35 அரசன் ஆங்கருளிச் செய்ய அருகு சென்றணைந்து பாகர் விரை செய்தார் மாலையோய்நின் விறற் களிற்று எதிரேநிற்கும் திரை செய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்குசெய்தார் பரசு முன்கொண்டு நின்ற இவர்எனப் பணிந்து சொன்னார். 36 குழை யணிகாதி னானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின்அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டுஎன்று உட்கொண்டு மழை மதயானை சேனை வரவினை மாற்றி மற்ற உழை வயப்புரவி மேல் நின்று இழிந்தனன் உலகமன்னன். 37 மைத்தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரேஇந்த மெய்த்தவர் சென்றபோது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத்தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்என் கொலோ பிழைஎன்று அஞ்சி. 38 செறிந்தவர் தம்மைநீக்கி அன்பர் முன்தொழுது சென்று ஈது அறிந்திலேன் அடியேன் அங்குக் கேட்டது ஒன்றதுதான் நிற்க மறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார். 39 மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னி இத்துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன்பறித்துச் சிந்தத் தரைபடத் துணித்து வீழ்த்தேன். 40 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீதங்கு கடாவு வாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் ஈதிங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன். 41 அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ்வப ராதத்துக்கு இங்கிது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாம் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார். 42 வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன் அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று தந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத் தான்துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார். 43 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கெனை வாளினால் கொன்று என்பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால் என்றே ஆங்கவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி. 44 வன்பெருங் களிறுபாகர் மடியவும் உடை வாளைத் தந்து என்பெரும் பிழை யினாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு முன்பெனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவென்று எண்ணி. 45 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம்கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு இது என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்று பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும். 46 வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளரொளி விசும்பின் மேல் வந்தெழுந்தது பலரும் கேட்ப. 47 தொழுங்கை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச் செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்றென்று அங்கு எழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்தது அன்றே. 48 ஈரவே பூட்டும் வாள்விட்டு எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள் போற்றிப் பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார். 49 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்றுஅத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரும் நின்றார். 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
2.1K views
28 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான விறன்மிண்ட நாயனார் புராணம் என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விறன்மிண்ட நாயனாரின் தூய்மையான சிவனடியார் பக்தியையும், அவரே சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு மூல காரணமாக அமைந்த வரலாற்றையும் விவரிக்கும் ஒரு முக்கியப் பகுதியாகும். இவர் சேர நாட்டுத் திருச்செங்குன்றூரில் (தற்போதைய செங்கணூர்) வேளாளர் குலத்தில் அவதரித்தார். சிவபெருமானை வணங்குவதற்கு முன்பாக, அவரது அடியார்களை (சங்கம வழிபாட்டை) வணங்க வேண்டும் என்ற தீவிர அடியார் பக்தி கொண்டவர். சேர நாட்டிலிருந்து சோழ நாட்டுத் திருத்தலங்களை தரிசிக்கப் புறப்பட்டு, இறுதியில் திருவாரூர் திருத்தலத்தை வந்தடைந்தார். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள 'தேவாசிரியன் மண்டபத்தில்' எந்நேரமும் ஏராளமான சிவனடியார்கள் வீற்றிருப்பார்கள். ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனார் தியாகராஜப் பெருமானை தரிசிக்க அவசரமாக வந்தபோது, தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களை வணங்காமல் நேராகக் கோயிலுக்குள் சென்றார். இதைக் கண்ட விறன்மிண்டர் பெரும் கோபமுற்று, "அடியார்களை வணங்காமல் செல்லும் இவன் (சுந்தரன்) திருக்கூட்டத்திற்குப் புறம்பானவன்; அவனுக்கு அருள் செய்யும் தியாகேசனும் புறம்பானவன்!" எனப் பிரகடனம் செய்தார். அடியார் பக்தியின் மேன்மையை உலகிற்கு உணர்த்த விரும்பிய தியாகராஜப் பெருமான், சுந்தரரின் கனவில் தோன்றி சிவனடியார்களின் பெருமைகளைப் பாடுமாறு பணித்தார். இறைவனே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் 63 நாயன்மார்களின் பெருமைகளைப் போற்றி 'திருத்தொண்டத் தொகை' பதிகத்தைப் பாடி அருளினார்.சுந்தரரின் அடியார் பக்திப் பாடலைக் கேட்டு நெகிழ்ந்த விறன்மிண்ட நாயனார், தன் பிழையை உணர்ந்து சுந்தரரை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தார்.விறன்மிண்ட நாயனார் தன் வாழ்நாள் முழுவதும் அடியார் தொண்டையே சிவத் தொண்டாகச் செய்து, இறுதியில் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்து கணநாதராகும் பேற்றினைப் பெற்றார். தமிழ் மாதமான சித்திரை மாத அசுவினி (அல்லது திருவாதிரை) நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது. பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப் பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு திரை செய் கடலின் பெருவளனும் திருந்து நிலனின் செழு வளனும் வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு. 1 வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும் வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர். 2 என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான் அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார் மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம். 3 அப் பொற் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர். 4 நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார் முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார். 5 பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர் நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார். 6 திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரிய னிடைப் பொலிந்து மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார். 7 சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம் பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப் பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால் கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார். 8 ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின் சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள் ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியா ருடனாம் உளது என்றால் ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார். 9 ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர் தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழற்கீழ் மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார். 10 வேறு பிறிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும் பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம். 11 *"விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.4K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்* *முதலாவது சருக்கமான தில்லை வாழ் அந்தணர் சருக்கத்தில் இடம் பெற்றுள்ள மூன்றாவது புராணம் இயற்பகை நாயனார் புராணம் ஆகும்.* *"இல்லையென்னாத இயற்பகைக்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் போற்றிய இப்புனிதரின் வாழ்க்கை வரலாறு, பக்தி மற்றும் அடியார் தொண்டின் உச்சத்தைக் காட்டுகிறது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்* எண்சீர் விருத்தம் சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப் பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர் நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம். 1 அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார் செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார் மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார். 2 ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால் நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில். 3 ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம் தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார். 4 வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுத எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார். 5 என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர் கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார். 6 என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார். 7 இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக் கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை விதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன மது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார். 8 இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாதர் நீர் உரைத்தது ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள். 9 மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே யாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக் காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார். 10 வேறு - அறுசீர் விருத்தம் என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல் ஒன்றிது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப் பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி. 11 வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே தோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை நீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார். 12 மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார். 13 வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க காலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப் பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்ப் பரவம் பொங்க மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார். 14 வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில் அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப் பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார். 15 மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும் இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம் தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று. 16 பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப் பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல் எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார். 17 ஏட! நீ என் செய்தாயால் இத்திறம் இயம்பு கின்றாய் நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஒட்டோம் என்றார். 18 மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு நற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர். 19 நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும் சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம் ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே. 20 சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றடு புலியேறென்ன அமர் விளையாட்டில் மிக்கார். 21 மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில் ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக் காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார். 22 சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித் திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர். 23 மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும் ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில் ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார். 24 திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார். 25 இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித் திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே. 26 தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர அவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி இவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார். 27 செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப் பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான். 28 இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம் செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான். 29 அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின் இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக் குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான். 30 சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார் பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார். 31 சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன. 32 விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று. 33 திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம் மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப் பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார். 34 வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில் ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார். 35 இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடும் மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன். 36 *"இல்லையென்னாத இயற்பகைக்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
2.3K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்* *சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணத்தின் (பெரியபுராணம்) முதற்காண்டம், தில்லை வாழ் அந்தணர் சருக்கத்தில் உள்ள தில்லை வாழ் அந்தணர் புராணம், சிவபெருமானின் நடனத் தலமான சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களின் தொன்மையையும், அவர்களின் சிவபக்தியையும் சிறப்பித்துக் கூறுகிறது.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத்தொகையில், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதன்முதலில் வைத்துப் பாடப்பட்ட அடியார்கள் இவர்களாவர்.* *மூவாயிரவர்:சிவபெருமானின் திருவுருவமான 'சிதம்பர ரகசியத்தை' தினமும் பூசித்து வழிபடக்கூடிய, முப்பத்து மூவர் (மூவாயிரம்) என்கின்ற சிறப்பு வாய்ந்த அந்தணர்கள் ஆவர்.* *மறைவழக்கினர்: வேதங்கள், ஆகமங்கள் மற்றும் அறுதொழில்களில் சிறந்து விளங்கும் இவர்கள், தங்களை நாடி வரும் அடியார்களை வணங்கி உபசரிப்பதையே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்.* *சேக்கிழாரின் வாழ்த்துஇந்நூலின் தொடக்கமாக சேக்கிழார் பெருமான், தில்லைப் பொது நடராஜப் பெருமானை "ஆதியாய் நடுவும் ஆகி அளவு இலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்..." எனப் போற்றிப் பாடியுள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் இந்த நடராஜப் பெருமானின் திருவடிகளைத் தினமும் வணங்கி, அதன் அருள் வழியில் நீடு வாழ்ந்து வந்தவர்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர்.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்* அறுசீர் விருத்தம் ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி. 1 கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி. 2 போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார். 3 பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணித் தலை நின்று உய்த்தே அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார். 4 வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும் அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார். 5 மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார் அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார் உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார் பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார். 6 ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார் தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும் மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார். 7 செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார். 8 இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால். 9 அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம். 10 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
2K views
2 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து மூத்த நாயனார் அருளிய திருஇரட்டை மணிமாலை* *பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள கபிலதேவ நாயனார் இயற்றிய மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, விநாயகப் பெருமானைப் போற்றும் மிகத்தொன்மையான சிற்றிலக்கியமாகும். வெண்பா மற்றும் கட்டளைக்கலித்துறை பாவகையில் 20 பாடல்களைக் கொண்டு, விநாயகரின் அருளையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் இந்நூல், சைவ சமயத்தில் தனித்துவம் வாய்ந்தது.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து மூத்த நாயனார் அருளிய திருஇரட்டை மணிமாலை* வெண்பா திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை. 1 கட்டளைக் கலித்துறை கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில் எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும் பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத் திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே. 2 வெண்பா அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம் இடியவலோ டெள்ளுண்டை கன்னல் - வடிசுவையில் தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே வாழ்வானை வாழ்த்தியே வாழ். 3 கட்டளைக் கலித்துறை வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டைஎல் லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான் வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே. 4 வெண்பா விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து. 5 கட்டளைக் கலித்துறை கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க் கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே. 6 வெண்பா யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார் மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என் உள்ளக் கருத்தின் உளன். 7 கட்டளைக் கலித்துறை உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத் திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக் களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே. 8 வெண்பா கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் பணங்கொண்ட பாந்தட் சடைமேல் - மணங்கொண்ட தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம். 9 கட்டளைக் கலித்துறை போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல் நாகபந் தத்தந்த நாளம் பிறையிறை யான்பயந்த மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர் ஏகதந் தத்தெந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே. 10 வெண்பா ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை முக்கட் கடாயானை முன். 11 கட்டளைக் கலித்துறை முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத் தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மேயுமையாள் தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே. 12 வெண்பா சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட் டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர் பண்டத்தான் தாள்பணியாப் பண்டு. 13 கட்டளைக் கலித்துறை பண்டந்த மாதரத் தானென் றினியன வேபலவும் கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூருணர்வில் கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றை யொற்றை வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே. 14 வெண்பா வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய் தாட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள் காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை வேந்தா உடைத்தமரர் விண். 15 கட்டளைக் கலித்துறை விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் ணுஞ்செய் வினைப்பயனும் பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமா கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண் டார்கரு மாமிடற்றுப் பெண்ணுதல் நும்பிரி யாவொரு பாகன் பெருமகனே. 16 வெண்பா பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர வருவான்தன் நாமம் வரும். 17 கட்டளைக் கலித்துறை வருகோட் டருபெருந் தீமையும் காலன் தமரவர்கள் அருகோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தஅன்பு தருகோட் டருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும் ஒருகோட் டிருசெவி முக்கட்செம் மேனிய ஒண்களிறே. 18 வெண்பா களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன். 19 கட்டளைக் கலித்துறை நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேஎன்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே. 20 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
15.6K views
2 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறம்* திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு பிரபந்த இலக்கியமாகும். கண்ணப்ப நாயனாரின் ஒப்பற்ற சிவபக்தியையும், அவர் இறைவனுக்காகத் தன் கண்களைப் பெயர்த்து அளித்த வீரச்செயலையும் சிறப்பித்துப் பாடும் நூலாகும். இப்பெயரில் பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் உள்ளன. நக்கீரதேவ நாயனார் மற்றும் கல்லாட தேவ நாயனாரால் அருளப்பட்டது. பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறம்* திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது தேன்அழித்து ஊன்உண் கானவர் குலத்தே, திரிவது பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது (5) வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக் கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை (10) வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார் இரவும் பகலும் இகழா முயற்றியொடு மடைத்த தேனும் வல்நாய் விட்டும் சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும் பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத் (15) தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே மறப்புலி கடித்த வன்திரள் முன்கை திறற்படை கிழித்த திண்வரை அகலம் எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு (20) செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண் கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்து அடுபடை பிரியாக் கொடுவிற லதுவே,மனமே மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள் அகப்படு துயருக்கு அகனமர்ந் ததுவே, இதுஅக் (25) கானத் தலைவன் தன்மை, கண்ணுதல் வானத் தலைவன் மலைமகள் பங்கன் எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும் புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது (30) வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற் சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி (35) எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத் தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து எய்து துணித்திடும் துணித்த விடக்கினை விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு (40) அண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத் தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால் மஞ்சன மாக முகந்து மலரெனக் குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் (45) கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும் வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில் திருக்கா ளத்தி எய்திய சிவற்கு வழிபடக் கடவ மறையோன் முன்னம் துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி (50) நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும் பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்து அருச்சனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித் திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி (55) மந்திரம் எண்ணி வலமிடம் வந்து விடைகொண் டேகின பின்தொழில் பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத் (60) தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில் பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக் கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா (65) அன்பொடு கானகம் அடையும் அடைந்த அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும் உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி ஆதரிக்கும் அந்தணன் வந்து சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் (70) பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும் இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று கரந்திருந் தவண்அக் கானவன் வரவினைப் பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று (75) வந்தவன் செய்து போயின வண்ணம் சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு மற்றை நாளும்அவ் வழிப்பட்டு இறைவ உற்றது கேட்டருள் உன்தனக்கு அழகா நாடொறும் நான்செய் பூசனை தன்னை (80) ஈங்கொரு வேடுவன் நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை (85) நின்திருக் கோயிலில் இட்டுப் போமது என்றும் உன்தனக் கினிதே எனைஉருக் காணில் கொன்றிடும் யாவ ராலும் விலக்குறுங் குணத்தன் அல்லன் என்நும் திருக்குறிப்பு என்றவன் சென்ற அல்லிடைக் (90) கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச் சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன் பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக் கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக (95) ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில் திருவுருக் காட்டி அருளிப் புரிவொடு பூசனை செய்யும் குனிசிலை வேடன் குணமவை ஆவன உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர் (100) அவனுகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே, அவன் செருப்படி யாவன விருப்புறு துவலே எழிலவன் வாயது தூய பொற்குடமே அதனில் தங்குநீர் கங்கையின் புனலே புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே (105) அதற்கிடு தூமலர் அவனது நாவே உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப் புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே, அவன்தலை தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த அங்குலி கற்பகத் தலரே அவனுகந்து (110) இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர் இட்ட நெய்பால் அவியே இதுவெனக்கு உனக்கவன் கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று (115) இறையவன் எழுந்த ருளினன் அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து மனமிகக் கூசி வைகறைக் குளித்துத் தான்முன் செய்வதோர் பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து (120) தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும் வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக் கடும்பகல் வேட்டையில் காதலித் தடித்த உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத் தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் (125) செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன் திருமேனியின் மூன்று கண்ணாய் ஆங்கொரு கண்ணிலும் உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப் பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் (130) கையில் ஊனொடு கணைசிலை சிந்த நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச் சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர் அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு இன்மை கண்டு நன்மையில் (135) தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும் நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென் அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்று அன்பொடுங் கனற்றி இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன் (140) கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக் கணையது மடுத்துக் கையில் வாங்கி அணைதர அப்பினன் அப்பலுங் குருதி நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து (145) மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும் நில்லுகண் ணப்ப நில்லு கண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்று இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் (150) அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து அருளினன் அருளலும் விண்மிசை வானவர் மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம் துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும் (155) ஏத்தினர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏