🕋 மாஷா அல்லாஹ் 💖

SHEIK 🌺KSN🌺
892 views
8 days ago
இறைத்தூதர்களிடம் மக்கள் முறையிடுதல் மக்கள் வரிசையாகப் பின்வரும் முக்கிய இறைத்தூதர்களிடம் சென்று, "எங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யக் கூடாதா?" என்று கெஞ்சுவார்கள்: ஆதம் (அலை): "நான் தடை செய்யப்பட்ட மரத்தின் கனியை உண்டதால் என் இறைவன் கோபமாக உள்ளான், என்னால் முடியாது" என்பார்கள். நூஹ் (அலை): "பூமியில் உள்ளவர்களுக்கு எதிராக நான் செய்த பிரார்த்தனையால் என் இறைவன் கோபமாக உள்ளான்" என்று கூறி மறுப்பார்கள். இப்ராஹீம் (அலை): "நான் (சூழ்நிலை காரணமாகப் பேசிய) மூன்று பொய்களை" நினைத்து மறுத்துவிடுவார். மூஸா (அலை): "நான் ஓர் உயிரைக் கொன்ற பாவத்திற்காக அஞ்சுகிறேன்" என்று கைவிரிப்பார். ஈஸா (அலை): "என்னால் முடியாது, நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று வழிகாட்டுவார். நபி(ஸல்) அவர்களின் மகாப் பரிந்துரை (ஷஃபாஅத்). "நான் இறைவனின் அர்ஷுக்குக் கீழே சென்று ஸஜ்தாவில் விழுவேன். இறைவன் எனக்கு இதற்குமுன் யாருக்கும் கற்றுத்தராத புகழுரைகளைக் கற்றுத்தருவான். பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள், கேளுங்கள் கொடுக்கப்படும்; பரிந்துரை செய்யுங்கள் ஏற்கப்படும்' என்று கூறப்படும்." நபி(ஸல்) தன் உம்மத்தினருக்காகப் பரிந்துரை செய்தவுடன், கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்கள் வலதுபக்க வாசல் வழியாக நுழைவார்கள். அப்போது சொர்க்க வாசலின் பிரம்மாண்டத்தை நபியவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்: "என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாசலின் இரு தூண்களுக்கு இடைப்பட்ட தூரமானது, மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ராவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றதாகும்." இஸ்லாமிய வரலாற்றிலும் புவியியல் ரீதியாகவும், நவீன வரைபடங்களின்படி மக்காவிலிருந்து புஸ்ரா நகருக்கு இடைப்பட்ட தூரம் மிகத் துல்லியமாக இருப்பதைக் காட்டி இந்த ஹதீஸ் இறைத்தூதரின் உண்மைத்துவத்திற்குப் பெரும் சான்றாகக் கருதப்படுகிறது. ஸஹீஹ் அல்-புகாரி 4712 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2K views
13 days ago
அல்லாஹ் நம்மளையும், நம்ம குடும்பத்தையும், நம்ம அன்புக்குரியவங்க எல்லாரையும் சுவனத்துல ஒன்று சேர்கட்டும். ஆமீன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.3K views
13 days ago
யூசுஃப் நபி அவர்கள் எவ்வளவு சோதனை வந்தாலும் ஈமானை விடல. கடைசி மூச்சு வரைக்கும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவரா இருக்க துஆ செஞ்சாங்க. நமக்கும் இதுதான் மிகப்பெரிய பயம். கடைசியில ஈமானோட மரணிக்கணும். யூசுஃப் நபி தனியா சுவனம் போக கூட கேக்கல. நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் கூட சேர்து வை னு கேக்குறாங்க. "யார் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவர்கள் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடன் இருப்பார்கள்" — அல்குர்ஆன் அந்-நிஸா 4:69 பாதையில போகும் கால் தடங்கள். அதாவது ஸாலிஹீன்கள் போன பாதையில நாமளும் போகணும். தனியா போக கூடாது. நல்லவங்க கூட்டத்தோட போகணும். ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும், சுஜூதுல, துஆவுல இதையே கேட்போம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
844 views
14 days ago
நபி ﷺ அவர்களுக்கு சில நாட்கள் வஹி வரல. காஃபிர்கள் "உங்க ரப்பு உங்களை விட்டுட்டான்" னு கேலி பண்ணாங்க. அப்போது அல்லாஹ் இந்த சூரா துஹாவை இறக்கி, நபி_ﷺ அவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தினான். இன்னைக்கு கஷ்டமா இருக்கலாம். நேத்து நல்லா இருந்திருக்கலாம். ஆனா நாளைக்கு அல்லாஹ் இன்னும் சிறப்பா வைப்பான். நம்ம வாழ்க்கை மேல் நோக்கி தான் போகும் இன்_ஷா_அல்லாஹ். இது வெறும் ஆறுதல் வார்த்தை இல்ல. இது அல்லாஹ்வோட வாக்குறுதி. அவன் வாக்கு பொய்காது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.8K views
1 months ago
பகலிலும் இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு). (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️