ShareChat
click to see wallet page
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 திருப்பாவை பாடல் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக. விளக்கம்: மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்...ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.💐💐💐💐💐💐💐💐K. R💐💐💐💐💐
🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 - திருப்பாவை பாசுரம் 21 KR ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்க ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; றமுடையாய்! பெரியாய்! உலகினில் ஊற தோற்றமாய் நின்ற சுடரே துயிலெடிாய்; னக்கு வலிதொலைந்து மாற்றார் உ ன்வாசற்கண் ன்னடிபணியு மாபோலே, ஆற்றாதுவந்து போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் KR திருப்பள்ளியெழுச்சி பதிகம் 1 என்வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது போற்றி பூங்கடிற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கரூள் எழில்நகை மலரும் கொண்டுநின் திருவடி தொழுகோம்! வயல்சூழ் சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! KR எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 21 KR ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்க ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; றமுடையாய்! பெரியாய்! உலகினில் ஊற தோற்றமாய் நின்ற சுடரே துயிலெடிாய்; னக்கு வலிதொலைந்து மாற்றார் உ ன்வாசற்கண் ன்னடிபணியு மாபோலே, ஆற்றாதுவந்து போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் KR திருப்பள்ளியெழுச்சி பதிகம் 1 என்வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது போற்றி பூங்கடிற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கரூள் எழில்நகை மலரும் கொண்டுநின் திருவடி தொழுகோம்! வயல்சூழ் சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! KR எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் - ShareChat

More like this