ShareChat
click to see wallet page
search
காலை சிவ சிந்தனை ==================== தரிசிக்க முக்தி தரும் சிதம்பரம் ============================= ஆருத்ரா பதிவு 10 =============== த3ர்சநாத் அப்ரஸதஸி ஜநநாத் கமலாலயே காச்யாம் து மரணான் முக்திஹ் ஸ்மரணாத் அருணாசலே || மோக்ஷம் பெற நான்கு வழிகளில் முதலாவதாக 1.தர்சனாத் அப்ரஸதஸி ==================== அதாவதுமண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஆகாய சேஷத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி க்ஷேத்ரம். இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம் மார்கழிதிருவாதிரை போன்ற நாட்களில்நடைபெறும் நடராஜ மூர்த்தியின்ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு ஞான வைராக்யத்தையும் மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் தந்து அருள்புரிய வேண்டும் என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம் பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும். ஆருத்ராதரிசனம் கண்டு நற்கதியடைவோமாக படிக்காசு கொடுத்த நடராஜர் ≈===================÷÷÷÷÷÷=== தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது. தொடரும்..... 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள்
🙏🏼ஓம் நமசிவாய - சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் - ShareChat