ShareChat
click to see wallet page
புரட்டாசி ஸ்பெஷல் 04🌲 ********************************* 🌹நாலாயிர திவ்ய பிரபந்தம் *********************************** 🌹ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்றுள் ஆயுமாய் ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே? 🌹விளக்கம்: 🚩ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி = 1. ஐந்து - பஞ்ச பூதங்கள், ஆகாசம், வாயு, அக்னி, நீர், பூமி. 2. ஐந்து - ஞான இந்திரியங்கள் - செவி, கண், வாய், மூக்கு, உடல். 3. ஐந்து - கருமேந்திரியங்கள் - வாக்கு, கையசைவு, நடை, கழிவு, கலவி. 🚩அல்லவற்றுள் ஆயுமாய் = இல்லாத, காண முடியாத விஷயங்களில் கூட உள்ளவனாக 🚩ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி = ஐந்தும் - மேற்சொன்ன பஞ்ச பூதங்களா ன, ஆகாச, வாயு, நெருப்பு, நீர் மற்றும் பூமிக்கான அணு மாத்திரைகளான விதைகளாகவும், ஏனெனில் பிரளயத்தில் இவை அழிந்து போனாலும் மீண்டும் உருவாக்கிட, மூன்றும்- இயற்கை (ப்ரக்ருதி) அகண்டத்தவம் (மஹாக்) என்று எல்லைகளற்ற வ்யாபிதம், மற்றும் இதனால் உண்டான அகந்தை (அஹங்காரம்) ஆகவும். ஒன்றுமாகி- மேற்சொன்ன எல்லாவற்றின் 23 விஷயங்க ளின் கலவை ஆன 'மனது' என்ற ஓன்று ஆகவும். 🚩ஆகி = மேற் சொன்ன 5+5+5+5+3+1 = 24 எண்ணிக்கை கொண்ட ஜீவன்களின் வாழ்க் கைத் தத்துவங்களாகவும், 🚩ஆதி தேவனே = இந்த ப்ரபஞ்சத்திற்கும் முன்னான தேவனே. 🚩ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி= 1.ஐந்து - இயற்கையில் காண முடியாத பஞ்ச பூதங்களின் உயிர் நாடியான சக்திகள், 2. ஐந்து - எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹங்களில் உள்ள பஞ்ச லோகங்களின் (இரும்பு, செம்பு, வெங்கலம், பொன், வெள்ளி) கலவை, 3. ஐந்து - பஞ்ச சத்தியங்களைக் குறித்திடும் வேத மயமான ஸ்வரூபமும், 🚩அந்தரத்து அணைந்து நின்று = எங்கு தேடினா லும் காணாது ஆனால் எல்லாவற்றிலும் நிறைந்து, ஆகாயம் போல 🚩ஐந்தும் ஐந்தும் ஆய= 1. ஐந்து - மேற்சொன்ன ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களை இயக்கிடும் ஐந்து சக்திகள். 2. ஐந்து - சேதனா சேதனர்களின் இருப்பிட மான பூமி , தேவர்கள் வாழ்ந்திடும் தேவ லோகம், முமுக்ஷுக்கள் என்னும் மோக்ஷத்தை விரும்பி அடைந்தவர்க ள் வாழும் இடம், எம்பெருமானின் நிவாசமான பரம பத ஸ்ரீ வைகுண்டம், எங்கும் நிறைந்த ஆனால் காண முடியாத வான் வெளி அல்லது ஆகாயம் - பரம ஆகாயம். 🚩நின்னை யாவர் காண வல்லரே = முதல் வரியில் சொன்ன சொன்ன 15 + இரண்டாம் வரியில் சொன்ன 9 + மூன்றாம் வரியில் சொன்ன 15 + நான்காம் வரியில் சொன்ன 10 = 49 + இவை அத்தனையின் மொத்த ஸ்வரூபனான 1 = 50, என்னும் அகண்ட அரூப, ஸ்வரூபனான நீ, அவ்வளவு எளிதாக எவர் கண்ணுக்கும் புலப்படுவாயோ?.. 🌹ஓம் நமோ நாராயணாய.... #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏பெருமாள்
அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 - ஸ்ரீ கோவிந்தா 81 கோவிந்தா ஸ்ரீ நல்லதே நடக்கும் இனிய பக்திய்சன் சச oL காலைவக்கம் ஸ்ரீ கோவிந்தா 81 கோவிந்தா ஸ்ரீ நல்லதே நடக்கும் இனிய பக்திய்சன் சச oL காலைவக்கம் - ShareChat

More like this