#மக்கள் தலைவர்கள்
திரு.லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் இன்று.!
திரு.லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள முகல்சராய் சிறிய ரயில்வே நகரத்தில் 1904, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர் தந்தை திரு.லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது மறைந்தார். அப்போது இருபது வயதே ஆன அவருடைய தாயார் தனது 3 குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டிற்குச் சென்று குடியேறினார்.
லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வறுமையையும் மீறி அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் நானா (சின்ன குழந்தை) என்றே அவர் அழைக்கப்பட்டார்.
கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்றார்.
அவர் வளர வளர அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய இளவரசர்களுக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மா காந்தியின் செயல் இவரை மிகவும் கவர்ந்தது. அப்போது அவரின் வயது 11 ஆகும். ஆனால், அந்த செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். இந்த முடிவு அவர் தாயாரின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதை ஒரு அழிக்கும் செயலாகக் கருதிய அவரது குடும்பத்தார் அவருக்கு அறிவுறுத்த முடியவில்லை. ஆனால், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு நெருக்கமான அனைவருக்கும் இது தெரியும். ஒருமுறை அவர் முடிவு செய்தால் பிறகு மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் அவருடைய சாதுவான தோற்றத்திற்குள் ஒரு உறுதியான பாறை இருக்கிறது என்றும் தெரியும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார்.
அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது.
1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி லலிதா தேவி, மிர்சாபூர் நகரத்தைச் சார்ந்தவர். அவருடைய திருமணம் முழு பாரம்பரியத்துடன் நடைபெற்றாலும் ஒரு விசயத்தில் மட்டும் வித்தியாசமாகவே இருந்தது. சுழல் சக்கரமும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளையாக அவர் வேறு எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார்.
திரு.லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார்.
1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பஹதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார்.
உத்தரபிரதேசத்தில் கடின உழைப்புக்கும், திறமைக்கும் லால்பகதூர் சாஸ்திரி என்பது ஒரு மறுபெயராக இருந்தது.
1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். அவருடைய வளர்ச்சி திடமானதாக இருந்தது. தமிழகத்தின் விழுப்புரம் அருகே நடந்தஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பானவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இதுபோன்று முன் எப்போதும் நடைபெறாதச் சம்பவத்தை நாடாளுமன்றமும், நாடும் அவரை வெகுவாக புகழந்தது.
அப்போது பிரதமராக இருந்த பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் குறித்து பேசுகையில், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையும் உயர்ந்த லட்சியங்களையும் புகழ்ந்து பேசினார்.
இந்த சம்பவத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி எந்தவகையிலும் பொறுப்பில்லை என்றாலும் அரசியல் சட்ட அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக நான் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். ரயில்வே விபத்து குறித்த நீண்ட விவாதத்திற்கு பதில் அளித்த லால்பகதூர் சாஸ்திரி, என்னுடைய சிறிய உருவத்தைப்பார்த்தும், அமைதியாக பேசுவதை வைத்தும் மக்கள் என்னால் உறுதியாக செயல்பட முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உருவ அமைப்பில் நான் வலிமையானவனாக இல்லாதபோதும், நான் மனதளவில் உறுதியானவன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
அவருடைய அமைச்சரவை செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் செயல்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது. லால் பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார்.
லால் பகதூர் சாஸ்திரி
வீடு
அரசியல், சட்டம் & அரசு
உலகத் தலைவர்கள்
பிரதமர்கள்
லால் பகதூர் சாஸ்திரி
இந்தியாவின் பிரதமர்
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் ஆசிரியர்களால் • கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 28, 2022 • வரலாற்றைத் திருத்தவும்
லால் பகதூர் சாஸ்திரி , (பிறப்பு அக்டோபர் 2, 1904, முகல்சராய், இந்தியா - ஜனவரி 11, 1966, தாஷ்கண்ட் , உஸ்பெகிஸ்தான் , USSR இல் இறந்தார்), ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் பிரதமர் ( 1964-66) .
லால் பகதூர் சாஸ்திரி.
லால் பகதூர் சாஸ்திரி
அனைத்து ஊடகங்களையும் பார்க்கவும்
பிறந்தவர்: அக்டோபர் 2, 1904 இந்தியா (நாளை பிறந்த நாள்)
இறந்தவர்: ஜனவரி 11, 1966 (வயது 61) தாஷ்கண்ட் உஸ்பெகிஸ்தான்
தலைப்பு / அலுவலகம்: பிரதமர் (1964-1966) , இந்தியா
அரசியல் தொடர்பு: இந்திய தேசிய காங்கிரஸ்
பங்கு: தாஷ்கண்ட் ஒப்பந்தம்
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் உறுப்பினரான அவர் குறுகிய காலம் (1921) சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும் அவர் தேசியவாத பல்கலைக்கழகமான காசி வித்யாபிதாவில் பயின்றார், அங்கு அவர் சாஸ்திரி பட்டத்துடன் பட்டம் பெற்றார் ("வேதங்களில் கற்றார்"). பின்னர் அவர் காந்தியின் சீடராக அரசியலுக்குத் திரும்பினார், மேலும் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் தற்போது உத்தரபிரதேச மாநிலமான ஐக்கிய மாகாணங்களின் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குமிக்க பதவிகளைப் பெற்றார் .
அகழிகளில் டெரகோட்டா சிப்பாய்களின் நெருக்கமான காட்சி, பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் சமாதி, சியான், ஷான்சி மாகாணம், சீனா
பிரிட்டானிகா வினாடி வினா
வரலாறு: உண்மையா அல்லது கற்பனையா?
இந்த வினாடி வினா கடந்த காலத்தை வரிசைப்படுத்துவதால், வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அசையும் வகையை உண்மையில் கண்டுபிடித்தவர் யார், வின்ஸ்டன் சர்ச்சில் "மம்" என்று அழைத்தவர் மற்றும் முதல் ஒலி ஏற்றம் எப்போது கேட்டது என்பதைக் கண்டறியவும்.
சாஸ்திரி 1937 மற்றும் 1946 இல் ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக அனுபவம் பெற்றார். அவர் 1952 இல் மத்திய இந்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ரயில்வே மற்றும் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சரானார். 1961 இல் உள்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு திறமையான மத்தியஸ்தராக நற்பெயரைப் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,ஜவஹர்லால் நேருவின் உடல்நலக்குறைவால், சாஸ்திரி இலாகா இல்லாமல் அமைச்சராக நியமிக்கப்பட்டார், நேருவின் மரணத்திற்குப் பிறகு அவர் ஜூன் 1964 இல் பிரதமரானார். .
இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளை திறம்பட கையாளத் தவறியதற்காக சாஸ்திரி விமர்சிக்கப்பட்டார், ஆனால் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி தொடர்பாக அண்டை நாடான பாகிஸ்தானுடன் (1965) பகைமை வெடித்ததில் அவர் உறுதியாக இருந்ததால் பெரும் புகழ் பெற்றார் . ரஷ்யாவின் முன்னிலையில், பாக்.உடன் "போர் இல்லாத" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அன்றிரவே அவர் மாரடைப்பால் இறந்தார் .
இந்த காலக்கட்டத்தில் நேர்மைக்காகவும் சிறந்த ஆற்றலுக்காகவும் மக்களால் அவர் நன்கு அறியப்பட்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார். தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். மகாத்மா காந்தியின் அரசியல் பாடம் இவரை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஆசிரியரை நினைவு கூறும் வகையில் ‘கடின உழைப்பு பிராத்தனைக்கு சமம்’ என்று அவர் ஒரு முறை தெரிவித்தார். மகாத்மா காந்தி வழியில், லால் பகதூர் சாஸ்திரியும் இந்திய கலாச்சாரத்தைச் சிறப்பாக பிரதிபலித்தார்.
