வரும் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படி படியாக தீவிரமடையும்.
அடுத்தடுத்து வரவிருக்கும் ஈரப்பதமான கிழக்கு காற்றின் காரணமாக தமிழகத்தில் 16 ஆம் தேதி முதல் ஒரிரு வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடையச் செய்யும்,
16 ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பதிவாக துவங்கி படிப்படியாக அதிகரிக்கும்.
திருவள்ளூர் முதல் குமரி வரையான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மற்ற உள் மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு உள்ளது ஆனால் காற்று சுழற்சி எந்த அளவுக்கு மேற்கு நோக்கி நகர்ந்து கிழக்கு காற்றை உள்ளே இழுக்குமோ அந்த அளவுக்கு தான் உள் மாவட்டங்களில் மழை அமையும் அது அடுத்து வரும் நாட்களில் உறுதி செய்யலாம். #🌧️மழைக்கால மீம்ஸ்😆

