ஏன் நாம் பொறுமை இழக்கிறோம்:
நவீன வாழ்க்கை நம்மை முன்பெப்போதும் இல்லாததை விட அமைதி அற்றவர்களாக ஆக்கியுள்ளது.
அதிவேகமான இணைய சேவை, ஒரு நிமிட செய்திகள், ஆர்டர் செய்தால் பத்து நிமிடத்தில் டெலிவரி, என இந்த தொழில்நுட்பம் "பொறுமையா அப்டினா என்ன" என்று கேட்க வைக்கிறது. ஒரு அரை மணி நேரம் கூட காத்திருக்க முடியாத நபர்களாக நம்மை மாற்றி விட்டது.
நீண்ட வேலை நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் தனிப்பட்ட போராட்டங்கள் என மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை சகிப்புத்தன்மையை நம்மிடமிருந்து உறிஞ்சி எடுத்துவிடுகிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தவறான பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என மனிதன் ஒழுங்கீனமாக திசையில் தன வாழ்க்கையை திருப்பி கொள்கிறான்.
அடுத்தவரின் வெற்றியை, வாழ்க்கை முறையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து நாம் விரக்தி அடைகிறோம். அவர் எவ்வாறு வெற்றி அடைந்தார், எவ்வளவு காலம் கடின உழைப்பு இருக்கிறது, என்பதை பற்றி பெரும்பாலானோர் யோசிப்பதே இல்லை. இவ்வளவு காலமாக நாம் வெற்றி அடைய வில்லையே என்று பொறுமை இழந்து கவலையில் மூழ்கிவிடுகின்றனர்.
நாம் டிராபிக் சிக்னலில் நிற்கும் போது, பச்சை சமிக்கை வருவதற்குள் எத்தனை பேர் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள் அறுபது வினாடிகள் கூட பொறுமையை கடைபிடிக்க முடியாத மனிதர்களா நாம்? பொறுமையின்மை அவ்வளவு இயல்பாகிவிட்டது.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #இயற்கை மருத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
