மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
கந்தனே நீ ஒரு கற்கண்டு!
குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ
குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ
என் மனக்கோயில் ஒளியேற்றும்
ஒளி நீயன்றோ!
பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும்
பொருள் நீயன்றோ!
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
கந்தனே நீ ஒரு கற்கண்டு!
சங்கடங்கள் தீர்க்கும் சக்தி வேல்! சந்ததமும் காக்கும் வெற்றிவேல்
புன்னகை தெய்வமருளால் புதிய காலை நல்லதாக இருகட்டும்.
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்! #🙏ஆன்மீகம் #🙏கோவில் #murugan #முருகன் #🕉️ஓம் முருகா

00:59