ShareChat
click to see wallet page
*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*. *இது இந்தியாவின் உண்மை*. *அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*. *ஆம்*... *அது நாமாகவோ*, *நம் தாயாகவோ*, *தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்* *இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்*. *நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*. இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில் *நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்* *வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்* *கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து*, *பிரார்த்தனை செய்பவர்கள்*, *தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*. *வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*, *அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்* *இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*. *வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்* *அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*. திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் *அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்*, *அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*. செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள். ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள் *எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*, *கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்* *சமூக பயம் உள்ளவர்கள்*, *பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்* *பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*. *கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்* *வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்* *எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*. *இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*? *உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*? *ஆம் எனில்*, *அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*. *மரியாதை கொடுங்கள்* *அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்* *இல்லையெனில்* *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்* *அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை*, *கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*, *மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை* *எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*. *எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*. *நம்முன்னோர்களே நமது அடையாளம்*. *அவர்களே நமது முகவரி* *மற்றும் நமது பெருமை* 🙏 *அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்*. *அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*. *எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்* *எண்ணுவம் என்பது இழுக்கு. #முதியோர் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
முதியோர் - JOSILI IIOUSI JOSILI IIOUSI - ShareChat

More like this