ShareChat
click to see wallet page
*உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம் மற்றும் புகழ்மாலை* ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் . அங்கே சகல அர்ச்சிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக ஆமென் உன்னதத்தில் வீற்றிருக்கிற பிதாவே ! உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்ய சேசுக் கிறீஸ்துவின் விலை மதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் . சுவாமி! பரிசுத்தரே ! சர்வ வல்லப பரிசுத்தரே ! அட்சயரான பரிசுத்தரே , சுவாமி ! எங்கள் மேல் இரக்கமாயிரும் . பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும் , மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிடும். *🌹🙏🏻ஆமென்.🙏🏻🌹* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ *🌿🌸🕯️பிரார்த்தனை🕯️🌸🌿* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் (மற்றதும் ) அர்சிஷ்ட மரியாயே , *(பதில்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்.)* சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே , * கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சிஷ்ட கன்னிகையே, அர்ச். மிக்கேலே, தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, அர்ச். ஸ்நாபக அருளப்பரே , பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே, அர்ச். இராயப்பரே , அர்ச். சின்னப்பரே, அர்ச். அருளப்பரே , அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, அர்ச். முடியப்பரே , அர்ச் லவுரேஞ்சியாரே , வேடசாட்சிகலான சகல அர்ச்சிஷ்டவர்களே , அர்ச். கிரகோரியாரே, அர்ச். அமிர்தநாதரே, அர்ச். அகுஸ்தீனாரே , அர்ச். எரொணிமுசே , மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே , குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , அர்ச் . மரிய மதலேனே , அர்ச். கத்தரீனாளே, அர்ச். பார்பரம்மாளே , கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , ஆண்டவருடைய திருவடியார்கலான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, தயாபரராயிருந்து..! அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி தயாபரராயிருந்து..! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி சகல பொல்லாப்புகளிலே நின்று , *(பதில் : அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி)* உமது கோபத்திலே நின்று..! உமது நீதி அகோரத்திலே நின்று. பசாசின் வல்லமையிலே நின்று..! கடூர வியாகுலத்திலே நின்று கொடிய ஆக்கினையிலே நின்று மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று அக்கினிச் சுவாலையிலே நின்று துயரமான அழுகையிலே நின்று உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து தேவரீர் கட்டுண்ட கட்டுக்களைப் பார்த்து தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து தேவரீருடைய திருச்சிளுவையைப் பார்த்து தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து தேவரீருடைய ஐந்து திருக்காயன்களைப் பார்த்து எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப் பார்த்து தேற்றரவு பன்னுகிரவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து நடுத்தீர்க்கிற நாளிலே அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம் *(பதில் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி)* பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும் நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம் மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம் இரட்சனியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம் எங்கள் சகோதர பந்துக்கள் உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம் பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும் உள்ள ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம் பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்கள் துயரைச் சந்தோசமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்களுடைய ஆசை நிறைவேற தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்கள் உம்மைப் புகழ்ந்து ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம் உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம் கிருபையின் ஊறனியே தேவரீரை மன்றாடுகின்றோம் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி கிருபையாயிரும் கிறீஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் 1 பர...! நரக வாசலில் நின்று..! அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும். சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக...! அப்படியே ஆகக்கடவது. சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்..! எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது. ===================================================== *🕯️🙏🏻செபிப்போமாக🙏🏻🕯️* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா , இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி நித்திய பிதாவே ! பெற்றோர் , பந்துக்கள் , சிநேகிதர் , உபகாரிகள் முதலியவர்களைத் தக்கவிதமாய் நேசித்து , அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்தருள கற்பித்தருளினீரே! ஆகையால் எங்களைப் பெற்று , அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் , பற்பல உபகாரங்கள் எங்களுக்குச் செய்தவர்களும் , எங்கள் பந்துக்கள் , சிநேகிதர் , முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மைச் சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம் மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுவோமாக நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி , முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது *( கிருபை தயாபத்து மந்திரம் சொல்லவும் )* *🌹👑செபிப்போமாக👑🌹* சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா ! முக்திப்பேறு பெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீத்து சாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்து அருளினீரே. ! அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல போள்ளப்புகளிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. *🙏🏻ஆமென்🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat

More like this