SRIRAMAJAYAM
*சூரைத் தேங்காய் உடைக்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?* 🌹
நமது வழிபாட்டு முறையில் இருக்கும் ஒரு வழக்கம் கோயில்களில் சிதறுக்காய் உடைப்பது ஆகும். எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்னரும் தடைகள் ஏதும் வராமல் இருக்க கோயிலில், குறிப்பாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் உள்ளது. தேங்காய் உடைப்பது என்பது பெண்களுக்கு துன்பத்தை கொடுக்கக்கூடிய செயலாக இருக்கும் என்பதால் பெண்கள் இதைச் செய்வதில்லை. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைப்பது நல்லதல்ல எனக் கூறப்படுகிறது.
‘சூரைத் தேங்காய் உடைத்தல்’ என்பது ஒரு நேர்த்திக்கடன் ஆகும். பொதுவாக, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைக்கும் வழக்கம் உள்ளது. தேங்காய் மீது சூடம் ஏற்றி தொழிற்கூடங்கள், கடைகள் போன்றவற்றைத் துவங்கும்போதும், அமாவாசை போன்ற தினங்களிலும் வணிக நிறுவனங்கள் முன்பு தேங்காய் உடைக்கப்படுகிறது. அதேபோல், புது மனை புகுதல், சுப நிகழ்ச்சி தொடக்கம் ஆகியவற்றின்போதும் சூரைத் தேங்காய் போடப்படுகிறது. பொதுவாக, எந்த நல்ல காரியம் தொடங்கும் முன்பும் முதலில் விநாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம்.
இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம். ஒரு சமயம் விநாயகர் மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘திரும்பிச் சென்று விடுங்கள்’ எனக் கூற, அதனை மறுத்த விநாயகர் அசுரனை தன் வழியில் இருந்து விலகிச் செல்ல கட்டளையிட்டார். ஆனால், அதைக் கேட்காத அசுரனும் விநாயகரையும் மற்ற முனிவர்களையும் தாக்கத் தொடங்கினான். இதனால் விநாயகர் யாகங்களுக்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காயை அசுரன் மீது வீச, தேங்காய் சிதறுவது போல அசுரனும் பொடிப் பொடியாக சிதறினான். இதனால் தடைகள் அகன்று யாகத்திற்கு ஆனைமுகனும் மற்ற முனிவர்களும் புறப்பட்டனர்.
அன்று முதல் எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும், நினைத்த காரியம் வெற்றி பெறவும், புதிய செயலைத் தொடங்குவதாக இருந்தாலும், வெளியூருக்கு பயணிப்பதாக இருந்தாலும், சுப நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் சூரைத் தேங்காய் போடும் வழக்கம் உள்ளது. நாமும் எந்த காரியம் செய்யும் முன்பும் தடைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக விநாயகரை எண்ணி சிதறுக்காய் போட்டு வழிபடுவது வழக்கமாகி விட்டது.
அவர் காட்டிய வழியில் தேங்காயை அவருக்குக் கொடுத்து எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு செய்தால் திருஷ்டி கழியும் என்பது ஒரு நம்பிக்கையாகும். தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது அது சில்லு சில்லாக சிதறி ஓடும். அது போல ஆனைமுகனின் அருளால் நம்மை பீடித்திருக்கும் தோஷங்களும் விக்னங்களும் இந்த காய் உடைந்து சிதறுவது போல் நம்மை விட்டு சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.
தேங்காய் உடைப்பதில் உள்ள தத்துவம் என்னவென்றால் தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான வெள்ளை நிற பருப்பும், நீரும் உள்ளது. உருண்டையான வெளி ஓடு பிரபஞ்சத்தைப் போன்றுள்ளது. உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கிறது. உள்ளிருக்கும் நீர் அதனால் விளையும் பரமானந்த அமுதத்தைப் போன்று இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளைப் பகுதியையும் நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது. இறைவன் சன்னிதியில் மாயையை அகற்றி இறைவனின் பேரருளை காட்டி பரமானந்த பேரமுதத்தை நுகரச்செய்யும் செயல்தான் சிதறு காய் போடுவதன் தத்துவமாகும்.
கஷ்டங்கள் சுக்குநூறாக சிதறிப் போக...
சூரத் தேங்காய் உடைத்தல் என்பது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நேர்த்திக்கடனாகும். பொதுவாக விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைக்கும் வழக்கம் உள்ளது. நேர்த்திக் கடனுக்காக நல்ல, பெரிதான தேங்காயை தேர்ந்தெடுக்கின்றனர். பின்பு விநாயகர் சந்நிதி முன்பு அதற்காக வைக்கப்பட்டுள் கல்லில் அடித்து உடைக்கின்றனர்.
சிதறு தேங்காய் கோவிலில் உடைப்பது நம்மில் இருந்து வரும் வழக்கம். விநாயகர் தவிர மற்ற தெய்வங்களுக்கும் சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் சில பேரிடம் இருக்கிறது.சில மூலிகை செடிகளுக்கு உயிர் உண்டு என்று சொல்லுவார்கள். அதனால்தான் அந்த மூலிகைச் செடிகளை பறிக்கும் போது அதற்கு காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்ற வழக்கமும் நம்மிடத்தில் உண்டு. மூலிகை செடிகளை போலவே தேங்காய்க்கும் உயிர் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தேங்காயை நம் கோவில்களில் சிதறு தேங்காய் விடும் போது அதற்கும் சாப நிவர்த்தி செய்தால் தான் நம்முடைய வேண்டுதல் சீக்கிரத்தில் பலிக்கும்.
தேங்காய் உடைப்பதற்கு முன்பு
‘ஓம் சர்வ சக்கர டம்டம் ஸ்வாஹா’
என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு அதன் பின்பு தேங்காயை சிதறு தேங்காய் விட்டால் போதும். உங்களுடைய கோரிக்கைகள் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது.சிதறு தேங்காய் உடைக்கும் போது தான், தேங்காய் சுக்குநூறாக உடையும். ஆக சிதறுதே காய் விடும் போது தான் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தவிர மற்ற தேவைகளுக்காக நாம் தேங்காயை சுக்குநூறாக உடைக்க போவது கிடையாது. மற்ற நேரங்களில் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிதறுதேங்காய் விடும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறி விடும்.திருஷ்டி சுற்றி சிதறு தேங்காய் உடைக்கும்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை உச்சரிக்கலாம்.எத்தனை தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்கிறீர்களோ, அத்தனை முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
எல்லாருடைய பிறப்பு சாதகத்திலும்
முடக்கு நட்சத்திரம்,முடக்கு நட்சத்திரத்தின் அதிபதி,முடக்கு ராசிநாதன் இவைகள் காணப்படும் அவற்றை ஜோதிடர்களும், ஜோதிட முறைகளும் உங்களை குழப்பிவிட்டிருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் விநாயக பெருமானின் ஆலயத்திற்கு சென்று, அவரை மனம் உருக வேண்டி, தேங்காய் ஒன்றினை உடைத்து வந்தால் (சூரைத் தேங்காய்) உங்களுடைய முடக்கு நீங்கப்பெரும்.
முன்னோர்கள் வகுத்த முறைகளை பின்பற்றி நாளும் இறைவனைத் தொழுது நல்ல பலன்களைப் பெறுவோம். சீரும் சிறப்போடும் வாழ்வோம்.🌹 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️

