#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗
திமுகவை சுற்றி சதுரங்க அரணை அமைக்க நினைக்கும் பாஜகவின் குஜராத் POLITICAL PREPARED PLAN!
நான்கு மண்டல செயல்வீர செயல்பாட்டாளர்களை முடக்க மத்திய நிர்வாகத்துறையின் மூலமாக முடக்க போடும் திட்டத்தை திமுகழகம் தடுத்தாடுமா? வியூகம் மாறுமா? என்பதை போகப்போகத்தான் பார்க்கவேண்டும்!
கொங்குமண்டல செயல்வீரர் செந்தில்பாலாஜி! மத்திய மண்டல செயல்வீரர் திருச்சி K.N.நேரு! தஞ்சை மண்டலம் TRB.ராஜா! கலைவாணன்!
தென்கிழக்கு மண்டலம் தங்கம்தென்னரசு! KKSSR.ராமச்சந்திரன்!
முகவை மண்டலம் ராஜகண்ணப்பன்! முத்துராமலிங்கம்! புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு PR.பெரியகருப்பன்!
நெல்லை ஆவுடையப்பன்! அப்பாவு!
சென்னை PK.சேகர்பாபு! மா.சுப்பிரமணியன்! போன்றோரை தேர்தலில் முடக்க நினைக்கும் பாஜக அஇஅதிமுக +மத்திய நிர்வாகத்துறை இப்போதே ஆயுத்தப்படுத்துவதாக வரும் தகவல்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் சிந்திக்கவே வைக்கிறது! குறிப்பாக KN.நேரு! செந்தில்பாலாஜியை முடக்கினாலே திமுகவை தரைதட்ட வைத்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் புதுவியூகம்! இதை தேர்தலாணையம் +மத்திய நிர்வாகம் +கவர்னர் ரவியின் கூட்டத்திட்டமே களப்பணியாற்ற திட்டம்!
2011ல் பிரவீன்குமார் செய்த அதே STYLE OF OPERATIONஐ தமிழக மீடியாக்கள் மூலமாகவும்! தேர்தல் பாதுகாப்பு படைகள் மூலமாகவும் செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது!
கூடவே தவெக கரூர் சம்பவத்தால் தவெகவின் குடுமி இப்போது பாஜக கைகளில் சிக்கியுள்ளது! பாஜகவிடமிருந்து தவெக தப்பமுடியாது! ஆக! பாஜக அஇஅதிமுக தவெக கூட்டணி அமைவது கட்டாயம்! அப்படி அமையும் பட்சத்தில் அது திமுகவுக்கு +POINT!
RN.ரவியின் பழிதீர்க்கும் படலம் தேர்தலில் விளையாடும்! மாநில பாதுகாப்பு தேர்தல் காலங்களில் கவர்னர் CONTROLக்குள் வந்துவிடும்! அதை வைத்துதான் ரவி கபடி விளையாட ஆசைப்படுவார்! 2011ல் ஏமாந்ததுபோல் திமுக இந்தத் தேர்தலிலும் ஏமாந்துவிடக்கூடாது! உருட்டல்களும்! மிரட்டல்களும் வந்துகொண்டே இருக்கும்! இதே காவல்துறையை வைத்தே திமுகவுக்கெதிராக பிரவீன்குமார் நடத்திய சடுகுடு விளையாட்டை திமுகவுக்கெதிராக தற்போதைய தேர்தலாணையம் அதிகாரிகள் செய்வர்!!
இதுபோக தமிழக கார்ப்பரேட் ஊடகங்கள்! ஊடகங்கள் கிளப்புகிற கற்பனை அவதூறுகள்! பொய்கள்! கட்டுமானங்கள்! திமுக கூட்டணிக்கட்சிகளின் சிலர் செய்யும் உள்ளடிவேலைகளும் விதிகளால் விளையாடும்! திமுகழக தொண்டர்கள் இவற்றையெல்லாம் அடித்துநொறுக்கிவிட்டுத்தான் வெற்றியை நோக்கி களமாட வேண்டும்!
மக்களிடத்திலே திமுக நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறது! அதன் வலிமையை உடைக்க அஇஅதிமுக தவெக பாமக போன்ற கட்சிகளின் பொய்களை மக்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க திமுகழக தொண்டர்கள் இப்போதே திண்ணை பிரச்சாரத்தை கைய்யிலெடுத்து செய்த திட்டங்களை சொல்லி வாக்காளர்களை திரட்டவேண்டும்! இதுதான் மத்திய நிர்வாகம் செய்கிற அத்தனையையும் தவிடுபொடியாக்கும்! இதில் சோரமடைந்தால்! தோல்வியை நினைத்துப்பார்க்கவே அச்சமாகவுள்ளது! பாஜகவின் நோக்கமே ஒன்றுபட்ட தமிழகத்தை நான்காக உடைத்து யூனியன் பிரதேசமாக்குவதுதான் அவர்களுடைய பிரதான நோக்கமே!
தமிழ்நாடுதான் உலகத்தமிழர்களின் தலைமை தேசியத்தளம்! அதை உடைந்தெறிந்தால்தான் ஹிந்தி சமஸ்கிரதம் மொழியை கல்வியில் புகுத்தமுடியும்!
இதையெல்லாம் வேரறுக்க ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் திரள்வது அவசியமாகிறது! ஒருவேளை தவெகவை தனியாக நிற்கவைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்க முடியுமென்று பாஜக கருத வாய்ப்புகள் ஏராளம்! நான் முன்பே குறிப்பிட்டதுபோல தவெக வேறு பாஜக வேறல்ல! இரண்டுமே ஒன்றுதான்! வேஷமும் நாடகமும்தான் வேறு!வேறு!
2011ல் அரசு அலுவலர்கள் எப்படி திமுகவுக்கெதிராக திரும்பினார்களோ! அதையேதான் இப்போதும் செய்ய போகிறார்கள்! ஆனால் அதுவே அவர்களுக்கு எதிராக சூனியம்பிடித்து ஆடவைக்கும் என்பதை அவர்கள் இப்போது உணரமறுப்பார்கள்! காலங்கள் உணரவைக்கும்!
2026ல் திமுக தொண்டர்களின் கடுமையான நவீன வியூக உழைப்புதான் பலனைத்தரும்! ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திமுகவுக்கெதிராக நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அவர்களின் STYLE OF FUNCTION தேர்தலுக்கு தேர்தல் மாறிக்கொண்டே இருப்பது வாடிக்கைதான்!
திமுகழக தோழர்களே! மக்களை நாடுங்கள்! தேடிச்செல்லுங்கள்! செய்ததை சொல்லுங்கள்! செய்யப்போவதையும் எடுத்துரையுங்கள்! மக்கள்தான் நமக்கான ஆதரவாளர்கள்! மக்களை நம்புவோம்!களத்திலே பணியாற்றுவோம்!
🙏🙏🙏
