ShareChat
click to see wallet page
#நவராத்திரி இரண்டாம் நாளில் வழிபடப்படும் தெய்வம் பிரம்மச்சாரிணி. “பிரம்மம்” ஆகிற சிவத்தை தேடுகின்ற தவம் அல்லது ஆன்மீகச் சாதனை செய்கின்ற அன்னைக்கு பிரம்மச்சாரிணி என்று பெயர். “சாரிணி” என்பது நடைமுறைப்படுத்துபவள் எனப் பொருள்படும். ஆகவே, பிரம்மச்சாரிணி யாகிய இத்தெய்வம் தவத்தின் வடிவமே ஆன தெய்வம் அவள். பிரம்மச்சாரிணி அம்மன் பாதணிகள் அணியாத பாதத்துடன் நடப்பவளாகவும், சாந்த ஸ்வரூபிணியாகவும் வர்ணிக்கப்படுகிறார். வலக்கையில் ஜபமாலை (அக்ஷமாலை) தாங்கியுள்ளார். இடக்கையில் கமண்டலம் வைத்துள்ளார். இந்த ஸ்வரூபத்தில் அன்னையின் முகம் எப்போதும் அமைதி, கருணை, மற்றும் ஒளிவீசும் தன்மையோடு காணப்படுகிறது. சிவபெருமானை கணவனாக பெறும் குறிக்கோளுடன், பிரம்மச்சாரிணி கடுமையான தவங்களை மேற்கொண்டார். இலைகளையும் தவிர்த்து உணவு, நீர் எதுவுமின்றி தவம் மேற்கொண்டதால் அவள் 'அபர்ணா' என அழைக்கப்பட்டாள். அவளது தவம் சூரியனின் கடும் வெப்பத்தையும், பனிக் குளிரையும், புயல் மழையையும் தாங்கும் கடினமான தவமாக இருந்தது. பிரம்மச்சாரிணி அம்மன் தனது முந்தைய பிறவியில் தக்ஷ பிரஜாபதியின் மகளாக சதி என்ற பெயருடன் பிறந்தார். தக்ஷன் யாகத்தில் சிவபெருமானை இகழ்ந்தபோது, சதி தன்னைத்தானே தீயில் அர்ப்பணித்துக் கொண்டார். அடுத்த பிறவியில் இமவானின் மகளாகப் பிறந்து, கடுமையான தவத்தின் மூலம் சிவபெருமானை மணந்தார். பிரம்மச்சாரிணி அம்மன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் பிரதிநிதி. அவள் பக்தர்களுக்கு பொறுமை, மன உறுதி, ஆன்மிக ஒளி ஆகியவற்றை அருள்கிறாள். அவளை வணங்குவதால் மன அமைதி, உறுதியான பக்தி, வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கிறது. "ஜபமாலை வலக் கையில் தாங்கி, ஞான ஒளி பரப்பும் தேவி, கமண்டலம் இடக்கையில் ஏந்தும் பிரம்மச்சாரிணி அன்னையை வணங்கிடுவோம்"
நவராத்திரி - நவராத்திரிஇரண்டாம்நாள் பிரம்மசாரிணி பாதணிஅணியாபாதம்பாரினில் நடந்திடும்எளியதோற்றம் ஜபமாலைகமண்டலம்மலர்கைகள்ஏந்தும் தவத்தினால் ஒளிரும்ரூபம் முகத்தினில்மந்தஹாசம் அமைதியே அதனில்தவழும் வேண்டியாங்குவேண்டியதெய்திட நோற்றலேவழியதாகும் இலையும்உண்ணாநோற்றலால் அபர்ணைஎனும்நாமம்தாங்கும் வேண்டியபொருள்பிரம்மமாம்சிவமே ஆதலின்பிரம்மசாரணிஇவள்பெயராகும் ணையில்லாகருணை ஈடு அருள்வதில்நிகரேஇல்லை ஸ்வாதிஷ்பானத்தின்இறைவி வவபை பணிபவர்பொறுமைகொள்வர் ஞானமும் அவர்வசமாகும்ஞாலத்தைவெல்வர் திண்ணம் ஸ்ரீராமன் நவராத்திரிஇரண்டாம்நாள் பிரம்மசாரிணி பாதணிஅணியாபாதம்பாரினில் நடந்திடும்எளியதோற்றம் ஜபமாலைகமண்டலம்மலர்கைகள்ஏந்தும் தவத்தினால் ஒளிரும்ரூபம் முகத்தினில்மந்தஹாசம் அமைதியே அதனில்தவழும் வேண்டியாங்குவேண்டியதெய்திட நோற்றலேவழியதாகும் இலையும்உண்ணாநோற்றலால் அபர்ணைஎனும்நாமம்தாங்கும் வேண்டியபொருள்பிரம்மமாம்சிவமே ஆதலின்பிரம்மசாரணிஇவள்பெயராகும் ணையில்லாகருணை ஈடு அருள்வதில்நிகரேஇல்லை ஸ்வாதிஷ்பானத்தின்இறைவி வவபை பணிபவர்பொறுமைகொள்வர் ஞானமும் அவர்வசமாகும்ஞாலத்தைவெல்வர் திண்ணம் ஸ்ரீராமன் - ShareChat

More like this