♦️🚩குருபகவான்
🌹ஆங்கிரச முனிவருக்கும் ஸ்ரத்தா தேவிக் கும் மகனாகப்பிறந்தவர் ‘பிரகஸ்பதி’. தவத் தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களி ல் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாத ராகவும் விளங்கும் பேறு பெற்றார்.
🌹கிரகங்களில் ஆண்கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
🌹குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார்.
🌹மனைவி தாரா. வேதங்களையும் உணர்ந்தவர் குரு என்பதால் பிரம்மாவுக்கு மிக பிடித்தமானவர்.
🌹குரு தாரா தம்பதியருக்கு சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விஸ்வபுக், வடபாக்னி, ஸ்விஸ்டக்ருதி என்ற மகன்களும், ஸ்வாகா என்ற மகளும் உண்டு.
🌹வடக்கு ஈசான்ய திசைக்கு அதிபதி. புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர்.
🌹எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3
🌹பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹத் ஜோதிஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ் என்னும் ஐவரும் இவரது உடன்பிறந்தவர்கள்.
🌹அதிதேவதை பிரம்மா. பிரத்யதி தேவதை இந்திரன். இவர்களை வணங்கினால் குருவருள் கிடைக்கும்.
🌹நீதிகாரகர், திரிலோகேசர், லோக பூஜ்யர், கிரகாதீசர், கருணைக்கடல், துாயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கம் அற்றவர் என இவர் போற்றப்படுகிறார்.
🌹குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் தருபவர் குருபகவான்.
🌹தென்குடித்திட்டை, ஆலங்குடி, திருவலிதாயம் (பாடி), திருச்செந்துார், குருவித்துறை, ஆழ்வார்திருநகரி, திருத்தணி இவருக்குரிய பரிகார தலங்கள்.
🌹தானியம் – கொண்டைக் கடலை, கிழமை – வியாழன், நிறம் – மஞ்சள், ரத்தினம் – புஷ்ப ராகம், உலோகம் – பொன், ஆடை – மஞ்சள் ஆடை.
🌹சனியைச் சாய்வாய் கும்பிடு!’ ‘குருவை நேராய் நின்று கும்பிடு’ என்பார்கள். அதிகாலையில் குருமுகத்தில் விழித்தால், நினைத்த காரியம் யாவும் வெற்றி பெறும்.
🌹எல்லா தெய்வங்களுக்கும் மற்றவரைக் கொண்டு வழிபாடு செய்யலாம். குருபகவா னை மட்டும் அவரவரே வழிபட்டால்தான் நன்மை கிடைக்கும்.
🌹நாட்டை திறமையானவர்களை கொண்டு ஆள வைப்பதும், நவீன அறிவியல் வித்தை களை கொடுப்பதும் இவரே. எனவே இவரை வணங்கினால் நாட்டுக்கு நன்மை.
🌹திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும்.
🌹குருவின் அருள் இருந்தால் முட்டாளும் அறிவாளியாகலாம். மாணவர்கள் இவரை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர்.
🌹சாந்த மூர்த்தியாக விளங்கும் குருபகவான், சதுர பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி அமர்பவர். சுக்கிரனுக்கு எதிரானவர். குளுமையான பொருளை விரும்புபவர்.
🌹தயிர்ச்சாதம், கற்கண்டு சாதம், கொண்டை க்கடலை, மஞ்சள் வாழை, பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு வைத்து வியாழக்கிழமை அன்று மஞ்சள் வண்ண மலரால் அலங்கரித்து குருபகவானுக்கு தீபம் ஏற்றினால் குருவருள் கிடைக்கும். பகலில் வழிபடுவது சிறப்பு.
🌹பூரண சுபகிரகம் என்னும் பெருமை கொண்டவர் குருபகவான் ஒருவரே.
🌹அமைச்சன், தேவகுரு, சிகிண்டிசன், ஜீவன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், சுரகுரு, தாராபதி, தெய்வ மந்திரி, நற்கோள், சுபகிரஹன், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என 18 பெயர்கள் இவருக்குண்டு.
🌹தனுசு, மீனம் சொந்த வீடுகள். ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவரே.
🌹திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரை வழிபட்டு கிரகங்களில் சுபகிரகமாகும் பேறு பெற்றார் குரு. அதனா ல் ராஜகிரகம் என சிறப்பிக்கப்படுகிறார்.
🌹பொருட்செல்வம், குழந்தைச் செல்வம், இரண்டுக்கும் அதிபதி இவரே.
🌹தனம், புத்திரகாரகர் என்பதால் குருதசை நடக்கும் காலத்தில் பிள்ளைகள் மேன்மை யான நிலையில் விளங்குவர்.
🌹குருபகவானின் பார்வை ஜாதகத்தில் பலமாக இருந்தால் ஞானம், தெளிந்த அறிவு, ராஜ யோகம், நிதி, நீதி, பணப்புழக்கம், நல்ல உறவுகள் அமையும்.
🌹குருவே சரணம்
🌹09.10.2025... நேசமுடன் விஜயராகவன்... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #📸பக்தி படம் #✨கடவுள்
