#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 6
1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
On this day, December 6, 1877, the Washington Post published its first edition.
தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) என்பது அமெரிக்க நாளிதழ் ஆகும். இது 1877இல் துவக்கப்பட்டு, வாசிங்டன், டி. சி.யில் இருந்து வெளியிடப்படுகிறது.
அமெரிக்காவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த செய்தித்தாள் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது வாசிங்டன், டி. சி., மேரிலாந்து, வர்ஜீனியா பகுதிகளில் இருந்து பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இது விரிதாளாக பிரசுரிக்கப்படுகிறது.
இந்த செய்தித்தாள் 47 புலிட்சர் பரிசுகளை வென்றுள்ளது. 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆறு தனித்திறன் புலிட்சர்களும் இதில் அடங்கும், 2002 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் ஏழு விருதுகள் பெற்றது. ஒரு ஆண்டில் ஒரே ஒரு செய்தித்தாளுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பரிசுகளில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்தது. போஸ்ட் பத்திரிகையாளர்கள் 18 நிமேன் பெல்லோஷிப்ஸையும் 368 வெள்ளை மாளிகை செய்தி ஒளிப்பட சங்க விருதுகளையும் பெற்றுள்ளனர். 1970 களின் முற்பகுதியில், செய்தித்தாள் வரலாற்றில் மிக பிரபலமான புலனாய்வு, நிருபர்களான பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியோர் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு 'வாட்டர்கேட் ஊழல்' என்று அறியப்பட்ட விசாரணைக்கு தலைமைத் தாங்கினர்; இந்த பத்திரிக்கை அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவிவிலகும் நிலை ஏற்பட்டது.[9]
2013 ஆம் ஆண்டில், அதன் நீண்டகால உரிமையாளர் குடும்பமான, கிரஹாம் குடும்பமானது செய்தித்தாள் நிறுவனத்தை அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு 250 மில்லியன் டாலர் விலைக்கு விற்றது.
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை 1877 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. பத்திரிக்கை துவங்கிய பிறகு, 1889 முதல் 1933 வரை, பலரிடம் கைமாறி யூஜீன் மேயர் என்பவரிடம் வந்து சேர்ந்தது. 1946 இல், அவர் பத்திரிகையைத் தன் மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார்.
பிலிப் கிரஹாம் தலைமையில் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட கிரஹாமால் பத்திரிகையின் மீது தனது கவனத்தைச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு பத்திரிக்கை சரிவை சந்திக்கத் தொடங்கியது. 1963 இல் கிரஹாம் தற்கொலை செய்துகொண்டதால், பத்திரிகை கிரஹாமின் மனைவி கேத்தரின் கிரஹாமின் கைகளில் வந்து சேர்ந்து பின் தலை நிமிர்ந்தது. அதன் பிறகு அவர்களின் குடும்ப சொத்தாக இருந்த இந்த இதழ் அக்கடும்பத்தால் 2013 ஆம் ஆண்டில், அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு விற்கப்பட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

