சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ மருந்து ....
நாவற்கொட்டை தூள்,
வேப்பங் கொழுந்து,
வேப்பம் பூ,
துளசி,
ஆவாரம் பூ,
ஆவாரை இலை,
நெல்லி வற்றல்,
கடுக்காய்,
தான்றிக்காய்,
சுக்கு,
மிளகு,
திப்பிலி,
வெந்தயம்,
கறிவேப்பிலை,
கீழாநெல்லி,
இவற்றில் கிடைப்பதைக் கொண்டு தூள் செய்து தினமும் இருவேளை ஒரு ஸ்பூன் தண்ணீரில் குடித்து வரலாம்.
நாம் தயார் செய்யத் தேவையில்லை.
சர்க்கரைக் கொல்லி சூரணம் என்று நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் கிடைக்கும்.வாங்கிப் பயன் படுத்தலாம்.
இதனுடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால் , கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தால், மாத்திரை மூலம் தான் கட்டுப் படுத்த இயலும் என்றால் , மாத்திரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.மாதாமாதம் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள்.
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி, பீன்ஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்பும் கசப்பும் உள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
#💊சர்க்கரை நோய்
