#🚹உளவியல் சிந்தனை ழ் க் கை*_
_*வாழ்க்கை அப்படின்னா என்ன? என்று ஒருவன் வாழ்க்கையிடம் கேட்டான்.*_
_அதற்கு வாழ்க்கை உடனே இங்கே வா என்று அழைத்தது._
_*வாழ்க்கையில் வரக்கூடிய முதல் எழுத்து வா*_
_உடனே வாழ்க்கையிடம் எதற்காக என்னை வா என்று அழைத்தாய் என்று கேட்டான்._
_*உடனே வாழ்க்கை இந்த உலகத்தில் எவ்வளவு துன்பம் வந்தாலும் நீ வாழ் என்றது.வாழ்க்கையில் வரக்கூடிய இரண்டாவது எழுத்து . ழ்*_
_உடனே வாழ்க்கையிடம் வான்னு சொன்ன, வாழ்ன்னு சொன்ன இந்த உலகத்தில் நான் எதை வைத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டான்._
_*உன்னிடத்தில் தானே கை இருக்கிறது அந்தக் கையை வைத்துக் கொண்டு வாழ் என்று வாழ்க்கை சொன்னது. வாழ்கை.*_
_மீண்டும் வாழ்க்கையிடம் வான்னு சொன்ன, வாழ்ன்னு வாழச் சொன்ன, கையை வைத்துக் கொண்டு வாழச் சொன்ன, இந்த உலகத்தில் நான் எப்படி வாழ்வது என்று கேட்டான்,_
_*எவன் ஒருவன் தமிழனைப் போல் வாக்கை காப்பாற்றி வாழ்கிறானோ அதுதான் வாழ்க்கை என்று சொன்னது.*_
_மீண்டும் அவன் வான்னு சொன்ன, வாழ்ன்னு வாழச் சொன்ன, கையை வைத்துக் கொண்டு வாழச் சொன்ன, வாக்கை காப்பாற்றி வாழச் சொன்ன, இப்படி எல்லாம் வாழ்ந்தால் வாழ்க்கையில் எனக்கு என்னக் கிடைக்கும் என்று கேட்டான்._
_*வாழ்க்கையில் இருக்கக் கூடிய முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்துப் பார் *வாகை* *என்று வரும்.*_
_*வாகை* என்றால் வெற்றி அந்த *வெற்றி* உனக்குக் கிடைக்கும் என்று வாழ்க்கை சொன்னது._
