ShareChat
click to see wallet page
நவராத்திரி ஒன்பதாம் நாள் சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி பூஜை அம்மன் வடிவம் : சாமுண்டி பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல். அம்மன் வடிவம் : தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள். முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். மிகவும் சினம் கொண்டவள். தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள். தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் : தீப துர்க்கை. யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள். பூஜை விவரங்கள் அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாமரை அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : மரிக்கொழுந்து அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : வெள்ளை நிறம் அன்னையின் அலங்காரம் : சுபத்ராதேவி அலங்காரம் அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வெண் மலர்கள். கோலம் : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும். நைவேத்தியம் : அக்கார வடிசல் குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 10 வயது குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சௌபாக்கியம் உண்டாகும். பாட வேண்டிய ராகம் : வசந்தா நடனம் : கோலாட்டம் குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : திரட்டுப்பால் பலன்கள் : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள். நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:59

More like this