கழக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.P.N.P.இன்பசேகரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சாரப் பரப்புரையின் போது பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, கடமடை பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பாப்பாரப்பட்டி பகுதியில் விசைத்தறி கூடங்களை பார்வையிட்டு, நெசவாளர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எர்ரனஅள்ளி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த பின்னர் அப்பகுதியில் சாலையில் நின்றிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
#DMKDharmapuri #🧑 தி.மு.க

