இராஜபாளையம் நகரிலுள்ள PACM மேல்நிலைப்பள்ளி, PACR.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் திரு.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். அதனைத்தொடர்ந்து இராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் இருக்கைகளை வழங்கினார். உடன் நகராட்சி சேர்மன் திரு.பவித்ரா ஷியாம், பள்ளி தாளாளர் திரு.ஸ்ரீகண்டராஜா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருமதி.சிவக்குமாரி, திரு.காளியப்பன், நகர செயலாளர்கள் திரு.ராமமூர்த்தி, திரு.மணிகண்டராஜா, கழக நிர்வாகிகள். #dmkvirudhunagar

