ShareChat
click to see wallet page
search
#மார்ச்_7, தத்துவ மேதை அரிஸ்டாட்டில் அவர்களின் நினைவு தினம் இன்று(கி.மு.322) அரிஸ்டாட்டில் கி.மு.384இல் பிறந்தார். இவர் பண்டைய உலகின் தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார். இவர் 170 புத்தகங்களுக்குமேல் எழுதிக் குவித்த ஒரு சிறந்த எழுத்தாளர். அரிஸ்டாட்டில் என்றால் சிறந்த நோக்கம் என்று பொருள். அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன. வானவியல், விலங்கியல், கருவியல், புவியியல், இயற்பியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார்.அத்துடன் கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல்,ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன. பூமி உருண்டை வடிவமானது என்பதை தனது ஆய்வின் மூலம் கூறியவர் அரிஸ்டாட்டில். விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை 19 ஆம் நூற்றாண்டில் சில அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி 19 ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.மாவீரன் அலெக்சாண்டர் அவர்கள் அரிஸ்டாட்டிலின் மாணவராவார்.அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் உலாப் பள்ளியை நிறுவினார். "நம்முடைய நற்பண்புகளுக்கும், நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்"__ அரிஸ்டாட்டில்) #life #lifes
life - ShareChat