🌹 மூன்று 🌹 பாத்திரங்கள் 🌹
ஒரு மகள் தன் தந்தையிடம்,
"வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது, என்னால் சமாளிக்க முடியவில்லை" என்று புலம்பினாள்.
தந்தை அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.
மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்தார்.
முதல் பாத்திரத்தில் கேரட் போட்டார்.
இரண்டாம் பாத்திரத்தில் முட்டை போட்டார்.
மூன்றாம் பாத்திரத்தில் காபி தூள் போட்டார்.
சிறிது நேரம் கழித்து அவற்றை எடுத்தார்.
கடினமாக இருந்த கேரட், கொதிநீரில் மென்மையாகிப் போனது.
மென்மையாக இருந்த முட்டை, கொதிநீரில் உள்ளுக்குள் கடினமானது.
ஆனால் காபி தூள், அந்தத் தண்ணீரையே மாற்றி ஒரு சுவையான பானமாக மாற்றியது.
வாழ்க்கை தரும் கஷ்டங்கள் (கொதிநீர்) எல்லோருக்கும் பொதுவானது.
ஆனால் நாம் எப்படி மாறுகிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.
கஷ்டங்களைக் கண்டு பலவீனமடையப் போகிறோமா, அல்லது காபியைப் போல அந்தச் சூழலையே நமக்குச் சாதகமாக மாற்றி மணக்கப் போகிறோமா என்பது நம் கையில் தான் இருக்கிறது
#💪 தன்னம்பிக்கை #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😎கெத்து🤘



