ShareChat
click to see wallet page
search
. 18 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்! பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யாரேனும் நிகழ்ச்சியில் தொடர விருப்பம் இல்லை என்றால், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். எஞ்சிய 5 பேரில் ஒருவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த வாரத்தில் பணப்பெட்டியில் பணம் சேர்ப்பதற்காக வைக்கப்படும் டாஸ்க்குகள் வைக்கப்பட்டன. போட்டியாளர்கள் முனைப்புடன் போட்டிகளில் பங்கேற்று ரூ. 13 லட்சம் பணத்தை சேர்த்தனர். 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர் புரோமோஷனுக்கு வந்தவர்கள் ரூ. 5 லட்சம் கொடுத்த நிலையில், பணப்பெட்டியில் ரூ. 18 லட்சம் சேர்ந்தது. இந்த நிலையில், பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. அவர்தான் பிக் பாஸ் 9வது சீசனின் வெற்றியாளர் ஆவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #😮BB9: பெட்டியை தூக்கிச் சென்ற போட்டியாளர்💰 #பிக்பாஸ் #📺வைரல் தகவல்🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #⭐விஜய் தொலைக்காட்சி
😮BB9: பெட்டியை தூக்கிச் சென்ற போட்டியாளர்💰 - ShareChat