பூலாங்குளத்தின் பூபாலனே ஈஸ்வரியின் மைந்தனே!
சண்முகநாதனே தமிழினத்தின் தலைமகனே!
தனிப்பெருங் கடவுளே நீயல்லவா...!
முருகா... முருகா... முருகா... முருகா!
வள்ளி தெய்வானையோடு வேலனே...
ஆறுமுக வேலனே!
ஓம் என்று சொன்னாலே...
என் வாழ்வு சிறக்குது
சிங்கார வேலனே...!
முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா!
முருகனே! அழகனே ஆதிகுடி முருகனே!
குமரனே குகனே வடிவேலனே சிவனார் பெற்ற செல்வமே!
வைகாசி விசாகம் உனது திருநாளாம்...
வினை தீர்க்கும் பொன்னாளாம்!
சகலமும் தந்து விடும் நன்னாளாம்...!
நாள்தோறும் உன் எழில் கண்டு...
என் செயல்கள் எல்லாம் சிறக்குது முருகா...
எங்கள் உள்ளத்திலும் எண்ணத்திலும்...
உன் நினைவே தான் முருகா...
உன்னை முன் நின்று வணங்கியதால் நான் பின் சென்றதில்லை என் வாழ்வில் முருகா!
உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா!
உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா!
உன் பெயர் சொல்லி வாழும் இந்தக் காலம் ஒன்றே போதுமே...
உன் காலடியில் தஞ்சம் அடைந்தேன் முருகா!
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை ஐயா என் குறைகள் தீர்க்க வாராயோ முருகா!
உன் முகம் பார்த்தால்... என் மன வேதனை எல்லாம் தீருது முருகா...
நான் விரதம் இருந்து வணங்கி வந்தேன் முருகா...
என் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றுவாய் முருகா!
இந்தப் பொய்யான உலகில் எதுவும் நிலையில்லை முருகா...
உன் மெய்யான வடிவமே போதும் முருகா...
உன் திருவடியில் மலராய் இருக்க அருள்வாய் முருகா!
அழகான வாழ்வு தந்து என்னை பெருவாழ்வு வாழ வைத்தாய் முருகா!
உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
உன்னைத் தவிர உறவென்று யாரையும் எண்ணியதில்லை முருகா!
பக்தியோடு பாசுரங்கள் பாடி சிந்தை குளிர வழிபடத் தெரியவில்லை முருகா!
கண்ணீர் பெருக்கோடு உன் பாதம் சரணடைந்தேன் முருகா!
இன்பமோ துன்பமோ அனைத்திலும் நீயே முருகா!
தாயும் உண்டு தந்தையும் உண்டு எனைப் படைத்த தகப்பன்சாமி நீ போதும் முருகா!
நான் தேடிப் பெற்ற உறவும் என்னை பாதியில் விட்டுவிடாமல்
உன் கரம் தந்து காப்பாய் முருகா!
நாடி வரும் பிணிகள் யாவும் - உன் வேல் கொண்டு தீர்ப்பாய் முருகா!
பூலாங்குளத்தின் பூபாலனே...
முருகா முருகா!
முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா!
முருகா போற்றி!
ஓம் முருகா போற்றி!
முருகா போற்றி!
ஓம் முருகா போற்றி... போற்றி... போற்றி... போற்றி!
செல்வா ✍️
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகா #🙏திருச்செந்தூர் முருகர்🙏
ஓம் முருகா 🙏கந்தா கடம்பா கதிர் வேலா 🙏கந்தனுக்கு அரோகரா🙏 #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼

