ShareChat
click to see wallet page
search
பூலாங்குளத்தின் பூபாலனே ஈஸ்வரியின் மைந்தனே! சண்முகநாதனே தமிழினத்தின் தலைமகனே! தனிப்பெருங் கடவுளே நீயல்லவா...! ​முருகா... முருகா... முருகா... முருகா! வள்ளி தெய்வானையோடு வேலனே... ஆறுமுக வேலனே! ஓம் என்று சொன்னாலே... என் வாழ்வு சிறக்குது சிங்கார வேலனே...! ​முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா! ​ முருகனே! அழகனே ஆதிகுடி முருகனே! குமரனே குகனே வடிவேலனே சிவனார் பெற்ற செல்வமே! வைகாசி விசாகம் உனது திருநாளாம்... வினை தீர்க்கும் பொன்னாளாம்! சகலமும் தந்து விடும் நன்னாளாம்...! ​நாள்தோறும் உன் எழில் கண்டு... என் செயல்கள் எல்லாம் சிறக்குது முருகா... எங்கள் உள்ளத்திலும் எண்ணத்திலும்... உன் நினைவே தான் முருகா... ​ உன்னை முன் நின்று வணங்கியதால் நான் பின் சென்றதில்லை என் வாழ்வில் முருகா! உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா! உன்னை நம்பியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் முருகா! ​உன் பெயர் சொல்லி வாழும் இந்தக் காலம் ஒன்றே போதுமே... உன் காலடியில் தஞ்சம் அடைந்தேன் முருகா! ​ஆறுதல் சொல்ல யாரும் இல்லை ஐயா என் குறைகள் தீர்க்க வாராயோ முருகா! உன் முகம் பார்த்தால்... என் மன வேதனை எல்லாம் தீருது முருகா... ​ நான் விரதம் இருந்து வணங்கி வந்தேன் முருகா... என் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றுவாய் முருகா! இந்தப் பொய்யான உலகில் எதுவும் நிலையில்லை முருகா... உன் மெய்யான வடிவமே போதும் முருகா... உன் திருவடியில் மலராய் இருக்க அருள்வாய் முருகா! ​அழகான வாழ்வு தந்து என்னை பெருவாழ்வு வாழ வைத்தாய் முருகா! ​ உறவுகள் ஆயிரம் இருந்தாலும் உன்னைத் தவிர உறவென்று யாரையும் எண்ணியதில்லை முருகா! பக்தியோடு பாசுரங்கள் பாடி சிந்தை குளிர வழிபடத் தெரியவில்லை முருகா! கண்ணீர் பெருக்கோடு உன் பாதம் சரணடைந்தேன் முருகா! இன்பமோ துன்பமோ அனைத்திலும் நீயே முருகா! ​ தாயும் உண்டு தந்தையும் உண்டு எனைப் படைத்த தகப்பன்சாமி நீ போதும் முருகா! நான் தேடிப் பெற்ற உறவும் என்னை பாதியில் விட்டுவிடாமல் உன் கரம் தந்து காப்பாய் முருகா! நாடி வரும் பிணிகள் யாவும் - உன் வேல் கொண்டு தீர்ப்பாய் முருகா! ​ பூலாங்குளத்தின் பூபாலனே... முருகா முருகா! முருகா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சில் கலந்தவனே... முருகா! ​ முருகா போற்றி! ஓம் முருகா போற்றி! முருகா போற்றி! ஓம் முருகா போற்றி... போற்றி... போற்றி... போற்றி! செல்வா ✍️ #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகா #🙏திருச்செந்தூர் முருகர்🙏 ஓம் முருகா 🙏கந்தா கடம்பா கதிர் வேலா 🙏கந்தனுக்கு அரோகரா🙏 #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼