ShareChat
click to see wallet page
search
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #என் தமிழ்நாடு🌾
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - குறள் : 725 பொருள் / அமைச்சியல் / அவையஞ்சாமை ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு . மணக்குடவர் உரை அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும் . நூல் கற்றலாவது ( 1 ) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும் , ( 2 ) வேதமும் ஆகமமும் கற்றலும் , ( 3 ) உழவும் வாணிகமும் கற்றலும் , ( 4 ) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும் . மு.வரதராசனார் உரை அவையில் ( ஒன்றைக் கேட்டவர்க்கு ) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும் . - ShareChat