ShareChat
click to see wallet page
search
ஸ்ரீநடராஜர் நடனம்9 =============== ஆருத்ரா பதிவு=9 =============== प्रचण्डताण्डवाटोपे प्रक्षिप्ता येन दिग्गजाः । भवन्तु विघ्नभङ्गाय भवस्य चरणाम्भुजाः ।। " 1.1.ப்ரசண்டதாண்டவாடோபே ப்ரக்ஷிப்தா யேன திக்கஜா: | பவந்து விக்னபங்காய பவஸ்ய சரணாம்புஜா: || " - ஸ்ரீ மத்ஸ்யமஹாபுராணம், மங்களஸ்லோகம். 1.1.எவருடைய தாண்டவ நடனத்தின் வேகத்தால் திக்கஜங்கள் வீசியெறியப் படுமோ,அந்த சிவபெருமானின் தாமரை மலர் போன்ற பாதங்கள் அனைத்து விக்னங்களையும் நீக்கியருளட்டும். பரமேஸ்வரர் ஸ்ரீநடராஜ மூர்த்தியாக தனியாக ஆடிய நடனம் -48, ஸ்ரீஉமாதேவியுடன் சேர்ந்து ஆடியது- 36,மஹாவிஷ்ணு பகவானுடன் 9. முருகப்பெருமானுடன் ஆடியது-3,தேவர்களுக்காக- 12 என 108 நடனங்களை ஆடியுள்ளார் ஸ்ரீசபாநாயகர் துதி ========================= உலகினும் உயிரினும் ஒன்றி நின்றருள் குலவிய ஒளியுயிர் குறிக்க ஐந்தொழில் இலகிய மன்றினுள் எழில்நடஞ் செய்வோன் வலமிகு மலரடி வழுத்து வாமரோ தில்லைத் திருமன்றுள் நடனமாடுகிற ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் உலகோடும் உயிர்களோடும் ஒன்றி நின்று அருள் செய்பவன்; உயிர்கள் விளக்கம் பெற ஐந்தொழிலைச் செய்து அருள் வழங்குபவன்; அவனது திருவடியை வணங்குவாம். பஞ்ச சபைகள்: ===================== ரத்தின சபை – திருவாலங்காடு கனகசபை – சிதம்பரம் ரஜிதசபை – (வெள்ளி சபை) – மதுரை தாமிரசபை – திருநெல்வேலி சித்திரசபை – திருக்குற்றாலம் பஞ்ச தாண்டவ தலங்கள் ஆனந்த தாண்டவம் – சிதம்பரம், பேரூர் அஜபா தாண்டவம் – திருவாரூர் சுந்தரத் தாண்டவம் – மதுரை ஊர்த்துவ தாண்டவம் – அவிநாசி பிரம்ம தாண்டவம் – திருமுருகன்பூண்டி காட்டிடை ஆடும் கடவுள் ============================== திருவாலங்காடு – ஆலங்காடு திருவெண்பாக்கம் – இலந்தைக்காடு திருவெவ்வூர் – ஈக்காடு திருப்பாரூர் – மூங்கிற்காடு திருவிற்கோலம் – தர்ப்பைக்காடு ஆனந்தத் தாண்டவம் ========================== படைத்தல் – காளிகாதாண்டவம் – திருநெல்வேலி, தாமிரசபை. காத்தல் – கவுரிதாண்டவம் – திருப்புத்தூர், சிற்சபை. அழித்தல் – சங்கார தாண்டவம் – நள்ளிரவில். மறைத்தல் – திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை அருளல் – ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காடு, ரத்தினசபை. ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில். தில்லையில் ஐந்து சபைகள் =============================== 1. சித்சபை – சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள். 2. கனகசபை – சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம். 3. தேவசபை – பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். 4. நிருத்த சபை – தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம். 5. ராஜசபை – ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம். நவதாண்டவம் ==================== இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார் திருவாரூர் ================= திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளை ==================== திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாறு ============ திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகப்பட்டினம் ============== நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். வேதாரண்யம் ==================== திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் ================ திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் ====================== திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காடு ================= திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம். திருச்செங்காட்டங்குடி ====================== தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏ஆன்மீகம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு
🙏🏼ஓம் நமசிவாய - மார்கழி திருவாதிரை சிவாலபங்களில் ஆருத்ரா தரிசனம் மார்கழி திருவாதிரை சிவாலபங்களில் ஆருத்ரா தரிசனம் - ShareChat