உழலும் உலகிலே
ஓடும் வாழ்க்கையிது
ஒன்றாய் தான் இருக்கிறோம்
ஆனால்
அனுதினம் விலகியே
ஒண்டி குடித்தனத்தில்
உறக்கத்திலும்
உரசல்களென்பது கடினமாகிறது
நெருங்க துடிக்கும் தருணமெல்லாம்
இடை வரும் உறவுகள்
உணர்ந்தே விலகுகிறாய்
நீயும்
ஆசைகள் இருந்தும்
இழந்த உன்னை
நானே மீட்டெடுத்து கொள்கிறேன்
தனிமை தருணங்களிள்
விழி மூடி நினைத்தபடி
அழகாய் பூக்கிறதே
என் உலகம்
பறவையென சிறகு விரிந்த
கற்பனை வானதிலே
ஆனந்தமாய் பறந்தபடி
காமம் என்பது
கருவுறுத்தலில் மட்டுமே
நிறைவடவதல்ல
மனம் முழுதும் நிறைந்து
ஆசையாய் வடிந்து
அன்பின்
உச்ச முத்தங்களிள்
நாணங்கள் கரைந்தே
நான் நீ என்பதெல்லாம்
நாமென்று உறைந்து
உலகை மறைப்பதென
உணர்த்தி செல்லுகிறதே
ஒவ்வொரு முறை
ஏதேச்சையான
உன் தீண்டல்களில்
நான் உறைந்திடும் தருணங்களில் #💝இதயத்தின் துடிப்பு நீ

