ஒவ்வொரு ஊரிலும் ஒற்றை இலக்கத்தில் தொண்டர்களை வைத்துக் கொண்டிருந்த கட்சியை,
திராவிட ஃபார்முலாவை பயன்படுத்தி முன்னணி கட்சியாக உருமாற்றம் செய்து வைத்த கலியுக கர்த்தா. அதற்கு கைமாறாக கட்சி கொடுத்தது தலைமை பதவி.
ஆனாலும் கடமை உணர்வு மிக்க இந்த கர்த்தா கருப்பட்டி பானைக்குள் கைவிட்டு வேட்டியில் துடைத்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்டறிந்த கட்சி,
கருப்பட்டி பானைக்குள் கருப்பட்டி காலியாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக,
அதே திராவிட ஃபார்முலாவை பயன்படுத்தி அன்னாரை வனவாசம் அனுப்பியிருக்கிறது. அன்னாருடன் நெருங்கி பயணிப்பவர்கள் இதன் உண்மைத்தன்மையை அறிவர்.
அரசியல் களத்தில் நெடுங்காலமாக நிற்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை தேவைகள் இரண்டு.
ஒன்று - தன்னம்பிக்கை ஏற்றல்.
இரண்டு - தன்மானம் துறத்தல்.
களப்பணி நாயகன் இதற்கு தயாராக இருந்தால் மீண்டும் களமாடலாம்.
ஆனால் களமாடுவதற்கு களத்தில் கால் வைக்க இடம் இருக்குமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
🤔🤔🤔
#🚨கற்றது அரசியல் ✌️ #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #📰தமிழ்நாடு அரசியல்📢 #😂HaHaHaHa😅 #🤣சிரிங்க பிளீஸ்😂


