கவலை வேண்டாம் !!!
யாருக்கோ ஒருவருக்கு நீங்கள் ஆசீர்வாதமானவர்கள் தான்...!
நீங்கள் வேண்டாமென
விட்டு வந்த ஆடை
இன்னொருவருக்கு
கச்சிதமாக பொருந்திக் கொள்கிறது
நீங்கள் பழையதென
தூக்கியெறிந்த
பொம்மையை
குப்பைத்தெட்டியில்
தேடியெடுத்த சிறுமி
அதைத் தன் பொக்கிஷமென
பத்திரப்படுத்தியிருந்தாள்
அழகில்லையென
நீங்கள் கூறிய பூவொன்று
அழகியொருத்தி கூந்தலில்
கர்வமாய் ஏறிக் கொண்டது
அசிங்கமென்று நீங்கள்
கையுதறிய தெரு நாயொன்றுக்கு
ஏதொவெரு வீட்டில்
தங்க இடமும் சில தடவலும்
தினமும் கிடைக்கிறது.
நீங்கள் நினைப்பதைப் போல
உங்கள் நிராகரிப்பொன்றினால்
இங்கு எதுவும் அழிந்து விடுவதில்லை.
மாறாக,
யாரோவொருத்தரால்
புறக்கணிக்கப்பட்டவைகள்
அனைத்துமிங்கு
எங்கோவொருவரால்
ஆசீர்வதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
#✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝பிரார்த்தனை

