ShareChat
click to see wallet page
search
வண்ணாரப்பேட்டையில் சிவராத்திரி மயான கொள்ளை திருவிழா: 2,000 பேருக்கு அன்னதானமாக சிக்கன் பிரியாணி: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தொடங்கி வைத்தார்..! ​சென்னை: பிப்.17:- சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மன்னப்பன் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் 17-ம் ஆண்டு சிவராத்திரி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. ​இந்த விழாவின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நோக்கில் பிரம்மாண்ட 'பிரியாணி திருவிழா' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ​இந்த நிகழ்வில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் அங்காளம்மனின் திருக்குவளையை ஏந்தி, பக்தி சிரத்தையுடன் சிறப்புப் பிரார்த்தனை செய்ததோடு, பொதுமக்களுக்கான பிரியாணி வழங்கும் பணியையும் முன்னின்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் எம்.என்.சீனிவாசபாலாஜி, லயன் ஈ.சண்முகவினாயகம், வண்ணை கணபதி, ஜிம்.பாபு, மக்கள் கே.மகேந்திரன், எல்.எஸ்.மகேஷ்குமார், பா.விக்னேஷ், ஜெய்சங்கர், விஜி, ஜெயக்குமார், வீரா, மதன்மோகன், கார்த்திக் மற்றும் பகுதி, வட்டப் பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @மேலச்சேரி அதிமுக விஜய் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம்
🔷காங்கிரஸ் - ShareChat