ஸ்ரீ ராமாயணத்தை மேலழப் பார்த்தால் ஸ்ரீ ராமனின் சரித்திரமாகவே தோன்றும், ஆனால் அதன் உயிர் நாடியே சீதையின் சரித்திரம் என்பது நமது ஆசார்யர்களின் திருவுள்ள கருத்து.
ஒருநாள், வால்மீகி மகரிஷி தம் சிஷ்யர்களுடன் தமஸா நதிக்கரைக்கு சென்றார். அந்த நதிக்கரையில் ஆணும், பெண்ணுமாக இரு பறவைகள் மரக்கிளையில் மகிழ்ந்து குலாவியிருந்தன.
அந்த சமயத்தில் அங்கு வந்த வேடன், அந்த இருந்து பறவைகளில் ஒன்றான ஆண் பறவையை தனது அம்பினால் வீழுத்தினான். ஆண் துணியை இழந்த பெண் பறவையோ, துடித்து கதறியது.
இந்த காட்சியை கண்ட வால்மீகி முனிவர், மிகவும் சோகித்து, வேடனை நோக்கி சபிக்கிறார். அந்த சாபமும் ஸ்லோகத்தின் வடிவாகவே அமைகிறது.
" மாநிஷாத ப்ரிதிஷ்டாம் த்வமகமஸ் சாச்வதீ ஸமா:
யுத் க்ரௌஞ்ச மிதுநாத் ஏகம்அவதீ: காம மோஹிதம்"
அட பாபியே! இன்பத்தில் ஈடுபட்டுயிருந்த பறவைகளில் ஒன்றை கொன்றாய், நீ, வெகு காலம் வாழ மாட்டாய்" என்பதே அவர் ஈட்ட சாபம்.
இது நாம் மேலெழ பார்க்கும் பொருள்.
அதனை போலவே, இந்த ஸ்லோகமும் இராமாயணத்தை சுருங்க சொல்லுகிறது. மேலும் இதுவே ஸ்ரீஇராமாயணத்திற்கு மங்கள ஸ்லோகமாகவும் அமைந்துவிடுகிறது.
அது எப்படி, வால்மீகி முனிவர், வேடனை நோக்கி, பறவைகளில் ஒன்றினை கொன்றதற்கு சாபம் தானே கொடுக்கிறார். அதனை நாம் எப்படி மங்கள ஸ்லோகமாக கொள்ள முடியும் ?
ஒரு காவியமோ, தொகுப்பு பாடல்களோ எழுதும்போது, அதன் முதல் ஸ்லோகத்தாலே அந்த காவியத்தை சுருங்கச்சொல்லி, பின்னர் அதனை விவரிப்பது கவிகளின் வழக்கம்.
உதாரணமாக பார்த்தால், "ஓம்" என்கிற ப்ரணவத்தில், அனைத்து வேதார்த்தங்களும் அடங்கியிருப்பதாக,நமது பெரியோர்கள் பணித்துள்ளனர். அதினிலும், முதல் எழுத்தான "அ" என்கிற எழுத்தில், அனைத்து அர்த்தங்களும் அடங்கியிருப்பதாக நமது பெரியார்கள் கருதியுள்ளனர். அது போலவே ஸ்ரீ ராமாயணத்தில் அமைந்துள்ள முதல் ஸ்லோகத்தில் அனைத்து அர்த்தங்களும் அமைந்துள்ளதாக பெரியோர்கள் கூறுவர்.
அதனை போலவே, இந்த ஸ்லோகத்திற்கும் நமது பெரியோர்கள் மிக அற்புதமான விளக்கத்தை அருளி உள்ளனர்.
மா - ராமா - மஹாலக்ஷ்மி, நிஷாத - நித்யவாசம் செய்யும் ஸ்ரீநிவாசனே! என்பதை மாநிஷாத என்பதற்கு அற்புதமான விளக்கமாக காட்டியுள்ளனர் நமது பெரியோர்கள். ஆக, மாநிஷாத என்பதற்கு " ஸ்ரீ யபதி" என்கிற திருநாமம் பொருத்தமாகிறது.
திருமகளை மார்பில் கொண்ட ஸ்ரீநிவாசனே, இராவணன் மண்டோதரி என்று காமமயக்கம் கொண்ட இருவரில் இராவணனை கொன்ற நீர், நெடுங்காலம் வாழ்வீர் என்பதே நெடுங்காலம் கீர்த்தியுடன் வாழ்வீர் என்பதே நமது பெரியோர்கள் மேலே காட்டின ஸ்லோகத்திற்கு அருளிய விளக்கம்.
ஸ்ரீராமாயணத்தில் தந்தை, மகன், தம்பி, ஸ்வாமி, தாசன் (அடிமை), கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும் என்கிற சாதாரண தர்மத்தை சொல்லியிருந்தாலும், மிகவும் அதிகமாக விசேஷ அர்த்தங்களும் சொல்லப்பட்டுயிருக்கின்றன.
அதனால் தானே, எம்பெருமானாரும் ஸ்ரீ பெரிய திருமலை நம்பியிடத்தில் ஒரு வருட காலம் திருப்பதியில், ஸ்ரீராமாயணத்திற்கு பல விசேஷ அர்த்தங்களை கேட்டுயிருக்கிறார்.tks nalini gopalan #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா


