🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *தேவ வசனம்*
*“நீதிமான் பனையை போல செழித்து லீபனோனின் கேதுரு போல வளருவான்.”*
— *சங்கீதம் 92:12*
🎙️ *செய்தி*
✨தேவனை நம்பி நீதியில் நடக்கும் மனிதன் சாதாரணமாக அல்ல, உறுதியான வேர் கொண்ட லீபனோனின் கேதுரு மரம்போல உயர்ந்து, வறட்சியிலும் பனையை போல செழித்து வளருவான் சூழ்நிலைகள் மாறினாலும், காற்றும் புயலும் வந்தாலும், தேவனில் நிலைத்திருப்பவர்கள் உடைந்து விடாமல் வீழ்ச்சியடையாமல் சரிந்து விடாமல் காய்ந்து போகாமல் நிலைத்து நின்று மேலும் மேலும் பலப்படுவார்கள்.
இன்று நீங்கள் தேவனை நம்பி நீதியில் நிலைத்திருங்கள்; உங்கள் வாழ்க்கை உயர்வும் செழிப்பும் அசைக்க முடியாத நிலைத்த ஆசீர்வாதமும் காணுவீர்கள்.
-- ✍️*சகோ சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


