எத்தனை
அற்புதமாய்
கூட்டைக் கட்டிக் கொள்கிறதோ
அத்தனை அற்பமாய்
அதன் தேவை
தீர்ந்ததும் விட்டும்
செல்கிறது பறவைகள் ..
நீ மட்டும் போதுமென
சொன்னவர்கள்
காணமல் போன
கதைகள் தான் இருக்கிறது
நெடுஞ்சான் கிடையாய்
நின்று கிடக்கும்
மரத்துப் போன மனதுக்கு
எங்கும் போகவும்
தெரியவில்லை
யாரையும் விரட்டவும்
தெரியவில்லை #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #✍️கவிதை📜 #💖காதல் கவிதைகள்✍️ #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள்


