நாம் ஒருவர்மீது அன்பு வைத்த பின்னாளில் ,
ஏன் இவரை நேசித்தோம் என்று யோசிக்க வைத்தால்
அந்த அன்பு தோற்றுவிட்டது என்பதே நிஜம்
நாம் ஒருவர்மீது வைத்த நம்பிக்கை
பின்னாளில் ,
ஏன் இவரை நம்பினோம் என்று யோசிக்க வைத்தால்
அந்த நம்பிக்கை உடைந்துவிட்டது என்பதே உண்மை
நாம் ஒருவர்மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும்
நாமே ஒருநாள் கைவிட்டு விட்டால் ,
நம் மனம் துகள் துகளாக நொறுங்கிவிட்டது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத வலி நிறைந்த உண்மை
அதிக அன்பு
அதிக நம்பிக்கை
அதிக எதிர்ப்பார்ப்பு இவையெல்லாம் உன்னை மகிழ்விக்குமோ இல்லையோ நிச்சயம் உன்னை உடைக்கும் நண்பா
அதிக வலி கொடுக்கும்
உன்னைக் கலங்க வைக்கும்
எனவே யாரையும் சார்ந்திருக்காதே
யாரையும் முழுதாய் நம்பியிருக்காதே
யார்மீதும் அதிக எதிர்பார்ப்புகளை விதைத்துக்கொள்ளாதே
உனக்காக நீயே இருந்துவிடப் பழகு
அதற்காக உன்னைப் பழக்கப்படுத்திக்கொள் ❤️ #monday thought 💖 #monday சிந்தனை #💐Happy Monday #💐Have a nice day🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


