ShareChat
click to see wallet page
search
#பக்தி #பக்தி படங்கள் #பக்தி #பக்தி கீதங்கள் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான். நாம் விரும்பும் அனைத்தையும் பகவான் நமக்குத் தருவார் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது. புதிய ஆசைகளை வளர்த்துக் கொண்டும், புதிய விஷயங்களைத் தேடி அலைந்தும் தான், நாம் மேலும் மேலும் புதிய புதிய துன்பத்தில் மாட்டிக் கொள்கிறோம். நம் வாழ்வுக்கு கடவுளே பொறுப்பானவர் என்ற நம்பிக்கையோடு முழுமையாக அவரிடம் நம்மை அர்ப்பணிப்பதே சரணாகதி. "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும். இரண்டு வித மனங்கள் இல்லை. இருப்பது ஒன்று தான். நல்ல எண்ணங்களைச் சிந்தித்தால் அது நல்லமனம். தீய எண்ணங்களைப் பற்றிக் கொண்டால் அது கெட்டமனம். நாம் நம் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்போமேயானால் பணிவு என்பது வார்த்தையிலும் நடைமுறையிலும் மிகுந்த எளிமையாக வந்துவிடும். மனத்தூய்மையில்லாதவர் செய்யும் வணக்கம், வழிபாடு எல்லாம் ஒரு மேம்போக்கிற்காக மட்டுமே இருக்கும். நாம் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. உள்மனதில் நிலையான அமைதியை யார் ஏற்படுத்துகிறார்களோ, அவரைக் குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள். கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதே போல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப் படமாட்டார்கள். கடவுளும் குருவும் தான் முக்தி அடைவதற்கான வழியை காட்டுவார்கள். கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்து விட்டால், அவரது அருளே நம்மைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன் பின், நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் அவர்கள் காட்டிய வழியில் தவறாமல் சென்றால் போதும். அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேட வேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும். மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை. நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்டால், கடவுள் யார் என்பது நன்கு விளங்கும். அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை. குழப்பில்லாத மனமே அமைதியின் பிறப்பிடம். அமைதியில் தான் ஆனந்தம் இருக்கிறது.
பக்தி - 0 அரூள்மிகு அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வர சுவாமி அருள்மிகு கோரக்கநாதர் திருக்கோவில் தென்காசி மாவட்டம் சிவசைலம் அத்ரி அடியார்கள்அனனதானகுழு அகத்திரியாசேவை 9686{67{78 அத்ரிசேர்மன் ஆட்டோ செல் : 9626167178 0 அரூள்மிகு அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வர சுவாமி அருள்மிகு கோரக்கநாதர் திருக்கோவில் தென்காசி மாவட்டம் சிவசைலம் அத்ரி அடியார்கள்அனனதானகுழு அகத்திரியாசேவை 9686{67{78 அத்ரிசேர்மன் ஆட்டோ செல் : 9626167178 - ShareChat