🌹*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
27.03.2026 *(வெள்ளி)*
*துயர்நிறை மறையுண்மைகள்.*
*1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில்,
*"ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்."* என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவர் நம்மையும் நம் குடும்பத்தையும் வன்கண்களிலிருந்து காக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,*
இன்றைய பதிலுரைப்பாடல் தி.பா.18:6-ல், *"என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது."* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
நமது இக்கட்டான வேளைகளில் நாம் இறைவனே துணை என விசுவசித்து நாம் இறைவனிடம் மன்றாட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*
புனித வாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் நமது பாவங்களை விட்டு விட்டு மனம் திரும்பி இறைவனிடம் திரும்ப வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,*
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,*
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*ஆமென்.*🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா #பிரார்த்தனை


