எதற்காக சிவபெருமானிடம் ஊடல்?! பல காரணங்கள். நான் ஆன்மீகத்திற்கு வந்ததே காமத்திலிருந்து முழுமையாக விடுபடுவதற்கே. அது இன்று வரை நடக்கவில்லை; அது முக்கியமான காரணம்; மேலும் எழுதுவதற்கு முன்பு, இறைவனிடம் என்னை விட அதிகம் ஊடல் கொண்டவர்களைப் பற்றி... *************************************************** நேற்று ஜி. செல்வா என்பவர் எழுதிய "எல்லாத்துக்கும் நாங்க தான் கஷ்டப்பட வேண்டுமா?!" என்ற புத்தக வெளியீட்டு விழா பற்றிய Shruti Literature TV சுருதி டிவி வீடியோ சில பார்த்தேன் - யுகபாரதி மற்றும் எழுத்தாளர் தீபலட்சுமி ஆகியோர் இந்த புத்தகத்தை பற்றி பேசியது. அப்போது எனக்குத் தோன்றியது: இவர்கள் சிவபெருமான் மீது கொண்ட ஊடல் தான் மிகப்பெரியது; அது என்னுடைய ஊடலை விட மிகவும் உண்மையானதுமா கூட என்று!! 😄 அப்போது தான் இவர்களுடைய கம்யூனிச சித்தாந்தமும் புரிந்தது. "இங்கே உலகில் இவ்வளவு அக்கிரமம் நடக்கிறது; இறைவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான்?! நாங்கள் அப்படி ஒரு இறைவன் இருக்கிறான் என்று இறை தத்துவத்தையே அவமதிப்பதற்கு பதிலாக, உலகில் இறைவன் இல்லை என்றே கொள்வோம்; உலகிற்கு நன்மை செய்வோம்!!" - இதற்கு முன்னர் கம்யூனிச சித்தாந்தத்தை நான் இவ்வாறு புரிந்து கொள்ள வில்லை!! நீங்கள் ஜி செல்வா எழுதிய இந்த புத்தகத்தை படித்தால், உங்களுக்கு உண்மையான கடவுள் பக்தி இருந்தால், நீங்களும் சிவபெருமானுடனுடன் ஊடல் கொள்வீர்கள் என்பது திண்ணம்!! (இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்; இந்த புத்தகம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!). இங்கு மிகப் பெரிய உண்மை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் கேட்க வேண்டிய கேள்வி: "இந்த உலகில் சிவபெருமான் இருப்பது உண்மை. ஆனாலும், இவ்வளவு அக்கிரமங்கள் நடப்பது ஏன்?!". இந்த கேள்வி தான் உண்மையான ஆன்மீகத்திற்கு அடிப்படை. இங்கு தான் ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. என்னுடைய ஆன்மீகம் இப்படித் தான் ஆரம்பித்தது. Harold Kushner ஹேரால்ட் குஷ்னர் என்பவர் (யூத பாதிரியார்) எழுதிய "Why bad things happen to good people?" - "நல்ல மனிதர்களுக்கே தீமை நிகழ்வது ஏன்?" - என்ற புத்தகத்தில் இருந்து தான் என் ஆன்மீக தேடல் தொடங்கியது. ஆகையால் இதை அனுபவ ரீதியாக தான் சொல்கிறேன். இறைவன் இருந்தும் இந்த உலகம் இப்படி இருக்கிறதா?! இதை எப்படி புரிந்து கொள்வது?! (இந்த புரிதல் ஏற்படுவதற்கு பக்தி, யோகம், ஞானம் என்று பல பாதைகள் உள்ளன! 😄). இந்த கேள்விக்கான முழு விடையை இறைவனை முழுமையாக அடைந்தவர்கள் மட்டுமே முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்!! சிவபெருமானை நான் ஒரு முறை கண்டிருக்கக் கூடும்; ஆனால், நான் இன்னமும் சிவபெருமானை முழுமையாக அடையவில்லை. ஆகையால் தான் ஊடல். ஆகையால், என்னுடையது கம்யூனிசம் அல்ல; இது ஊடல் என்ற அளவில் தான் உள்ளது; நாத்திகம் அல்ல!! கம்யூனிச தோழர்கள் இறைவன் இல்லை என்ற எளிதான, ஆம், தோழர் செல்வாவுக்கும் தான் சொல்கிறேன்; இறைவன் இல்லை என்ற "மிகவும் எளிதான பாதையில்" செல்வதை விட்டுவிட்டு - "இறைவன் இருந்தும் ஏன் இவ்வளவு அக்கிரமம்?!" - என்ற "மிகவும் கடினமான ஆன்மீக பாதையில்" செல்ல அடுத்த பிறவி வரை காத்திருக்க கூடாது என்பதே என் விருப்பம்!! உலகிற்காக பாடுபடுவது உண்மையான ஆன்மீகத்தின் வழியும், எல்லையும் (both journey and destination) கூட. ஆகையால், ஆன்மீகம் என்றால் "இந்த போராட்டங்கள் தேவையில்லை; இறைவன் பார்த்துக் கொள்வான்; உலகைத் துறக்க வேண்டும்" போன்ற முட்டாள்தனமான சனாதன கொள்கைகளை உடையது அல்ல; நமது சைவ சமயத்தில் சிவபெருமானை "தேவர்களுக்கு (உயர் சாதியினர்க்கு) அரியவன்; ஏழைகளின் பங்காளன்" என்று பல இடங்களில் தேவாரத்திலும் திருவாசகத்திலும் பாடியுள்ளனர். ஆகையால், நீங்கள் சிவபெருமானிடம் ஊடலில் தான் இருக்கிறீர்கள்!! (By the way, தீபலட்சுமியின் குழந்தை பள்ளியில் ஆசிரியரிடம் கேட்ட கேள்வியை நாம் அனைவரும் கேட்டால் உலகை திருத்த முடியும்; நல்ல அரசியலை, ஆன்மீகத்தை உருவாக்க முடியும்!!) ***************************************************** என் ஊடலுக்கு காரணம் என்ன? சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் "கோவில் கோவிலாக அலைகிறேன்; அவனை காணவில்லை" என்பது தான்! ஆனால் சிவபெருமானின் காட்சியை பெற, பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்கள் கூட பெரும் தவம் செய்ய வேண்டியிருந்தது; நாமெல்லாம் எம்மாத்திரம்?! (ஏழை பங்காளன் என்ற நம்பிக்கை தான்!!😄). அதாவது பரவாயில்லை; காதலித்தவர்களுக்கு தெரியும் - கொஞ்சும் போது, காதலி அதை தடுத்து கொஞ்ச விடாமல் சிணுங்கினால், அழகு அதிகமாகும்; இன்பமும் அதிகமாகும்; ஆனால், கொஞ்சக் கூட விடாமல் டார்ச்சரே செய்தால்?!😄 இப்படித்தான் யாரோ திருவையாறில் பாட்டுப் பாட விடாமல் தடுத்தார்கள்; இவன் ஒன்றுமே செய்யாமல் "சிவனே" என்று உட்காந்திருக்கிறான்!!😄 இதனால் திருவையாறு சிவனிடம் எனக்கு ஊடல்; அது போல் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு காரணம்!! நேற்று ஈங்கோய்மலை சென்றேன்; மலையில் ஏறவே விடாமல் யாரோ கடும் டார்ச்சர் செய்கிறார்கள் (கர்மம் வைத்திருக்கிறார்கள்)!! இவன் எதுவும் செய்யவில்லை!! (மேலே நல்ல தரிசனம் கிடைத்தது; ஆனாலும் ஏதோ டார்ச்சர்). **************************************************. இது போன்ற ஊடல் என் கற்பனை அல்ல. மாணிக்கவாசகர் பல பாடல்களில் சிவபெருமானை காணவில்லை என்று புலம்பி இருக்கிறார். "ஒரு முறை காட்சி கொடுத்தான்; அப்போதே அவனுடன் சென்றிருக்க வேண்டும்; இப்போது அவனை காணாமல் வருந்துகிறேன்" என்று பல பதிகங்களில் பாடியிருக்கிறார். அதாவது இறைவனை ஒரு முறை கண்டுவிட்டு பிறகு காணமல் தவிப்பது இந்த வகையான ஊடலாக வெளிப்படும். சுந்தரரின் ஊடல்கள் பிரசித்தமானவை. ஒரு முறை ஏதோ கோவிலில் ஏதோ வேண்டியிருக்கிறார்; ஒன்றும் நடக்கவில்லை போலிருக்கிறது; உடனே வழியில் வந்த ஒரு கோவிலுக்கு உள்ளே செல்லக் கூட மனம் வராமல் கோபமாக வெளியிலேயே நின்று விட்டார்!! உள்ளே போய் கும்பிட்டு என்னவாக போகிறது?! கோபத்தில் வெளியில் நின்று கொண்டு "உள்ளே நீ இருக்கிறாயா அல்லது வெறும் கல் மட்டும் தான் இருக்கிறதா?!" என்று கேட்டாராம். உடனே உள்ளிருந்து சிவபெருமானின் பதில் வந்ததாம் - "நாம் இங்கு தான் இருக்கிறோம்; நீர் போகலாம்!!" 😄😄😂 இதை ஒரு பதிகமாக அவர் எழுதியும் வைத்து விட்டார்!! ************************************************ என்னுடைய ஊடல் காரணங்கள் (கம்யூனிச தோழர்களுடையது போலல்லாமல்) சுயநலமானவையே!! 😄😂. காமத்திலிருந்து காப்பாற்றவில்லை என்பது மட்டுமல்ல; இவனுக்கு வாழ்க்கை பட்டு ஒரு உபயோகமும் இல்லை; வேலை இல்லை; வீடு வாசல் இல்லை; பணம் இல்லை; நகை இல்லை; ("ஏன்டா பிச்சைக்காரா, இப்படி செய்கிறாய்? நீ ஒரு முறை பிச்சை எடுத்திருக்கலாம்; அதற்காக நானும் இப்படி வாழ வேண்டுமா?!" என்று ஒரு முறை கேட்டேன். "என்னை பிச்சை எடுக்க வைத்ததால், பிராமண சமூகம் ஆயிரம் வருடங்கள் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது" என்று அதிர்ச்சி தகவல் கொடுத்தான்!!😄) இவனுக்கு ஒரு முறை வாழ்க்கைப் பட்டால் எழு பிறவியும் வாழ்க்கை பட வேண்டும்; இதனால் சுந்தரரை திருமணம் செய்து கொள்ள விடவில்லை!! சம்பந்தரை கூட மணப்பந்தலுடன் எடுத்துச் சென்று விட்டான்!! இது போன்ற காரணங்களாலானது என்னுடைய ஊடல்!! தொடர்ந்து கோவில்களுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன்; என்றாவது அகப்படுவான் என்று நம்பிக்கை!! 😄😂 *************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம


