#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க அதிமுக பொற்றாமரை பகுதிச் செயலாளர் பத்மகுமரேசன் தெரிவித்ததாவது:
தேர்தலில் வெற்றி பெற்ற 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிறைவடையும் தருவாயிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்த மூன்று தொகுதி மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் வலியுறுத்த உள்ளோம். மேலும், திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளையும், அதிமுக ஆட்சியில் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற உறுதியையும் அச்சிட்டு வீடு தோறும் பிரசுரங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


