ShareChat
click to see wallet page
search
*🛐 இணைந்து செபிப்போம்* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #இயேசு #இயேசுவே ஜீவன் 🙏 *ஆண்டவரே இயேசுவே, அகரமும் னகரமும் நானே என்றவரே! உம்மை ஆராதிக்கின்றேன். இருந்தவரும், இருக்கின்றவரும், வரவிருக்கின்றவரும்,எல்லாம் வல்லவரும் நானே என்றவரே! உம்மைப் புகழ்கின்றேன். தூய ஆவியால் என்னை வழிநடத்தும் இறைவா! உமக்கு நன்றி கூறுகின்றேன்.* *“இயேசுக்கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்” என்று, இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கின்றேன். தொடக்கத்தில் கடவுளாகவும், கடவுளிடம் இருந்தவருமான நீர், மனிதராக வந்தீரே! உமக்கு நன்றி கூறுகின்றேன் அப்பா. உமது தந்தையுடன் என்னை இணைத்திட, என்னைத் தகுதியாக்கிட உம்மையே கையளித்தீரே! உமக்கு நன்றி அப்பா. இந்தப் பாவியின் பாவங்களை, குற்றங்களை எல்லாம் மன்னியும். உமது தூய இரத்தம், தூய தண்ணீர் கொண்டு முற்றாகக் கழுவிவிடும்.* *ஆண்டவரே இயேசுவே! என் ஆன்மாவின் பெயரும், விண்ணகத்தின் நூலில் எழுதப்பட்டதாக மாற்றும். “நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன்” என்றவரே! எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை’ என நான் சொல்லிக் கொண்டிருக்கும், என் மடமைத்தனத்தை எனக்கு உணர்த்தும். நீர் என்னைக் காண்பது போல், நான் உம்மைக் காணவும்; உம்மில் ஆர்வம் கொண்டு மனம்மாறி, நிலைவாழ்வை எனதாக்கவும், வழிநடத்த வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்.* நன்றி - தமிழ் ஆன்மீக பணியகம் #இயேசுவே இரட்சிப்பின் வழி
✝️இயேசுவே ஜீவன் - ShareChat